டாடி.... டாடி... இதப் பாருங்களேன். ஆவலாய் நீட்டிய காகிதத்தை வாங்கி படித்தார் அப்பா.யப்பா.... ஒரு இயலாமை பார்வை வீசி விட்டு. அடேய்... பூமி குலுங்கினா அது பூகம்பம். அதுவே வெறுமே பூ குலுங்கினா அது வெறும் ஆட்டம், இல்லைன்னா குலுக்கம்.
ஓகே டாடி, என ஓரமாய் அன்று வைத்த பேப்பர், தற்செயலாய் இளம் வயதில் அவனுக்கு கிடைத்தது.....இன்று அவனுக்கு பிடித்தது, நண்பர் சிலாகித்தார், அச்சிடலாமே அற்புதம் என கவிஞர் கொஞ்சினார். அது என்ன ஒரே வார்த்தை தப்பாகவும், சரியாகவும் எப்படி ஆனது. அதுதான் கவிதை. ??? !!!!
பூவுக்குள் பூகம்பம் என அவன் எழுதியது, நேற்று, இன்று நாளை!!! என புதுப்புது அர்த்தம் தரும்!!!.
அவள் வீட்டு தெருவில் நடந்தேன்.
வீதியெங்கும் அமாவாசை,
என் உள்ளத்திலோ பவுர்ணமி
என்று எடக்கு மடக்காய் எழுதி, ஒன்றன் பின் ஒன்றாய் வார்த்தை கோர்த்து, கவிதை என்ற லேபிள் ஒட்டுவது இளமையில் சாத்தியம்.
காதல் புகுந்த மனதில் தமிழ் புதுப்புனலாய் புறப்படும். மனதில் பூக்கள் புதிதாய் பூக்கும்... அதன் வாசம் எழுதும் கவிதைகளில் மணம் வீசும்... ஏங்க, உங்களுக்கு கவிதை பிடிக்காதா என்று தாங்கள் நினைத்தால், இல்லீங்கோ!!! கவிதைக்கு எதிரி அல்ல நாங்கள். கவிதை தொடங்கும் விதம் பற்றி சும்மா கலாய்த்து பார்த்தோம். அவ்வளவுதான்.
'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்
தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்

நாலு வரியில் மீனவர்களின் வாழ்க்கையை பற்றி சொன்ன போது கண்ணீர் கரை கடக்கும். உள்ளத்தின் மென்மையையும் மேன்மையையும் ஒரு சேர தொடும். மனிதனை புனிதன் ஆக்கும். கவிதை மிக இன்றியமையாத இயல்பு. வாழ்வை கவியாக கொள்வது கண்டிப்பாக சிறக்கும்.
கவிதை போல் காதலும் இயல்பே. காதல் எல்லாம் ஹம்பக் எனும் வாதமோ, காதல் தெய்வீகமானது எனும் கீதமோ கொஞ்சம் அதீதம் கலந்த அமிர்தம். அளவுக்கு மிஞ்சாமல், அக்கறையாய் அனுபவித்தால் அற்புதம். திருமண பந்தம், இறுதி வரை இல்லறம் எனும் இலக்கை சிக்கென பற்றினால் பரம சுகம். சொல்லி புரிதலை விட, அனுபவித்து ரசிப்பதே சால சிறந்தது...
திருமணம். கொஞ்சம் லேட்டா இந்த தொடர் வாசிக்கிறேன். எனக்கு கல்யாணமாகி இரண்டு பிள்ளை இருக்கு என சிந்தித்தாலும், அட, கரெக்ட் டைம் பாஸ். நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறேன் என்றாலோ, இருவரும் படிக்க என எவர்கீரின் அடிப்படை சிலவற்றை உரசிப் பார்ப்போம்.
ஏங்க எதுக்காக கல்யாணம் பண்றீங்க.... என நாசுக்காய் நம்மையே கேட்போமே. ஹும்... ஹும்... என மண்டைய சொறிவோம். அப்பா அம்மா சொல்றாங்க.... பக்கத்து வீட்டு பத்மாக்கா கட்டிக்கிச்சு, அதேன்... அல்லது போங்க சொல்ல வெக்கமா இருக்கு, இதெல்லாமா வெளிய சொல்லுவாக. பாருங்களேன். மேலே சொன்ன எந்த பதிலாவது திருமணம் எனும் முழுப் பரிமாணம் அடக்கியுள்ளதா. சரி அவங்கதான் சொல்லல, நீங்க சொல்லுங்க என்றால்.
கூடி வாழும் மனித இயல்பின் தேவை, சந்ததி படைக்கும் சாஸ்வதம், முதுமைப் பருவத்தில் தளரும் உடல் மற்றும் மனம் சார்பு நிலைக்கென அடிப்படையாய் ஏற்பட்டதே இந்த குடும்ப அல்லது திருமண பந்தம். ஆனால் சொன்னத விட்டுபுட்டு சுரைய புடுக்கிற கதைதான் ஒண்ணுக்கு பாதி நடக்குது.
திருமண பந்தம்; பந்தக்கால் இடும் முன்னர் சில பிரதிக்கனை எடுத்தால் ந
ல்லது. இனி சாவுற வரை நீதான் என் பொண்டாட்டி, நீதாண்டா என் புருஷன் கடைசி வரைக்கும் என உரிமையாய், உறுதியாய் சொல்லும் மனதோடு வலது காலை எடுத்து முன்னால் வைப்போம். மகிழ்ச்சியான நிறைவான இல்லறமே மனித வாழ்வின் ஒரு மகத்தான நோக்கம். ஆனால் முள் முனையில் நடக்கும் காற்றுப் பந்து போல கவனம் குறைந்தால் வெடிக்கும் வாய்ப்பு உண்டு.இறுதி வரை எடுத்த தீர்மானத்தில் இருந்து அணுவளவும் பின் வாங்கக் கூடாது. என்ன பிரச்சனை வந்தாலும். திருமணத்தை கட்டிக் காக்க வழிகள் நிறைய உண்டு. அது பத்தியே ஒரு தொடர் எழுதுற அளவுக்கு மேட்டர் இருக்கு, என்றாலும் ஒன்றிரண்டு மெயின் மேட்டர் இதோ,
1. செருப்பை கழற்றி வீட்டுக்கு வெளியில் வைத்து விட்டு, வெறுங்காலோடு நடப்பது என்பது சாதாரணமான ஒரு பழக்கம். வீட்டுக்குள் மட்டும் என பிரத்யேகமாய் பாத்ரூம் செருப்போடு சரக் புரக் என திரிவது மற்றொரு ரகம். இதில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. ஆனால் முதல் பழக்கம் உள்ள புருஷனும், இரண்டாம் பழக்கம் உள்ள மனைவியும் குடித்தனம் செய்தால், புருஷனுக்கு கொஞ்சம் டெர்ரராக இருக்கும்.
காலை வீணாக்குகிறானே பாவி என மனதினுள் மனைவி கூவுவாள். அந்த நேரம் பார்த்து கொடுத்த காப்பியில் சீனி தூக்கலாய் இருக்கும். புருஷன் சீறுவான். ‘இப்படி சீனிய அள்ளி கொட்டினா, மாசத்துக்கு மூணு மூட்டை வாங்கோணும்’.
ஏற்கனவே மனதுக்குள் கூவிக்கொண்டிருக்கும் பொண்டாட்டி விடுவாளா ‘காலையிலதான வாயில வைக்க முடியல், உன் அப்பன் வீட்டு பணமா போகுதுண்ணீங்க, சரின்னு சீனி போட்டா, ரொம்ப பேசுதீக. நானும் போனா போகுது, போனா போகுதுன்னா ரொம்ப பேசிட்டே போறீயளே........
மக்களே... மக்களின் மக்களே... பெருங்குடி மக்களே, உடன்பிறப்புகளே, உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தங்களே!!! கான்ஷியசாய் உரசும் இது போல் செருப்பு மேட்டர் சில, அன்கான்ஷியசாய் உரச ஓராயிரம் மேட்டர் உண்டு. இரு வேறு சூழலில் வளர்ந்து ஒன்றாய் குப்பை கொட்டும் போது இப்படித்தான். இத்தகைய வேறுபாடை மனதில் கொண்டு கண்கொத்தி பாம்பாய் இருந்தால் குடித்தனம் பொழைக்கும், இல்லையேல், கொறட்டை விடுகிறான் தாங்கல என குடும்ப நல கோர்ட் படியேறி விடும்.
2. டைரக்ட் அட்டாக் அல்லது இன்டைரக்ட் அட்டாக். இரண்டாவது எடக்கு
மடக்கு தத்துவம் இது, நல்லா கேட்டுக்கோங்க. பாடத் தெரிந்த "பாத்ரூம் பாலசுப்ரமணி"க்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு. முதல் இரவில், நம்ம சுப்புணி, சுந்தரம்பாள் கிட்ட’ உனக்கு ஒண்ணு தெரியுமா... ‘( தொண்டையில் கிச்...கிச்.... லேசா கனைத்து கொண்டே... ) நான் ரொம்ப நல்லா பாடுவேன்.ஏகத்துக்கும் டென்ஷனான புதுப்பொண்ணு அப்படியான்னுச்சு. அதோட விட்டிருக்கலாம். பாடட்டா என "சுப்பிரமணி" கீச்சிட, வேற வழி,விதி வலிது, குனிஞ்ச தல நிமிரவே இல்ல, ஒரு லேசான தலையாட்ட, அது போதுமே, நம்மாளுக்கு, உடனே பாட தொடங்கினார்.... "அம்மாடி, ஆத்தாடி, உன்ன எனக்கு தர்றியாடி"....... ஏற்கனவே டென்ஷன், இதுல உச்சஸ்தாயியில் இந்த டகால்டி பாட்டு வேற. பாட்டு தொண்டையில் சிக்கிக்கிட்டு பாடாப் படுத்தியிருச்சு.
இதுவே நம்ம சுப்புணி தம்பி, "உஷார் உக்கிரசேனன்" கல்யாணம் எல்லாம் முடிஞ்சு ஒரு வாரம் ஓடிப் போச்சு. லேசாப் பாடத் தெரிஞ்சாலும் கம்முனு இருந்திட்டான். தற்செயலா யாரோ உன் புருஷன் பாட்டு எப்படின்னாளாம். திடுக்கிட்ட திருமதி ‘அவர் பாடுவாரா, சொல்லவே இல்ல’ என அதிசயித்து விட்டு. ‘ஏண்ணா பாடுவேளான்னான்னு’ கேக்க, வெக்கத்தில் நெளிஞ்சு, சும்மா பாத்ரூம்ல சுமாரா பாடுவேன், “எக்கோ”வுல நல்லா இருக்கும் என சொல்லி விட்டு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பின்னிருந்து அணைத்து மெல்லிய குரலில்
கிசுகிசுக்கும் குரலில் “நீல வான ஓடையில்” .... என்று ரம்மியமாக தொண்டையை திறந்தார். நகைச்சுவையாய் சொன்னாலும் மேட்டர் இதுதான்.நாமே சொல்வதை விட அடுத்தவர் சொல்லி நம் சில்லறை திறமைகளை நாம் அடக்கி வாசிப்பது சுவாரசியம். ஒப்பனா பேசுறேன் பேர்வழி என்று கட்டியவளை கழுத்துறுக்காமல் பொறுமையாய் குடித்தனம் செய்யலாம். கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போறது.
3. எங்க அப்பா அம்மா தெய்வம். நீ என்ன (புருஷன) மதிக்கலேன்னா கூட பரவாயில்ல, நான் பொறுத்துக்குவேன் என கண்டிஷன் போடும் "கறார் கண்ணுசாமி", தன் மாமனார் மாமியாரை மதிப்பாரா??? சந்தேகந்தேன். பாருங்களேன் இவர் அவரின் அப்பா அம்மாவை மதிக்க மாட்டார், அவர் இவர் அப்பா அம்மாவை தொழ வேண்டும்... எப்புடி.... சொல்யூஷன் என்னன்னா, நம்ம "ஜீசஸ் கிரைஸ்ட்" சொன்னது தான். ‘உனக்கு அயலான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ அதை நீ அவனுக்கு செய்’.
அப்போ இரண்டாவது தத்துவம், மூணாவதையும் மிக்ஸ் பண்ணினா, நம்ம அப்பா அம்மாவ மதிக்கணும்னா சத்தமில்லாம ஒண்ணும் பேசாம நம்ம மாமனார், மாமியார உளமாற மதித்து விடல். என்ன செய்யும் நம்ம பொண்டாட்டி, ஏட்டிக்கு போட்டிதான. கண்டிஷனா நம்ம பெத்தவங்கள மதிக்கும்.
4. வாழ்க்கையின் ஆணி வேரே ஒருவரை ஒருவர் புரிதலிலும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையிலும் இருக்கிறது...இந்த மனப்பான்மை கணவன், மனைவியரிடையே அதிகமானால், குடும்பம் என்ற ஆணிவேர் பலப்பட்டு, நெடு நாட்கள் ஆலமரம் போல் தழைக்க வழிவகுக்கும்..
இது போன்று விரிசல் கண்ட பல குடும்பங்கள் தங்கள் வாழ்வை தொலைத்து விட்டு, ஆங்காங்கே நீதிமன்றங்களில் காணப்படுகிறது...இதற்கு காரணம் இருவரின் மன மன்றங்களிலும் தோன்றும் அந்த ஈகோ என்ற ஒரு விஷயம்... இந்த ஒரு விஷயத்தை தொலைத்தால், பின்னாளில் நாம் வாழ்வை தொலைக்க வேண்டியதில்லை... சாய்ஸ் நம்மிடம்தான். சிறு புரிதலில் வாழ்வை பெறுவது நல்லதா... இல்லை ஒரு சிறிய ஈகோவினால், வாழ்வை இழப்பது நல்லதா என்பதை சிந்தனை செய்வோம்... நினைவில் நிறுத்துவோம்..
அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உரசல்கள் அவ்வப்போதே பேசி தீர்க்கப்படும் போது, அந்த விரிசல்கள் பெரிதாகாமல் தடுக்கப்படுகிறது... அதை விடுத்து, அந்த உரசல்களை இருவரும் பெரிது படுத்தும்போது, அதுவே வாழ்வின் விரிசலுக்கு வழி வகுக்கிறது...
"நான் பெரிசும் இல்ல, நீ சிறிசும் இல்ல" எனும் சின்ன மந்திரத்தை புரிந்து, ஒவ்வொருவரும் வாழ்வின் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தால் துன்பம் நம்மை என்றும் அணுகுவதில்லை...
(ஆர்.கோபி / லாரன்ஸ்)
(முரசின் ஓசை இன்னும் சில பகுதிகளில் நிறையும்....... அதன் அதிர்வு நம்மிடையே தொடரும்)




















சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற ("தல" தேர்தல் அறிக்கை) பாணியில் சொல்லி அதை செய்தும் விட்டது. 9999, அதாங்க, 2009 செப்டம்பர் 9ம் தேதி, 9 மணிக்கு ரயில் விடுவோம் என சொன்ன துபாய் அரசு சொன்ன தேதியில் சுக்கு புக்கு ரயில் விட்டு அமர்களப் படுத்தி விட்டார்கள்.



