நாட்டாமை

ஒரு டகால்டி ஊரு
அங்க ஒரு பழைய ஆலமரம்
மரத்தடில காரை போன திண்ணை
திண்ணை மேல ஒரு நசுங்கின சொம்பு
அதுல பாதி அளவு தண்ணி
சுத்தி வெத்தல போட்டு துப்பின கறை

பஞ்சாயத்துல பிராது குடுக்க
ஒரு நாளு நம்ம நாட்டாமையே
நேர வந்துட்டாரு

பிராது என்னன்னா, அவரோட சொம்பு காணும்
இப்போ அவரே பிராது, அவரே தீர்ப்பு

நாட்டாமை சொம்ப எடுத்து போய்
பழைய பாத்திர கடையில போட்டு
பேரீச்சம்பழம் வாங்கி ஏப்பம் விட்டுட்டாரு
இத பாத்துட்ட பேச்சிமுத்துவ பட்டணம் போக சொல்லிட்டு
இங்க ஒரு தீர்ப்பு சொன்னார் பாருங்க !!!! சூப்பர் தீர்ப்பு அது

-----------------------------------------------------------------
என்ன தீர்ப்பு சொல்லி இருப்பாருன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்

No comments: