தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் "குஜய்" புதுக்கட்சி


நடிகர் "குஜய்" கட்சி ஆரம்பிக்க போவதாக செய்தி வந்தவுடன் கீபாலபுரம், மைலாபுரம், கீயஸ் கார்டன், கிஜயகாந்த் அலுவலகம், பீரரசு அலுவலகம் எல்லாம் தீப்பற்றி கொள்கிறது...

"முத்தமிழ் காவலர் வலைஞர்" தன் இரு கரங்களான போர்காட்டாரையும், பொறைகிருகனையும் அலைபேசியில் மிக மிக அவசரம் என்று அழைக்கிறார்...... அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் கீபாலபுரத்தில் ஆஜர்......

வலைஞர் : என்னாய்யா, நாம இப்போதான் ஒருவழியா "சூப்பர் ஸ்டார் குஜினி"ய அரசியல் பேசக்கூடாதுன்னு வாய அடச்சு வச்சு இருக்கோம்.... அதுக்குள்ள, இது என்னய்யா புது தலைவலி.....

போர்காட்டார் : தலைவா.... அவன் கெடக்கான் சின்ன பய..... இங்கன கூட்டியாந்து, நம்ம மணிபர்ஸ் வாயர் சிரிக்கறத பாக்க சொன்னா போதும்..... பயந்து போயி, ஒரு மாசம் ஆஸ்பத்திரில படுத்துடுவான்.......

பொறைகிருகன் : ஆமாம் தலைவரே..... என்று சொல்லி தன் மணிபர்ஸ் வாயை திறந்து சிரிக்க.... போர்காட்டாரே ஒரு நிமிடம் ஆடி போய்விடுகிறார்.....

போர்காட்டார் : யோவ்... சும்மா இருய்யா..... எனக்கே நீ சிரிக்கறத பாத்தா, கதிகலங்குது..... "குஜய்" என்ன பாடுபட போறானோ? தலைவா, நான் அந்த சின்ன பையன அலைபேசில நீங்க கூப்பிடறதா சொல்லி கூப்பிடறேன்..... இங்கன வச்சு, அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகம் எல்லாம் பண்ணி, காணிக்கை குடுத்து அனுப்பி வைப்போம்........

பயலலிதா : நீங்க எல்லாம், என்ன பண்ணி கிழிக்கறீங்க.... ஆட்சிதான் இல்ல... இந்த மாதிரி சின்ன பிஸ்கோத்து பசங்க மேட்டர கூட கண்ட்ரோல்-ல வைக்க முடியலியா?

பயலலிதாவின் உக்கிர அர்ச்சனை வாங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" எல்லாம் கிலியடித்து பம்முகிறார்கள்...... போயிஎன்ன ஏதுன்னு பாத்து, அந்த பையன இங்க கூட்டிட்டு வாங்க, கொஞ்சம் வேப்பிலை அடிச்சு, தாயத்து கட்டி குங்குமம் குடுப்போம்......

பூமதாஸ் : என்ன கிழிக்கரீங்கய்யா.... ஒவ்வொரு நடிகன், அரசியலுக்கு வரும் போதும், நாம கஷ்டப்பட்டு, அவங்க நடிச்ச படப்பொட்டிய தூக்கி போய், கொளுத்தறதும்..... அவனுங்கள அடிக்கறதும் .... இத இப்போவே, முடிச்சாகணும்..... என்ன பண்ற... அவன் நடிச்ச படம் ஏதாவது தியேட்டர்ல ஓடுச்சுன்னா, அங்க போய் ரகளை பண்ணுங்க.... முடிஞ்சா, அந்த படப்பொட்டிய எடுத்து, ரோட்டுல போட்டு தீ வச்சு கொளுத்துங்க...

கிஜயகாந்த் : ஏயி.... நீ என்ன பெரிய இவனா..... நான் மொதல்ல ஒரு படத்துல ஒனக்கு நடிச்சு குடுக்கலேன்னா, நீ இப்போ, இவ்ளோ பெரிய ஆளா ஆயிருப்பியா?? மவனே.... வந்த வழியே ஓடிடு..... இல்ல.... நடக்கறதே வேற ... என்று "குஜய்" வந்தால் பேச வேண்டிய டயலாக்கை ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறார்...

கண்கள் கோவை பழமாக சிவக்க ஆரம்பிக்கிறது.... கை நேராக, டீப்பாயில் இருக்கும் "டாஸ்மாக்" சமாசாரத்தை எடுக்கிறது........ மச்சான் "கிதீஷ்" கிலியடித்து பார்த்து கொண்டிருக்கிறார்.. ஆஹா, இன்னிக்கி ஐயனாரு மலையேற போறாருடோய்.....

பீரரசு : வரேன்னு சொல்றவன் எல்லாம் வரது இல்ல... ஆனா, நீங்க வரவே மாட்டேங்கன்னு நெனச்சேன். வந்துட்டீங்க ..... என்னோட ஆபீசுக்கும், அப்படியே அரசியலுக்கும்... என்று ஒரு பெரிய பிட் போடுகிறார்........... இந்த டயலாக் நம்ம "குஜய்" வந்தா எடுபடுமா? என்று தன் எடுபிடிகளிடம் கேட்கிறார்..... அண்ணே, இது சூப்பர் டயலாக்னே என்று கோரசாக கும்மியடிக்கிறார்கள்..... நைட் கிடைக்கப்போகும் சரக்கை மனதில் வைத்து......

குஜய் : ன்னாவ்...... சார்.... இல்ல.... அய்யா, இதுதான் சரி என்று சொல்லிக்கொண்டே கீபாலபுரம் நுழைகிறார்......

இளைய தமிழே வருக.....இந்தியாவை காக்க வருக என்ற போர்ட் தாங்கி பிடித்தபடி, போர்காட்டார் வீட்டு வாசலில் நிற்கிறார்.......

வாங்க தம்பி.... நீங்களும் உங்கள் சுற்றமும் நலமா..... என்று உப்பு காகிதத்தை தகரத்தில் தேய்த்த குரல் கேட்டு, அந்த திசையை நோக்கி வணக்கம் போடுகிறார்....

வலைஞர் : தம்பி.... பசங்க இப்போதான் உங்க அரசியல் முடிவு பத்தி, என் கிட்ட சொன்னாங்க....... ஒங்கள மாதிரி இளைஞர்கள் தான் இப்போ, அரசியலுக்கு தேவை ...... ஏன், கஷ்டப்பட்டு புது கட்சி தொடங்கணும்... நம்ம கட்சி தான் இருக்கே, ஒங்கள மாதிரி, அரசியல் ஆசை உள்ள இளைஞர்களுக்கு...... என்கிறார்.

குஜய் : அய்யா..... ஒங்களுக்கு தெரியாதது இல்ல.... வரிசையா.... கூட்ஸ் வண்டி கணக்கா, என்னோட மூணு படமும் படுத்துடுச்சு....... அதான், ஒரு அரசியல் பில்ட்-அப் குடுத்து நம்ம சினிமா மார்கெட் சரி பண்ணலாம்னு.....

வலைஞர் : இதுக்கு ஏன், இவ்ளோ கஷ்டபடனும்...... அடுத்த படத்த, நானே "விதியநிதி" கிட்ட சொல்லி தயாரிக்க சொல்றேன்.... நானே கதை, வசனம் எழுதறேன்..... பெரிய பட்ஜெட்ல தயாரிச்சுடுவோம்...... "புலியின் மீசை" படம் பேரு... எப்படி........ அப்படியே "விரச ஒலி"ல ஒரு கவிதை எழுதி இந்த படத்த மக்களுக்கு அறிமுகம் பண்ணிடுவோம் சரிதானே என்று கரகரக்கிறார்...... போர்காட்டாரும், பொறைகிருகனும் ஆமோதித்து ஆமாம் தலைவரே, அப்படியே பண்ணிடுவோம் என்று கோரசாக கூவுகிறார்கள்....

குஜய் : பெரிய பட்ஜெட் ஓகே...... விதியநிதி ஓகே.... இப்போதான் "பில்லு" படுத்துச்சு.... அடுத்த படமும் பப்படமா .... இதுல, தாத்தா கதை வசனமா? நான் எஸ்கேப் என்று கதறியபடி, காம்பவுண்ட் சுவர் தாவி ஓடுகிறார்....... வழியில், ஒரு வாகனம் அவரை மடக்கி "கீயஸ் கார்டன்" தூக்கி போகிறது.....

கீயஸ் கார்டனில் நுழைந்த வண்டி, நடிகர் "குஜயை" கீழே இறக்கி விடுகிறது. "தண்ணீர்செல்வம்" "குஜயை" எழுப்பி பயலலிதா முன்பு நிறுத்துகிறார்.

திருதிருவென முழித்த "குஜய்" பயலலிதாவை பார்த்து, வெள்ளை யானை, பெரிய வெள்ளை யானை என்று அலறுகிறார்......

பயலலிதா முகம், பரங்கி பழத்தை போல சிவக்கிறது... இந்த மரியாதை தெரியாத சின்ன பையனை உடனே இந்த தோட்டத்துல இருந்து அனுப்பிடுங்க, யு ஆல் கேன் கோ அவுட் என்று குரல் கேட்டதும், அந்த அனலில் பொசுங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" எல்லாம் தலை தெறிக்க ஓடுகிறார்கள்......

கிஜயகாந்த், பீரரசுடன் ஒரு வண்டியில் ஏறி, "குஜய்" எங்கே என்று தேடுகிறார்.. நாம ரெண்டு பெரும் சேர்ந்து "குஜய்" ஒரு வழி பண்ணனும்பா...... என்று சொல்லிவிட்டு..... திடீரென்று டேய் பரதேசி... டாஸ்மாக் கடைய பாத்துட்டும் வண்டிய நிறுத்தாம போனாக்க என்னடா அர்த்தம் என்று தனது வலது உருட்டுக்கட்டையை (வலது கையைத்தான்) "பீரரசு" நோக்கி வீசுகிறார்... ஓடும் வண்டியிலிருந்து "பீரரசு" நடுரோட்டில் தாவுகிறார்..... கிஜயகாந்த் வண்டி டாஸ்மாக் கடையருகே சடன் பிரேக் போடுகிறது.

எல்லோரும் "குஜய்" எங்கிருக்கிறார் என்று வலை போட்டு தேடி கொண்டிருக்க... அவரோ...... அவரின் புது பட நாயகியுடன் ஹைதராபாத் ராமோஜிராவ் கார்டனில் ........ கொண்டிருந்தார் (தப்பா எதுவும் நினைக்காதீங்க, டூயட் பாடி கொண்டிருந்தார்)............

மச்சி மச்சி மச்சி
நான் தொடங்க போறேன் கட்சி....

இச்சு இச்சு இச்சு
ஒன் கன்னத்த தாடி பிச்சு

(இது டூயட்டா, இல்ல கட்சியின் கொள்கை பாடலா என்iறு யாருக்கும் தெரியாது, பாடலை எழுதிய பீரரசு உட்பட...) ...

இந்தோனேசிய ஒபன் - இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் சாம்பியன்





நாம் எல்லோரும், 20/20 உலக கோப்பை கிரிக்கெட் பற்றியும், இந்தியாவின் பொறுப்பற்ற ஆட்டத்தால் சூப்பர்-8 கட்டத்தில், ஒரு போட்டி கூட வெற்றி பெறாமல் இந்தியா போட்டியை விட்டு வெளியேறிய நிலையையும், பாகிஸ்தானுக்கு பதில் இலங்கையே கோப்பையை வென்றிருக்கலாம் போன்ற விஷயங்களையும் விவாதிக்கும் இந்த வேளையில், இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஒரு சூப்பர் உலக சாதனையை செய்துள்ளார். அது இந்தோனேசிய ஒபன் சாம்பியன் ஆனது.

முதலில் அவருக்கு, நம் வாழ்த்துக்கள். இது போல், மேலும் பல சாதனைகள் சாய்னா நெஹ்வால் படைக்க நாம் அனைவரும் ஒன்றுகூடி அவரை வாழ்த்துவோம்.

இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நெஹ்வால், இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை லின் வாங்கை வீழ்த்தி அருமையான வெற்றியைப் பெற்றுள்ளார் சாய்னா.

இன்று நடந்த இறுதிப் போட்டியில், சாய்னா, 12-21, 21-18, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

49 நிமிடங்களில் இந்தப் போட்டி முடிவடைந்தது.

இதுவரை உலக அளவில் எந்த வீராங்கனையும் இவ்வளவு சிறப்பாக ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்னாவிடம் தோல்வியுற்ற வாங் உலக அளவில் 3வது ரேங்க்கில் இருப்பவர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் உலக அளவில் 8வது ரேங்க்கில் இருக்கிறார்.

அவருக்கு மீண்டும் ஒரு முறை நம் மனமாந்த வாழ்த்துக்கள்.

(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)

(டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் போல் சிறப்பாக ஆடி, இந்தியாவுக்கு பல வெற்றிகளை தேடி தரவேண்டும் என்பதே விளையாட்டில் ஆர்வமுள்ள நம் அனைவரின் ஆசையும்............)

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 5)

பளபளக்கும் கிரானைட் தரை. தயங்கும் கால்களோடு அந்த குடியிருப்பில் உள் நுழைந்து சென்றால் லிப்ட் தானியங்கி கதவு எங்களை அனுமதித்து மூடி கொண்டது. அறையின் வாயிலில் குர்ரென்று ஒரு சத்தம். குளு குளு பெட்டியில் இருந்து (கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து).

பூட்டிய கதவின் அருகில் ஒரு கடையே வைக்கும் அளவுக்கு செருப்புக்கள். இடம் இல்லாதது ஒரு காரணம் என்றாலும், வெளியில் போட்ட செருப்பு காணாமல் போகாததன் நற்பண்பும் குறிக்கப்பட வேண்டும். கதவு திறந்ததும் குளிர் காற்றோடு குப்பென்று ஒரு மணம். நல்லதா கெட்டதா என்று இனம் பிரிக்க முடியாத மணம். புழுங்கிய துணியின் மற்றும் வியர்வையின் கூட்டணியில் துர்வாடை, செண்ட் போலே நறுமணம் என்று கலவையான மணம்.

சிறிய அறை. சுமாராக பத்துக்கு பத்து இருக்கலாம். அதில் மேலும் கீழுமாய் அடுக்கி வைத்த கட்டில்கள். அட, இது என்ன கலாட்டா. படுப்பது மட்டுமே போதுமா. வீடு என்றால் படுக்க மட்டுமா, உட்கார வேண்டாமா, சமைக்க வேண்டாமா, படிக்க வேண்டாமா, ஊரில் டென்ட் கொட்டகையில் பார்த்த அடிமை பெண் படம் ஞாபகம் வந்து சென்றது.

நிமிர்ந்து நிற்க முடியாமல் படுத்து கொண்டோ குனிந்து உட்காந்து கொண்டோ இருக்கலாம். இப்படி முதுகு எலும்பை தொலைத்து கூனி குறுகவா நாம் அந்நிய நாடு வந்தோம். சுய புலம்பலை பின்னுக்கு தள்ளி விட்டு மேலே தொடர்வோம்.

அறைக்குள் ஒரு பார்வை. ஐந்து-ஆறு ஜீவன்கள் அந்த அறைக்குள்ளே. சில பேர்கள் போர்வைக்குள் காணாமல் போயிருந்தார்கள். அதிர்ந்து பேசமால் படுத்து கொண்டு தொலைக்காட்சிகளில் ஓடும் வடிவேல் காமெடி சி.டி நூறு முறைக்கும் மேலாக பார்த்து இருந்தாலும் இப்போது தான் புதுசாய் பார்ப்பது போல் சுவாரசியமாக சிரித்து கொண்டு இருந்தார்கள். பின்னே, இங்கே இவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கே இது மட்டும்தானே?

ஒரு கட்டில் தான் நம் ராஜாங்கம். காலுக்கடியில் அமுத்தி அடுக்கிய பெட்டியிலே தான் நம் உடைமைகள். அவ்வளவு தான் அந்நிய தேச வாழ்க்கை.

இந்த ஐந்து-ஆறு ஜீவன்கள் இருக்கும் அறைக்கு ஒரே குளியல் அறை. இதிலே விஷேசம் இப்போது இல்லை. விடியற்காலையில் தான். ஏறக்குறைய எல்லோரும் ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பதால் காலை கடன் முடித்து குளிக்க ஒவொருவருக்கும் கால அட்டவணை கொடுக்கப்படும். ரூமின் தாதா கடைசியில் குளிப்பார். அப்புராணி முதலில் குளிப்பான். அப்புராணிக்கு கொடுத்திருக்கும் நேரம் காலை நாலே முக்கால் முதல் ஐந்து வரை. குளிப்பதற்கு கொடுக்கப்பட்ட அந்த நேரத்திற்குள் சுறுசுறுப்பாய் எழுந்து குளித்து வெளியே வந்த பின் என்ன செய்ய. சரி மிச்சம் இருக்கும் தூக்கத்தை உட்கார்ந்தோ சரிந்து படுத்தோ சரி கட்ட வேண்டும்.

இது ஐந்து-ஆறு பேர் உள்ள அறைக்கு. சரி பல்லாயிரக் கணக்கில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கொண்ட அமைப்பில் பொது கழிப்பிடங்கள் உண்டு. இங்கு நடப்பது உலக மகா அநியாயம். பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்திலிருந்து புறப்பட்டு, பல்வேறு திசைகளில் இருக்கும் பணியிடங்களை (வேலை செய்யும் இடம்) அடைய வேண்டும். அதற்கு, இவர்கள் தங்கள் குளிக்கும் அட்டவணையை விடியற்காலை நான்கு மணி முதல் போட வேண்டும்.

இந்த இருப்பிடத்தில் இருந்து செல்லும் பெரும்பாலானோர் தங்கள் வேலையின் பொருட்டு அடித்து பிரித்து எடுக்கும் வெயிலின் கொடுமையை அனுபவிக்க வேண்டும். இந்த வருடம் 60 டிகிரி செல்ஷியஸ் அளவு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று அமீரக வானிலை மையம் கணித்துள்ளது. . மத்திய கிழக்கு நாடுகளில் பீக் சம்மர் எனப்படுவது ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள்தான். (இந்த வெயிற் கொடுமையில் இருந்து அனைத்து தொழிலாளர்களையும் காப்பாற்று என்று அந்த கடவுளை மனமார வேண்டுகிறேன்).

ஒரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக பகல் 12.30 - 3.௦௦00 மணி வரை கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்று அமீரகம் ஒரு சட்டமே இயற்றியுள்ளது. மீறும் கம்பெனிகள் மீது பெரும் தொகை அபராதமாக விதிக்கும் சட்டமும் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் சில கம்பெனிகளின் விதிமீறல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அபராதம் செலுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.

எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் இவர்களுக்கு மாதம் சேமிப்பாக மிஞ்சுவது என்னவோ 5-6 ஆறாயிரம் மட்டுமே. நான் அறிந்து, தன் பெண்ணின் திருமணத்திற்கு கூட போகாத தொழிலாளர்களை அறிந்திருக்கிறேன்.
அவரை கேட்டபோது, நான் ஊர் போய் வரும் செலவை பணமாக அனுப்பினால், ஊரில் வீட்டார் அந்த பணத்தை தன பெண்ணின் திருமண செலவுக்கு வைத்து கொள்வதாக கூறியதால், இவர் செல்லவில்லை என்று கூறினார். என் மனம் கனத்து, கண்ணில் தன்னிச்சையாக, கண்ணீர் வழிந்தது.

சில ஆயிரம் ரூபாய் சேமிப்பிற்காக இப்படி எத்தனை எத்தனை பேர்கள், தங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உள்ளார்கள், சிந்தி கொண்டிருக்கிறார்கள்......... நான் முன்னமே சொல்லியது போல், இங்குள்ள அனைத்து பளபளக்கும் கண்ணாடி கோபுரங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பின்னாலும், பல லட்சகணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பும், ரத்தமும், வேர்வையும் உள்ளன......

இப்போது மறுபடியும் குளியல் எபிசோடுக்கு வருவோம்..... நண்பர் சென்று குளித்த பின் நாம் செல்லலாம். ஒரு வகையில் பஸ்சுக்கு சீட் போட தோள் துண்டு உதவுவது போலே. நண்பர் குளித்து வந்த அறையில் நாம் நுழையலாம். வாய்ப்பு கிடைக்க வில்லை என்றாலோ அசதி மிஞ்சியதால் தூங்கி விட்டாலோ மாலை குளியல் தான்.

சரி, இப்படி ஐந்து-ஆறு பேர் தங்கும் இந்த சிறிய புறா கூண்டுக்கு வாடகை மட்டும் வானளவு. சம்பாதிக்கும் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் தொடக்கி அறுபது சதவீகிதம் வரை கொடுக்கும் அவல நிலை. இந்த கூத்து அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளில் மட்டுமே... பஹ்ரைன், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் வாடகை குறைவே. ஊரு உலகத்திலெல்லாம் சர்வதேச அரங்கிலே முப்பதுக்கும் கிழே உள்ள வாடகை செலவு இங்கு மட்டும் என் இவ்வளவு அதிகம். அதற்கும் ஒரு சூட்சமம் உண்டு.

உள்ளூர் பிரஜைகளை காப்பாத்த இந்த ஊர் அரசாங்கம் உண்டாகிய முறை இது. ஊருக்குள்ளே நிலமோ வீடோ வாங்கும் உரிமை இந்த ஊர் பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு. நம்மை போல் வெளி தேசத்தவர் வாங்க என்று ஊருக்கு ஒதுக்குபுறமாய் சில ப்ரீ சோன்ஸ் மட்டுமே. அங்கும் நம்மால் தொண்ணூத்தி ஒன்பது வருட லீசுக்கு தான் வாங்க முடியும். அதுவும் வாங்கிய சொத்தை வாரிசுக்கு கொடுக்க முடியாது. இதை செய்வதால் நாம் என்ன சம்பாதித்தாலும் உள்ளூர் ஆள் ஓடாமல் உழைக்காமல் நாம் சம்பாதித்ததையே புடுங்கி கொள்ளும் புத்திசாலித்தனம்.

பெரிதாக புலம்பாமல் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால் இது போலே சில சட்டங்கள் இல்லை என்றால் இருபதுக்கும் குறைவான சதவிகிதத்தில் உள்ள உள்ளூர் ஆட்களை எப்படி பாதுகாப்பது. எண்ணிகையில் அதிகம் உள்ள அந்நிய தேசத்தார் இவர்களை நாட்டை விட்டு விரட்டி விடும் சூழலும் சிந்திக்க வேண்டும் அல்லவா.

வீட்டில் பெட்டி படுக்கை வைத்து விட்டு கிள்ளும் வயிறின் சீற்றம் அடக்க உணவு விடுதி வரை செல்லலாம் வாருங்கள்.

உலகின் உள்ள அதனை உணவும் கிடைக்கும். அரேபிய ஐரோபிய இந்திய இன்னும் பிற நாற்றம் பிடித்த என்று எல்லாம் கிடைக்கும்.

இந்திய உணவுகளிலே சேர நாடு உணவு முறை தான் இங்கே பிரபலம். நம் ஊரில் காணமல் போன அத்தனை மலையாளியும் இங்கே வந்து உணவுக்கடை (CAFETERIA) தொடங்கினார்களோ என்று தோன்றும். சல்லிசான விலையில் விரைவான சேவையில் கொஞ்சம் சுத்த குறைவோடு உணவு கிடைக்கும்.

ஒரு சிறிய தட்டில் மீன் பொறித்து பெயருக்கு ஒரு காய்கறி, கூட்டு, ஊறுகாய், ஒரு பப்படம். இது யாவருக்கும் பொது. பெரிய தட்டில் நிறைத்து சோறு. அதில் தான் பாகுபாடு.

உணவு உட்கொள்ள சென்றால் உங்களுக்கு இரண்டே சாய்ஸ் தான். மோட்டா அல்லது பாரிக். வட மொழியில் புழுங்கல் அரிசியும் பச்சை அரிசியையும் குறிக்கும் சொற்பதங்கள் தான் லோக்கல் மெனு.

புலால் உண்ணாத சைவ சாப்பாட்டுக்கு பெரிய மரியாதை இந்த மலையாளி கடைகளில் இருப்பதில்லை. சைவம் சாப்பிடுபவர்களின் ஒரே புகலிடம் நம் ஊருக்கு பரிச்சயமான சரவண பவன்களும் அன்னபூர்னாக்களுமே. விலை கொஞ்சம் அதிகம். இததனை விலை கொடுத்து வாங்கிய உணவு வயிற்றில் சங்கடமே ஏற்படுத்தும்.

(இன்னும் வரும்........................)