2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2)

கலைத்துறைக்கு அதுவும் திரைத்துறைக்கு நம் தமிழ் நெஞ்சத்தில் சீரிய சிம்மாசனம் உண்டு. கடந்து வந்த வருட்த்தின் சில துளிகளை பார்ப்போமே...

· ஆஸ்கார் சாதனை: இசைப் புயல் ரகுமான், ஒலி மேதை ரசூல் பூக்குட்டி என களம் இறங்கி நம் ”ஆஸ்கார் விருது” ஏக்கத்தை தணித்தார்கள். 52 வருடங்களாய், முட்டி மோதி கிடைக்காத்து, இந்த வருடம் தென்னகத்துக்கு சொந்தமாக்கி கொண்ட நிகழ்வு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது... நாம் விழாவில் எட்டிப்பார்த்து கொட்டாவி விட்ட காலம் போய், இப்போது நம் கதவு தட்டி ஆஸ்கார் விருது தரும் காலம் கனிந்து வந்திருக்கிறது.

· இங்கிலாந்தின் மிக பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான “பிக் பிரதர்” போட்டியில் பல்வேறு நாட்டை சேர்ந்த பல போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, வெற்றி பெற்று லண்டன் மக்களின் அங்கீகாரத்தை தனதாக்கி நம் எல்லோரையும் பெருமை பட வைத்தார் ஷில்பா ஷெட்டி... இந்த சாதனை படைத்த கையோடு திருமணம் செய்து கொண்டார்...

* அக்கட பூமியில் வெளிவந்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்த “மகதீரா” என்ற சரித்திர படத்திற்கு நல்ல வசூல் மகசூல்... ஒச்சாயி பாட்டி காலத்து ஓராயிரம் முறை கேட்ட புராண கதையை லேட்டஸ்ட் க்ராஃபிக்ஸில் குழைத்து கொடுத்து பார்ப்பவர்களை பரவசப்படுத்திய ”அருந்ததி” என்ற படமும் பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையை கிளப்பியது... கூடவே அதன் தமிழ் டப்பிங் வடிவம் தமிழ்நாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியது...

இவ்விட சேர நாட்டில் மம்மூட்டி நடிப்பில், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான “பழசிராஜா” படம் வசூலில் தூள் கிளப்பியது... இதில் சரத்குமாரின் வேடமும், நடிப்பும் நன்றாக பேசப்பட்டது... ஆனால், அது அவரின் தமிழ்ப்படமான “ஜக்குபாய்” ரிலீஸுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை... (இத்தனைக்கும் சூப்பரா இருக்காம்.... ஆந்தையார், கழுகார் நியூஸுங்கோ.....)

ஹாலிவுட்டில் தயாராகி வசூல் சாதனை படைத்த, படைத்து கொண்டிருக்கும் ”2012” மற்றும் ஜேம்ஸ் கேமரூனின் மெகா பட்ஜெட் படம் ”அவதார்” வெளியானது இந்த 2009 ஆண்டில்தான்... அதிலும் அவதார் படம் மெகா வசூலிலும், விஷுவலாக 3D யிலும் கலக்குகிறது.... ”அவதார்” படத்தின் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் யுவராஜ்சிங் போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து விட்டார் என்கிறது உலக பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட்....

* குறைந்த பட்ஜெட்டில், எளிமையான திரைவடிவத்தில், தரத்தில் உயர்ந்து வெளிவந்த படங்கள் சில பட்டையை கிளப்பின. இத.... இத .... இதத்தான் நாங்க எதிர்பார்த்த்தோம் என சினிமா ரசிகன் வசூலில் வக்கணையாச் சொன்னார்கள். உன்னைப் போல் ஒருவன், பசங்க, நாடோடிகள் .............. படங்களை பார்த்து...

* என்னைப்பாரு, என் பட்ஜெட்ட பாரு, என் படத்த பாரு, வசூல்ல பிச்சிக்கும் பாரு”, என டகால்டி விட்டு, மிகுந்த பொருட் செலவில் தயாரான “வில்லு” “குருவி”, “தோரணை”, “கந்தசாமி” ”வேட்டைக்காரன்” போன்ற எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பிச்சுக்கும் என களத்தில் நின்றவர்கள், அடிச்ச ஆடிக்காத்துல உச்சி குடுமி பிச்சிக்கிட்டு போச்சு. படங்கள் பப்பரப்ப என்று சொல்லி பப்படம் ஆனது. எதுவும்னா, அட மெய்யாலுமே எதுவுமே மிஞ்சலியாமே... அதிலும், ஒரு படத்தோட நடிகர் படம் ரிலீஸான 3வது நாளே படம் இமாலய வெற்றி, இதுவரை எந்த படமும் காணாத வெற்றி என்று பத்திரிக்கைகள கூப்பிட்டு சொன்னது, கோவில் படத்தில் வடிவேல் சிலம்ப சண்டையில் வெற்றி பெற்றதாக சொன்னதை போல் இருந்தது... இந்த நகைச்சுவை காட்சி பிரமாதமாக இருக்கும்... நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழுங்கள்... அப்போது, அந்த நடிகர் சொன்னதையும் நினைத்து பார்த்தால், டபுள் கிச்சு கிச்சு உத்தரவாதம்...

அயன், ஆதவன் என்ற இரண்டு படங்களிலும் வெற்றி பெற்று ஒப்பனிங் ஓவரில் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் விளாசிய வீரேந்திர சேவாக் போல், வெற்றி வீரனாய் வலம் வருகிறார் சிவகுமாரின் மூத்த புதல்வர் சரவணன் அலையஸ் சூர்யா... இந்த இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து முறுக்கிய மீசையோடு ஹரி டைரக்‌ஷனில் “சிங்கம்” என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்...
இது தவிர 2009 ஆம் வருடம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் “எங்கள் ஆசான்” மற்றும் “மரியாதை” , சரத்குமார் அவர்கள் நடிப்பில் “1977” போன்ற டெர்ரர் படங்களும் ரிலீஸ் ஆகி நம்மை திகில் அடைய செய்தது...


( வாசகருக்கு ஒரு புதிர் போட்டி: அருகில் காணப்படும் படத்தில் ஏதாவது தவறு தெரிகிறதா.... விடை : இறுதி பத்தியில்)

வரும் ஆண்டை வரவேற்ப்போம்.
2010 ஆம் ஆண்டின் எதிர்பார்ப்பு நீண்ட நெடுங்காலம் அரசியலில் பணியாற்றி, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாய் அறிவித்த மூத்த அரசியல் தலைவர் டாக்டர் கலைஞருக்கு பாராட்டும் பூமாலையும். இனி அவர் ஓய்வில் இருக்கும்போது, கதை வசனம் எழுதும் காவியங்கள் ”பொன்னர் சங்கர்”, பெண் சிங்கம்” போன்றவை வரிசையாய் வரிசையில் (இந்த வார்த்தை கரெக்டா??!!) நிற்கும்.... அந்த கலை படைப்புகளுக்கு தார்மீக ஆதரவு தரும் மாபெரும் பொறுப்பு 2010 ஆம் ஆண்டில் நமக்கு இருக்கிறது...

சிலருக்கு பிடிக்கல என்றாலும் உண்மை இதுதானே. ரஜினியின் புதிய படமான ”எந்திரன்” (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) ரீலீஸ் (ஏப்ரலில் இல்லையென்றால், கண்டிப்பாக ஜூன் மாதத்தில்) உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தமாக படத்தில் பங்கு கொள்ளும் அத்துணை பெயர்களின் மிக கடின உழைப்பில் உருவாகும் இந்த படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு உலகளாவிய அளவில் மார்க்கெட்டும், பெயரும், புகழும், வியாபாரமும், பணமும், வீச்சும், நம் கோடம்பாக்கத்தை தேடி வரப் போகிறது. “சிவாஜி” படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணி, இந்த “எந்திரன்” படத்தின் மூலம் அகில உலகையும் திரும்பி பார்க்க வைக்கும் என நம்புவோம்... “எந்திரன்” வெற்றி பெற வாழ்த்துவோம்.

கூடவே சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் ஹீரோ அனிமேஷன் படமான “சுல்தான் தி வாரியர்” படமும் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்ப்போம்... அனிமேஷன் படம் என்பதால், சாத்தியப்படும் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்ய ஏதுவாகும்...

இந்தியாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பு மற்றும் டைரக்‌ஷனில் வெளிவர இருக்கும் “ராவண்” என்ற மும்மொழி படம் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது...

சராசரி சினிமா ரசிகனாய் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன், சௌந்தர்யா ரஜினியின் “கோவா”, மிஷ்கினின் நந்தலாலா ஆகிய படங்களை எதிர்பார்ப்போம். நம்மை குஷிப்படுத்தும் என விஷ்ஷூவோம்.

இது தவிர மிருக சம்பந்தப்பட்ட தலைப்புகளை கொண்ட பல படங்கள் வரவிருக்கின்றன... உதாரணமாக “சுறா” மற்றும் “சிங்கம்”... அதனால, இந்த படம் நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் ஒளிபரப்புவார்களா என்று “நக்கல் நாகமணி” கேட்ட கேள்விக்கு நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி... (நன்றி நண்பர் சூப்பர் சுந்தர் (www.onlyrajini.com) )

சிவாஜி தி பாஸ் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது, ”சிவாஜி தி பாஸ்” படத்தின் ஹிந்தி பதிப்பை உலகெங்கும் ஜனவரி 8ம் தேதி 2010 அன்று வெளியிடுகிறது... ”அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே” பாடலில் தமிழின் ஜாம்பவான் நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை இமிடேட் செய்து நடித்த ரஜினிகாந்த், இதன் தெலுங்கு பதிப்பில் பிரபலமான தெலுங்கு நடிகர்களை (என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி) இமிடேட் செய்து நடித்திருந்தார். அந்த பாடலின் வீடியோவை இங்கே பார்த்து ரசியுங்கள் : http://www.youtube.com/watch?v=hD916uVydqI&feature=related ஹிந்தி பதிப்பிலும் பிரமலமானவர்களை இமிடேட் செய்து நடித்திருக்கிறார்... அது சஸ்பென்ஸாக உள்ளதால், அதை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள்...

நல்ல திரைப்படைப்புக்கள் வந்து நம்மை குஷிப்படுத்தட்டும், திரை வியாபாரமும் தளைக்கட்டும் என வாழ்த்துவோம்.

(புதிர் விடை : நிர்வாக இயக்குனர், தன் போர்டில் கை வைத்தால் பிசினஸ் பிச்சிக்கும்)

நன்றி !! வணக்கம்.

2009 – 2010 சிறப்பு பார்வை – (பகுதி 1)

நம்மோடு இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருந்த வருசம் 2009 நம்மிடம் விடை பெற்று, நான் போயிட்டு வர்ரேன், என் தம்பி 2010 வர்ராறு, அவர் ரொம்ப நல்லவரு, வல்லவரு.

நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்கும்னு, கையிலிருக்கிற உடுக்கையை ஆட்டி, குறி சொல்லிட்டு போறார்.

தோழமையே!! ஒவ்வொரு வருடமும் மிக நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தானே நாம் ஆரம்பிப்போம். வரும் 2010 வருடமும் வளமான வாழ்வை தர அந்த ஆண்டவனை மனதார வேண்டுகிறோம். தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் எங்களின் மனங்கனிந்த 2010 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கடந்து சென்ற 2009 ஐ பொது, அரசியல், சினிமா எனும் அடிப்படையில் பார்த்து முக்கிய நிகழ்வுகளை அசை போடுவோம்.

பொது

* வங்கியின் முதல்வர்கள், அரசியல் முதல்வர்கள், பொருளாதார மேதைகள் தொடங்கி பொட்டி கடைக்காரர் வரை பயந்து கால் நடுங்கி இந்த ரிசஷன் எப்பப்பா சரியாகும்! அடுத்த ஆறு மாசத்தில சரியாகுமா என கவலை பட வைத்தது. தொடங்கியது என்னவோ போன வருடத்தின் இறுதி என்றாலும், துள்ளிக் குதித்து குத்தாட்டம் போட்டது இந்த வருடந்தான். இந்த ஜிஞ்சினக்கா சிக்கா... சிக்கா ஆட்டம் நிக்க இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகும் எனும் அஜால்குஜால் ஆரூர்தாஸின் ஆருடம் தான் ஈரக் குலைய பதற வைக்குது.

*நம்மாளு விஞ்ஞானி வெங்கட ராமகிருஷ்ணன் இயற்பியலுக்காக வாங்கிய நோபல் பரிசு, இவரு எங்காளுய்யா என நம் அனைவரையும் காலரை தூக்கி விட வைத்தது.

* சத்தமில்லாம செஞ்ச டகால்டி வேலைகள் வெளியில் தெரிந்ததாலும், 26/11 மும்பை மேட்டருக்கு பின் அமெரிக்கா சப்போர்ட் செய்வதிலிருந்து சற்றே பின்வாங்கியதாலும்,, உலக நாடுகள் கொஞ்சம் உன்னிப்பாய் பார்த்ததாலும், பலவீனமான, லேசா அசந்தாலும் கால் வாருகிற அரசியல் அமைப்பினாலும், அண்டை நாடு பாகிஸ்தான் கொஞ்சம் அமுக்கி வாசித்தது. அந்தப்புறம் “சீனா” சீண்டிப்பார்க்கிறது... இந்தப்புறம் ”இலங்கை” பிரச்சனை தீராமல் இருக்கிறது... (இது நிரந்தரமாக தீர வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா....).

அரசியல்

* குடும்பத்துக்குள்ள குத்து வெட்டா இருக்குது, ஒட்டவே ஒட்டாது, என ஆருடம் சொல்லப்பட்ட முக்கிய கட்சி, மிகவும் வெற்றிகரமாய் பாகப்பிரிவினை செய்து, இன்னும் கொஞ்ச காலத்துக்கு சுமுகமா ஒடும் என்பதாய் தீர்க்கப்பட்டது. டிவி யாவாரம் எங்கனயும் போப்புடாது, எல்லாக் காசும் எங்களுக்கே எனும் செல்ல தத்துவத்தில் , இரண்டாவதிலும் இவர்களே.

சேனல் வரிசையின் இரண்டாவது இடம் வேறு யாருக்கும் போய்விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்போது, இவ்விடமும் பல சேனல்கள் புதிது புதிதாய் முளைக்க துவங்கியுள்ளது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி கூட, மக்கள் அதை அங்கீகரித்ததாகவே தெரிகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு ஸ்பெக்டரமுமாய் (வண்ணமுமாய்) வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது மெய்யாலுமே, அசுர வளர்ச்சிடா யப்போய்ய்ய்ய்ய்ய்...... அதுவும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் மு.க.வின் யுக்தி நல்ல பலன்களை தந்தது... நோட்டை நீட்டி, வோட்டை பெற்று, நாட்டை பிடித்து, ஆட்டையை போடு என்ற நல்லெண்ணம் தான், வேறென்ன நல்ல நினைப்பு இவர்களுக்கு...

* புரட்சித்தலைவர் வென்றெடுத்த மு.க. எதிர்ப்பு எனும் சக்தியை, ஒருங்கிணைக்கத் தவறி, பொது மக்களின் நம்பிக்கையை பெற தவறியதால், எக்ஸாம் ஸ்கூட் அடிக்கும், தேர்தலை புறக்கணிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு கொடநாட்டில் ரெஸ்ட் எடுக்கறோமுங்கோ ரெஸ்ட் என்று சொல்லி ரெஸ்டோ ரெஸ்ட் என்று முடங்கியது.... இந்த முடங்கலே தோல்விக்கு வழிவகுத்தது... (நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்று புரட்சி தலைவர் பாடினார் என்பதை அம்மையாருக்கு யாராவது ஞாபகப்படுத்தினால் தேவலை... (பாடல் எழுதியவர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்).

* ஹேய்.. லெப்ட்ல போ, அப்பாலிக்கா ரைட்ல போ, இல்லென்னா நேர போ என மூத்த அரசியல் கழகங்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டின, மாம்பழக் கட்சி, தேர்தல் தோல்வியில் மக்கள் மற்றும் கழகங்களின் ஆதரவை ஒரே நேரத்தில் இழந்து மோட்டுவளை பார்த்து கொண்டு அடுத்து என்ன செய்யுறதுன்னு தீவிர ஆலோசனை.

* எதிர்கால தமிழகம், வருங்கால விடிவெள்ளி, இளைய தலைமுறைத் தலைவன், என அதிரடியாய் களம் இறங்கிய முரசு, கொஞ்சம் கொஞ்சமாய் வால்யூம் குறைந்து, நிறைய அடி வாங்கி (முடியல..... என்று அலறுவது காதில் கேட்குதா!!) லேசாக தெளிந்து, நேற்றைய நிலவரம் படி டெபாசிட்டை தானம் செய்தது.

* தொலைக்காட்சியின் அரசி என் மனைவி, இத்தனை நாள் அரசியல் அனுபவம், நான் மிஸ்டர் மெட்ராஸ் வேற, 20 மொழி எனக்கு தெரியும், நம்மகாந்த் வளர்ச்சி எல்லாம் பார்த்து, நான் டாஸ்மாக் இல்லை, பாஸ்
மார்க் என கொடி ஏத்திய குமாரன், பாவம் காற்றில் விட்ட கோட்டையை நினைத்து கன்னத்தில் கை வைத்து இருக்கிறார். கழகத்தில கூப்பிடுவாங்களா என காதை காத்து வாக்கில் வைத்திருக்கிறார். இன்னும் ”ஜக்குபாய்” வேற ரிலீஸ் ஆகல... யாரும் வாங்கல... கடை விரித்தேன் கொள்வாரில்லை கதை தான் இங்க....

• ஜனங்களே நல்லா கேட்டுக்கோங்க, நாங்கள் தான் 2011ல் பிரதமர், அதில்லயா நாங்கதான் முதல்வர் என்று அடித்து கூறிய “தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி” நடிகரும், வளவள, கொழகொழ என்றே எப்போதும் பேசும் ”நவரச சிங்க நடிகரும்”, வடிவேல், விவேக் போன்ற காமெடியன்களுக்கு சவால் விடுவதாய் பஞ்ச் டயலாக்ஸ் பேசி நம்மை கிச்சு கிச்சு செய்தார்கள்...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

தொடரும்....

இதன் தொடர்ச்சி/ இறுதி பகுதி நாளை பதிவேறும் . வந்து படித்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.
தொடரும் பகுதி - சுடச்சுட ஒரு சினிமா கண்ணோட்டம்.

மத்திய கிழக்கு நாடுகள் அயல் நாட்டு மோக‌ம் (இறுதி பகுதி)

வேலை தேடுவது பற்றியும் இண்டெர்வியூ சென்று வேலை கிடைத்ததும் அது பற்றி நண்பர்களிடத்தில் பேசச்சொல்லி முந்தைய பதிவில் பார்த்தோம். இனி என்ன?

வேலை கொடுக்கிற நிறுவனம் நமக்கு தரும் சம்பளத்தையும் சலுகையையும் நல்லதா தானே சொல்லும். இல்லாம, உங்க தகுதிக்கு நாங்க ரொம்ப குறையாத்தான் கொடுக்கிறோம் என்றா உண்மையை சொல்லுவார்கள்.

இதுதான் சம்பளம், இது தான் சலுகைகள் என கேட்கும் போது, கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரித்தான் இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் தான் அதே ஊரில் இருக்கும் நமது நண்பரிடத்தில் சொல்லும் போது அவர் சொல்லுவார்.

தங்க இவ்வளவு, சாப்பிட இவ்வளவு, இந்த சம்பளம் போதுமா போதாதா எனும் போதனை எல்லாம் அவர் தான் சொல்ல வேண்டும். என்ன சில சமயம் ஆர்வ கோளாறினால் நண்பர் கொஞ்சம் அதிகம் பேசலாம். பொறுமையாய் சகித்துக் கொண்டால், கை மேல் பலன் உண்டு.

சரி, பணம் சம்பாதிக்கிறதுண்ணு முடிவு செஞ்சாச்சு, துபாய் பத்தியும் தெரிஞ்சாச்சு, நல்ல வேலையும் தேடியாச்சு. அப்புறம் என்ன என படிப்படியாய் நாம் சிந்திக்கும் போது, ஒரு முக்கியமான விசயம். இது தான் வெற்றியின் ரகசியம்.

அது என்ன !!!

இது சுலபம் இல்லை. சொந்த மண்ணை விட்டு வெளிநாடு வர, உடம்பில் மட்டும் அல்ல மனதிலும் மலை அளவு தில் வேண்டும். தீபாவளி சேல்ஸ்ல தள்ளுபடில வாங்கி மலை இல்ல மடுகுதான்னாலும் ஓகே.

புது நாடு, புது கலாச்சாரம், எல்லாத்துக்கும் நம்மை மாற்றிக் கொள்கிற போக்கு வேண்டும். முனைப்பும் வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க முடியும் எனும் தன்னம்பிக்கையும் தள்ளுபடி இல்லாமல் வேண்டும். இதுக்கெல்லாம் சிகரம் வைத்தால் போல பொறுப்புணர்ச்சி பொங்கிப் பெருகணும்.

இது இல்லன்னா, இத புரியலேன்னா ‘எங்க ஆத்துக்கார்ரும் கச்சேரிக்கு போறார்ங்க’ கதையா நானும் போயி கொட்டிக் கிடக்கிற காச அள்ளிட்டு வந்திடரேன்னு நினைச்சா கஷ்டம் ஆயிடுங்க.

சரி வந்து இறங்கினாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இன்னொரு விசயம் உண்டு.

வெளி நாடு வந்து இறங்கியதும் சில அடிப்படைகளை உணர்ந்தால் நல்லது என தோணுது. என்ன தான் இருந்தாலும் இது நம்ம ஊர் இல்ல. இந்த ஊர் சட்ட திட்டம், நடைமுறை, தட்ப வெப்பம், சுற்று சூழல் எல்லாம் பார்த்து நாம கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறது அவசியம்.

நாம எதுக்கு வந்திருக்கிறோம், காசு சேக்க‌றதுக்கு. அந்த நெனைப்ப விட்டு விடாம, கெட்டியா பிடிச்சுக்கணும்னு சொல்லலாம். அனாவசிய செலவை குறைக்கலாம். அடுத்தவனுக்காக வாழாம நமக்காக வாழலாம். அது என்ன அவனுக்காக, அடுத்தவனுக்காகன்னு கேட்டீங்கன்னா.

ராசா மாதிரி மெத்து மெத்துன்னு உக்கார்ரதுக்கு சோபா இங்க கிடைக்கும். வாங்கி போட்டா எவ்வளவு நாள் நாம இதுல உக்காருவோன்னு தெரியாது. ஊருக்கு போகும்போது தூக்கிட்டு போகவும் முடியாது. வேலை இல்ல போடான்னு கம்பெனிக்காரன் சொன்னா, சொன்ன 30 நாள்ல நம்ம வெளிய போகணும். இதென்ன நம்ம ஊரா, இங்க இருக்கணும்னா விசா என்கிற ஒரு விஷயம் வேணும்.

அதனால எந்த செலவு செய்தாலும் யோசிச்சு சரின்னு பட்ட பின்னால செய்யுறது நல்லதுன்னு தோணுது.

இதே கருத்தை ஒரு கவிஞர் சொல்கிறார். யார் அவர்.
"கவிஞர் காத்துவாயன்". அவர் இலக்கிய பங்களிப்பு நேயர்கள் அறிந்ததே. இலக்கிய வட்டங்களால் பின்னர் ‘எல்லாம் தெரிந்த ஏழுமலை எனச் செல்லமாய் அழைக்கப்பட்டவரும் அவரே. துபாய் பற்றிய கவிதையில் இப்படி சொல்கிறார்.

லெப்ட்ல பாரு மண்ணு
ரைட்டுல பாரு பொண்ணு
நடுவால நீ நின்னு
சாப்டா ஒரு பன்னு
யோசிச்சு தின்னு
தின்னுட்டு பணத்த எண்ணு

(முற்றும்..... கனத்த மனதுடன்....)

துபாய் பற்றிய தொடரில் வளைகுடா, அன்னிய தேசம் என்பதை தகவலாய் மட்டும் சொல்லாமல், ஒரு கதை போல, நகைச்சுவையாய் சொல்ல வேண்டும். முடிந்தால் உலக, தத்துவ, தார்மீக அடிப்படையிலான எங்கள் சிந்தனையும் இணைக்க விரும்பினோம். தங்கள் கருத்துக்களை அறியும் போது, நாங்கள் விரும்பியது நடந்தது என்றே தெரிகிறது. வெற்றி பெற்றுத்தந்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

இந்த தொடர் எழுதியது, "பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் தென்றலின் கை கோர்த்து நடந்து வந்தது" போல் ஒரு திருப்தி. ஒருமித்த கருத்துடைய நண்பர் குழுவோடு, சிலுசிலுவென ரயிலில் பயணம் போவது போல. கலகலப்பும் நகைச்சுவையுமாய், அவ்வப்போது தகவல்களோடு பேசி சிரித்த கும்மாளம். இந்த பகுதியோடு நிறைவு பெறுகிறது எனும் போது இறுகிய இதயத்துடன் இறுதி பகுதி எழுதுகிறோம்.

எழுதுகிறோம் எனும் வார்த்தையில் விநோதம் உள்ளது. இருவர் எப்படி ஒரு தொடர் எழுத முடியும். முடியும், நல்ல புரிதலும், சக விட்டு கொடுக்கும் மனப்பான்மையும், பரஸ்பர மதிப்பும், ஆழ்ந்த அன்பும், இருந்த்தால் இது சாத்தியமாயிற்று.

இந்த தொடரை எழுத உறுதுணையாய் இருந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி, நிறைவு செய்கிறோம்.

நன்றி வணக்கம்........

(குறிப்பு : துபாய் பற்றிய மேலே முடிந்த தொடரில் "வாழ்க்கை" பற்றி நாங்கள் எழுதிய குறிப்புக்கள் பிடித்ததாய் சொன்னதால், முழுமையாய் "வாழ்க்கை" பற்றி விரிவாய் ஒரு தொடர் எழுத உத்தேசித்துள்ளோம் - ஆர்.கோபி / லாரன்ஸ்)

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

தீபாவளிப் பண்டிகையை, 'பகவத் கீதையின் தம்பி' என்பார் ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகள். கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள்.

கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. 'என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என வேண்டினாள்! இந்த வேண்டுகோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. ''நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்' எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்'' என்று அருளியுள்ளார் ஸ்ரீமகா சுவாமிகள்.

இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளில்கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், பல காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரகாசுரனுடைய தேசத்துக்கு பாதுகாவலாக கிரி துர்கம், அக்கினி துர்கம், ஜல துர்கம், வாயு துர்கம் எனும் நான்கு கோட்டைகள் இருந்தன. இந்த நான்கு கோட்டைகளையும் அழித்து நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கண்ண பரமாத்மா! பஞ்சபூதங்களால் ஆன நம் உடலுக்குள் புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கெல்லாம் அருள்புரிகிறார் கண்ணன் என்பதைக் குறிக்கிறதாம் இது!

கிரி துர்கம் - மண்; அக்கினி துர்கம் - நெருப்பு; ஜல துர்கம் - தண்ணீர்; வாயு துர்கம் - காற்று! ஆக, நிலம், நெருப்பு, நீர், காற்று எனும் நான்கையும் சொல்லியிருப் பதால், ஐந்தாவது பூதமான ஆகாயமும் இதில் சேரும்.

பஞ்ச பூதங்களால் ஆன நம் உடலில், பகவானைக் குடியேற்ற வேண்டும். பகவானுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால், அவன் நமது உள்ளத்தில் உள்ள அறியாமையை நீக்குவான்; ஞான ஒளி பிரகாசிக்கும். இதுவே தீபாவளியின் உட்பொருள்.

ரமண மகரிஷி சொல்லும் தீபாவளியும் இதுவே!
''தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது- அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி'' என்கிறார் பகவான் ரமணர்!

ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர். இது தொடர்பான கதை...

நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி!

தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம். மார்வாடி பெருமக்கள், தீபாவளியன்று புது வருடக் கணக்கு தொடங்குவதும், இந்தத் திருமகள் வழிபாட்டை முன்னிட்டே நடைபெறுகிறது.

அயோத்தியில் தீபாவளி:

ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌஸல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!

இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள்... தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் 'எம தீபம்' எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உண்டு.

ஆக, தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள்; அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம்... 'கெட்டவை நீங்கி நல்லதை அடைய வேண்டும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி' என்கின்றனர் சான்றோர்.

(தகவல் உதவி : சக்தி விகடன்...)


என் குறிப்பு : மேலே நான் அளித்துள்ள‌ பணம் "தீபாவளி" கொண்டாட்டத்திற்காக நான் உங்களுக்கு கொடுப்பது... KEEP IT YOURSELF AND ENJOY IT YOURSELF..... சும்மா அதிருதுல்ல..

மத்திய கிழக்கு நாடுகள் அயல்நாட்டு மோகம் (பகுதி 13)

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற ("தல" தேர்தல் அறிக்கை) பாணியில் சொல்லி அதை செய்தும் விட்டது. 9999, அதாங்க, 2009 செப்டம்பர் 9ம் தேதி, 9 மணிக்கு ரயில் விடுவோம் என சொன்ன துபாய் அரசு சொன்ன தேதியில் சுக்கு புக்கு ரயில் விட்டு அமர்களப் படுத்தி விட்டார்கள்.

இந்த ஊர் வெயிலுக்கு இதெல்லாம் சரியா வருமா, இருக்குறதே முழ நீள ஊரு இதுலே ரயிலா, என்ற கேள்விகளை புரம் தள்ளி நல்லா வரும் என நம்பிக்கையோடே இருக்கிறது. பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா என்ன நடக்குது என்றே தெரியாமல் இருந்த்தால் இப்ப போயி பார்த்த ஜனம் எல்லாம் ஆச்சர்யத்தில வாயடைச்சு நிக்குது.

இது சொர்க்க புரியா, விமான நிலையமா எனக் கேட்கும் வண்ணம், பாதாள ரயில் ஸ்டேஷன்கள், பறக்கும் ரயில் என நல்லா இருக்குது. ஏர்போர்ட்ல வண்டி ஏறியாச்சுன்னா, நிச்சயமா மூணே நிமிசத்தில் அல் ரிக்கா என்ற இடம் வந்து விடலாம். இதுவே சாலை வழி வந்தால் குறைந்த பட்சம் 30 நிமிடம் எனும் ரயிலுக்கே உண்டான சொகுசு மாற்றுக் குறையாமல் உள்ளது. பாதி ஸ்டேஷன் தான் துறந்து இருக்காங்க, மீதியும் துறந்து, கடை கண்ணி பெருகி, டாக்ஸி எல்லாம் ஸ்டேஷன் வாசல் வரை வந்து விட்டால் இன்னும் ஒரு இரண்டு வருட்த்தில் இது முழுமை பெறும் போது நிச்சயம் நல்லா வரும். இதில் ஈடுபட்டு வெற்றி பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும், மனிதர்களுக்கும் பாராட்டு சொல்லி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

போன வாரம் சொன்ன 7 நட்சத்திர ஹோட்டல் பற்றி பேசுவோமே. சின்ன வயதில் நாமாய் தீர்மானம் செய்து இருந்தோம் 3ஐ விட 5 நட்சத்திர ஹோட்டல், பெரிதும் வசதியும் ஆனது என. அதுவே வளர்ந்து வரும் போது ஏன் இதுவும் பெரிசாத்தான் இருக்கு, நல்லாத்தான இருக்கு இது மட்டும் ஏன் 3 ஸ்டார் ஹோட்டல் என்று. அன்று நாம் கேட்டது இப்படி.

அழகு, வசதி இன்ன பிற‌ இத்தியாதிகள் எல்லாம் இல்லாமல், அன்னிய தேசத்தினரை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டதே இந்த கோட்பாடுகள் என்று. அதாவது வெள்ளைக்காரன் பர்ஸ்ல டாலர் குமிஞ்சு இருக்கும், அதை லோக்கல் கரன்ஸியா மாற்ற எக்ஸ்சேஞ்சு ஹோட்டக்குள்ளயே இருந்து, 24 மணி நேரமும் அவன் எப்போ வந்தாலும் அவன் பசியார உணவு கொடுக்க மல்டி குசின் உணவகமும் இருந்தா அது 5 ஸ்டார்ன்னு.

ஆனா உண்மை என்ன‌ன்னா, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அல்லது எல்லோரும் ஒப்புக்கொண்ட ரேட்டிங் சிஸ்டம் எல்லாம் கிடையாது. ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் இதுக்கென சில வரைமுறைகள் உண்டு.அம்புட்டுதேன். இல்லாமல் நாமாக அறிவித்து கொள்வது தான் இந்த 7 ஸ்டார். சுருங்கச் சொல்லின் தன் துருத்தியை தானே ஊதுவது 7 ஸ்டார். உலகில் இப்போது இருவர் ஊதி உள்ளனர். நாங்க 7 ஸ்டார்ன்னு. ஒருவர் துபாய், மற்றவர் இத்தாலி. பொறுங்கள் ஊதுவதற்கு இன்னும் அஞ்சு பேர் இருக்காங்க கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்க அல்லது ஹோட்டல் கட்டிக்கிட்டு இருக்காங்க. அதில் சென்னையில் உள்ள கிராண்ட் சோழாவும் ஒருவர்.

ஆயிரம் அடிக்கு மேலா நிமிர்ந்து நிக்குற‌ இந்த புர்ஜ் அல் அரப் ஒரு கட்டிட அதிசயம் எனச் சொன்னால் மிகையாகாது. கடலுக்கடியில் பவுண்டேசன் போட்டு, கம்பீரமாக நிற்கும் அதன் அழகை படத்தில் பாருங்களேன். கடலில் இருப்பதால் இது அமைக்கப்பட்டுள்ள கப்பல் போலத் தோற்றம் பொருத்தமாகவும், பொம்பார்டாவும் இருக்கு (பெங்களூர் தமிழில் இது பிரபலம். சூப்பர், நச்சு, பின்னிருச்சு எனும் அர்த்தம் வரும் சொல்) என்ன ஒண்ணு தங்கணும்னா, ஒரு நாள் வாடகை சுமார் 50,000 ரூபாய். இதுக்கு பேசாம் ஒரு வீடே வாங்கி தங்கிராலாமே என தங்கள் மனது முணுமுணுப்பது கேட்டாலும், ரோல்ஸ் ராய்ஸ்ல விமான நிலையம் வந்து கூப்பிட்டு போவாய்ங்கங்கும் போது, ஒரு ராஜ உபசாரம் எனும் போது, சரி ரைட்டு என்று சொல்லத்தானே தோன்றுகிறது.

போய் பக்கத்தில போயி ஃபோட்டா எடுத்துக்கிட்ட்தோட சரி. நாங்க உள்ள எல்லாம் போனதில்ல. சொல்லக் கேள்விதான், நம்மள மாதிரி ஆளுங்க உள்ள நுழையிறதே கொஞ்சம் கஷ்டம் என்று.

எந்த பிரபலமான ஒரு கட்டிடத்துக்கும் ஒரு காண்ட்ராவெர்ஸி உண்டல்லவா. இதுக்கும் உண்டு. அது உண்மையா பொய்யான்னு எங்களுக்கும் தெரியல, கேட்டா கேட்டவய்ங்களுக்கும் தெரியல. எது எப்படியோ, அது உண்மையில்லை என தெரியும் வரை நாமும் பெர்மூடா ட்ரையங்கிள் போல கேட்டு வைப்போம்.

இதை வடிவமைத்த நிர்மாண என்ஜினியர், தனது மதத்தின் அடையாளம் பொறித்த ஒரு வழிபாட்டுத்தலம் போல இருக்குதாம் இந்த டிசைன். கஷ்டப்பட்டு கடலுக்கு அடியில கட்டினாலும், கடலுக்குள்ள போயி கடல் எல்லாம் தெரியுர மாதிரி போட்டா புடிக்க முடியலயாம். சைடு வியூவுல தான் இன்னும் போட்டா எடுக்க வேண்டி இருக்குதுன்னு சொல்றாங்க.
****

தகவல்களாய் துபாய் பற்றியும் வளைகுடா பற்றியும் விலாவாரியா பாத்தோம்.

வெறும் 150 வருடங்களை வரலாறை கொண்ட இந்த சிறிய ஊர்.

சில தகவல்களின் அடிப்படையில் 1200 பிரஜைகளை 1822 ஆம் வருடத்தில் கொண்டிருந்தது எனும் போது சின்ன ஊர் எனச் சொல்வது எவ்வளவு உண்மையாகிறது. ஆனால் இன்று உலகின் 20 வது விலை உயர்ந்த நகரம் என பட்டியலிடும் போது, உலகின் மூன்றாவது விமான நிலையம் உள்ளது எனும் போது அதன் வளர்ச்சி அதிசயிக்க வைக்கிறது. ஒரு முப்பது வருடங்களில் இவர்கள் பெற்ற வளர்ச்சி, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பின் கைங்கரியம் என்றே சொல்ல்லாம்.

இந்த தொடர் 13 பகுதிகளாக வந்து தங்கள் பேராதரவை பெற்றதும் நன்றியோடு எங்கள் வணக்கத்தை பதிவு செய்கிறோம். தங்களின் ஊக்கமும் தூண்டுதலுமே இந்த தொடரின் வெற்றி.

இதோ அரபு மண்ணின் சாதக பாதகங்களை தெரிந்து கொண்டீர்கள். இந்த கஷ்ட நஷ்டங்கள் புரிந்து, ஒரு வளமான வாழ்வுக்காக நான் தயார் என நீங்கள் முடிவெடுத்தால். சபாஷ். வாருஙகள். வளைகுடா உங்களுக்காக காத்திருக்கிறது, உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கும். ஒளிமயமான வாழ்வின் சேமிப்பிற்கு நிச்சயம் உதவும்.

வேலை தேடுதல் கடினம் அல்ல. நல்ல ஏஜெண்ட், நல்ல கம்பெனிகள் என பல உண்டு. உஷார், ஏமாற்றும் கூட்டமும் உண்டு. இதை விளக்கிச் சொல்ல ஒரு உண்மை சம்பவம் இதோ.

எங்கள் தொலைபேசி சினுங்கியது. நாங்கள் சார்ந்திருந்த ஒரு சமூக சேவை குழுமத்திலிருந்து இந்தியன் எம்பெஸியில் ஒரு பெண் காத்திருக்கிறார்கள், அவர்களிட்த்தில் இதை சேர்த்து விடுங்கள் என சொன்ன போது இப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை.

மருத்துவமனை வேலை என ஏமாத்தி, விலைமகளாய் மாற்றும் ஒரு முயற்சியில் இருந்து விடுபட்டு, நம் நாட்டிற்கு செல்ல தயாராய் அந்த பெண். சோர்ந்த உடலிலும், தளர்ந்த மன நிலையிலும் உள்ளவர், நம் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவர்.

இந்திய முன்னணி விளையாட்டு வீராங்கனை. இதற்கு மேல் கேட்காதீர்கள். அவரது அடையாளம், அவரையும் அவர் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால் நாங்கள் பெயர் குறிப்பிடவில்லை.

இவ்வளவு விவரம் உள்ள இவரா இப்படி மாட்டிக் கொண்டார், அவரது கணவர் கூட இந்த ஊரில் இருந்துமா இந்த நிலை, என்ற எங்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் மிக முக்கியமானது. நம் எல்லா வாசகர்களுக்கும் அவசியமானது.

இப்படி ஒரு வேலை வாய்ப்பு வந்ததுமே, அவர் யாரிடமும் சொல்லவில்லை. தன் கணவரிடம் கூட! தெரிந்தால் இதை கெடுத்து விடுவார்கள் என்ற பதில் எங்களை சிந்திக்க வைத்தது.

கண் போட்டுருவாங்க, பொறாமை படுவாங்க, கெடுத்து விட்டுருவாங்க என நினைத்து சொல்லாமல் இருப்பது எவ்வளவு தப்பு.

தங்கள் நண்பர்களிடத்தில் இதை பற்றி விரிவாய், விரைவாய், விலாவாரியாய் பேசுங்கள். அவர்கள் நிச்சயம் உதவத்தான் செய்வார்கள்.

(அடுத்த பகுதியில் நிறைவு பெறும்)

ச‌ங்கி ம‌ங்கி டெர்ர‌ரோ டெர்ர‌ர் கூட்ட‌ணி - (01.10.09)

எலே சங்கி... எங்கடா பூட்ட இம்புட்டு நாளா.. நாட்டுல எவ்ளோ அக்குரும்பு நடக்குது தெரியுமாடா??

இன்னாடா வர்ற சொல்லவே மெரிசல் வுடற மங்கி... ஒரு வாரத்துல இன்னாடா அக்குரும்பு நடந்துட்ச்சி...

சொல்றேன்டா... நம்ம "தல"க்கு "அண்ணா விருது" குடுத்தாங்கடா... அந்த வியாவுல அன்பய‌கன் "இதயம் இனிக்க, கண்கள் பனிக்க" நின்னாராமாம்...

ஒரு நாளாவ‌து அந்த‌ சீட்ல‌ உட்கார‌ணும்னு நென‌ச்சேன்... அது முடியலியேன்னு நென‌ச்சு அயுதாரோ இன்னா‌வோ?

அதான் தெரிமேடா... யாரும் குடுக்கலியேன்னு, அவிய்ங்களே அவிய்ங்களுக்கு குடுத்துக்கறாய்ங்க.. அதுவும் இல்லாம, அதெல்லாம் "தல"யோட நுண்ணரசியல்டா.

அத்த பத்தியெல்லாம் ஊர்ல த‌கிரியமா "தண்டோரா" மட்டும் தான்டா பேசுவாரு...இதுல நமக்கு இன்னாடா... ரேசன்ல தீவாளிக்கு எக்ஸ்ட்ரா சக்கரை குடுக்கறாய்ங்களா, அத்த பத்தி சொல்றா... பொயப்ப பாப்போம்...

டேய், எடுபட்ட பயலே...நீ எந்த ஊர்ல இருக்கடா??!! எக்ஸ்ட்ரா எதுக்குடா? வயக்கமா குடுக்கறதுல கொறைக்காம இருந்தா போதாதாடா??

அதுவும் சரிதான்... அப்புறம் இன்னொரு மெரிசல் மேட்டர் கேட்டு மயங்கி வுயுந்துட்டேம்பா... "தல"க்கு சினிமாவுல ஏதோ அவார்டு குடுத்தாய்ங்களாமே...

அத்த ஏண்டா கேக்கற... படா டமாசுடா... அவருக்கு "உளியின் ஓசை" படத்துக்கு...

டேய்...டேய்... வேணாம்டா...அந்த பேர கேட்டாலே ஒதறுதுடா மக்கா... பெரிய டெர்ரர் படமாச்சேடா அது... அதுக்கு இன்னாடா??

இல்லடா... அந்த திரைப்படத்திற்கு (அப்படின்னு சொன்னா கோவம் வருமாம்... திரைக்காவியம்னு சொல்லணுமாம்..

இந்த மேட்டர நம்ம டக்ளஸ் ராஜூ அண்ணாத்த ரீஜன்டா சொன்னாருபா...) படா ஷோக்கா வசனம் கட்டுனாருன்னு 2008ம் வருடத்தின் தமிழக அரசுக்கான சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதிக்கு தந்துட்டாய்ங்களாம்டா...

டேய்... நீ என்னிய திட்டறதுன்னா, நேரடியா திட்டுடா... ஏண்டா, இப்படி கூப்பிட்டு வச்சு வெறுப்பேத்தற... இந்த விருது இப்போ இவருக்கு தேவையா...

ஏண்டா மக்கு பயலே மங்கி... அவரு ஆட்சில இருக்க சொல்லோ கூட அவருக்கு குடுத்துக்கலேன்னா, அப்புறம் வேற யாருடா அவருக்கு தருவாய்ங்க?

அதுவும், சரியான பாயிண்டுடா... இன்னாத்த சொல்றது...
பொறவு, நம்ம கவுர்மெண்டு 2007 / 2008ல சிறந்த நடிகர்னு ரஜினிகாந்த் (சிவாஜி படத்துக்கும்) கமல்தாசன் (தசாவதாரம்) ரெண்டு பேருக்கும் அவார்டு குடுத்தாய்ங்களாம்..

கமல்தாசன் சினிமாவுக்கு வந்து 50 வருசம் ஆவுது... தலைவர் ரஜினிக்கு இந்த வருசம் 60 வயசு ஆவுது... அதனால, இத்த கொண்டாடற மாதிரி ரெண்டு பேருக்கும் இந்த அவார்டு இருக்கட்டும்னு குடுத்ததா சொல்றாங்க...

இன்னொரு மேட்டரு இன்னான்னா, கேப்டன் விஜயகாந்த், அவரு நடிச்ச "எங்கள் ஆசான்", "மரியாதை" படத்துக்கும் ஏதாவது விருது கொடுக்க முடியுமா, முடியாதான்னு கேட்டு கடுதாசி போட்டு இருக்காராம்...தமிழ்நாட்டுல இருந்து பதில் வரலேன்னா, டெல்லியில உண்ணாவிரதம் இருக்கப்போறாராம்...

ஏண்டா... டெர்ரர் மேட்டர் சொல்லிட்டு வர்ர சொல்ல, இந்த மாதிரி கிச்சு கிச்சு மேட்டர்லாம் சொல்ற, இப்போ சிரிச்சு சிரிச்சு வவுறு வலிக்குதுடா... அப்பாலிக்கா டாஸ்மாக் அடிக்க முடியாதுடா...

அப்புறம் பொயப்பு பாக்கற எடத்துல ஒருத்தரு என்னிய ஒரு கேள்வி கேட்டாருடா... எனக்கு பதில் தெர்ல... ஒரே படா டென்சனா கீதுடா... மேட்டர் இன்னானா...
ஈயும் பறக்கும்
ஏரோப்ளேனும் பறக்கும்
அதனால, ஈ மேல ஏறி இந்தியா போக முடியுமான்னு கேட்டாருடா மக்கா...

இத்த கேட்ட ஒடனே, எனக்கு பகீர்னு ஆயிட்சுடா...ஒனக்கு தெரிஞ்சா சொல்லுடா...

இன்னிக்கு இது போதும்டா... வர்ட்டா....

சங்கி மங்கி அதிரடி டெர்ரர் கூட்டணி ‍ 26.09.09






எலே சங்கி... எப்படி கீறடா சோமாரி!!...

நல்லா கீறேண்டா பேமானி மங்கி......
இன்னாடா இன்னிக்கு ஓப்பனிங்கே டெர்ரரா கீது.. இன்னாடா மேட்டரு சங்கி?

நெற்ய கீதுறா மங்கி...துபாய் மெட்ரோ ரயிலு மேட்டரு... ரஜினி, கமல் அவார்டு மேட்டரு.. வேட்டைக்காரன் ஆடியோ ரிலீஸு மேட்டரு...

மொதல்ல துபாய் மெட்ரோ ரயிலு மேட்டரு சொல்றேன் கேட்டுக்கோடா சங்கி... இது ஷ்டார்ட் பண்ண‌ சொல்ல... ஒரு 15 பில்லியன் ஆவும்னு சொன்னாய்ங்களாம்...

ஒரு பில்லியன்னா நூறு கோடி...15 பில்லியன்னா, 1500 கோடி...அதாவது நம்மூரு துட்டுல 19,500 கோடி... இப்போ அத்த முடிச்சு பாக்க சொல்ல... செலவு ஜாஸ்தியா பூட்சுபா.. ஒரு 28 பில்லியனாயிடுச்சு... அதாவது 36,400 கோடியாயிடுச்சு... இவ்ளோ துட்டு செலவு ஆயிடுச்சே... இத்த திருப்பி எடுக்கறதுக்கு இங்க இருக்கறவிய்ங்க பாக்கெட்ல எல்லாம் எம்புட்டு பெரிய ஓட்டை போட போறாய்ங்களோன்னு பயந்துகினு கீறாய்ங்களாம்...

இன்னாபா... கேக்க‌வே டெர்ர‌ரா கீதேடா மங்கி... அப்பாலிக்கா??

2007 / 2008 வ‌ருச‌த்துல‌ வந்த‌ ப‌ட‌த்துல‌ அல்லாத்த‌யும் போட்டு பார்த்து, ந‌ம்ம‌ த‌மிழ்நாடு க‌வுர்ன்மெண்டு, 2007 வ‌ருச‌த்துக்கு தலைவர் ர‌ஜினிக்கு "சிவாஜி" படத்துக்கும், 2008 வ‌ருச‌ம் ந‌ம்ம‌ க‌ம‌ல்தாச‌னுக்கு "தசாவதாரம்" படத்துக்கும் சிறந்த‌ ந‌டிக‌ர் அவார்டு குடுக்க‌ போறாய்ங்க‌ளாம்... ரெம்ப‌ ப‌டா லெவ‌ல்ல‌ ஏற்பாடு ந‌ட‌க்குதாம்டா...

அப்டியாடா அப்பாலிக்கா இளைய‌ த‌ள‌ப‌தி விஜ‌ய் ந‌டிக்க‌ற‌ வேட்டைக்கார‌ன் ப‌ட‌ம் ப‌த்தி இன்னாடா‌ நூஸு...
அந்த‌ ப‌ட‌த்தோட‌ பாட்டு ரிலீஸ் ப‌ண்ணாங்க‌ இல்ல‌... அப்போ பேசுன‌ ச‌க்ஸேனா, விஜ‌ய் தலைவர் ர‌ஜினிய‌ அப்டியே ஃபாலோ ப‌ண்ணா, சூப்ப‌ர் ஸ்டார் மாதிரி பெரியாளா ஆவ‌லாம்னு சொன்னாரு...

இத்த‌ கேட்ட‌ விஜ‌ய் குஜாலாயிட்டாரு... அவ‌ரோட‌ அப்பா எஸ்.ஏ.சி.. கோச்சிகினா‌ரு... இப்போவே விஜ‌ய் பெரிய‌ சூப்ப‌ர் ஸ்டார் தானேன்னு அல்லார்கிட்ட‌யும் சொல்லி அயுவுறாராம்...

அத்த‌ வுட‌ ப‌டா டமாசு இன்னா தெரியுமா... டைர‌க்ட‌ர் ச‌ங்க‌ரு வ‌ந்து இருந்தார் இல்ல‌..அவரு சொன்னத கேட்டு நானே மெரிசல் ஆயிட்டேம்பா... முதல்வன் படத்துல மொத்ல்ல ரஜினி நடிக்க மாட்டேன்னு சொன்ன உடனே விஜய நடிக்க வைக்கறதா இருந்தேன்னு சொல்லி, அங்க இருந்த அல்லாருக்கும் பெரிய டெர்ரர் குடுத்துடாருபா...
யப்பா எனக்கு தலைசுத்தறது ஷ்டார்ட் ஆயிட்சுப்பா... ஒரு சோடாவும், ஒரு குவாட்டரும் வாங்கிகினு வரேன்... ஊத்துனாதான் என்னோட என்ஜின் ஷ்டார்ட் ஆவும்னு நெனக்கறேன்... வர்ட்டா.... கடை மூடிட போறான் சோமாரி...

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 12)

வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு இண்டெர்வியூ போவார். ஒரு இந்திய மாகாணத்தின் முதல் மந்திரி யார், என கோட்டு(டி)க்கார மானேஜர் கேட்க. நேற்றா! இன்றா!! நாளையா!!! என்று புரட்சித்தலைவர் படப் பெயரை எதிர் கேள்வியாய் இங்கிலீஷில் கேட்பார். இடைவேளை விடுவார்கள், பாப்கார்ன் வாங்க நாமும் ஒதுங்குவோம்.

இதே மாதிரி பதில் சொல்ல தோதுவாய் ஒரு கேள்வி. உலகத்தின் உயரமான கட்டிடம் எது என கேட்டால் நீங்கள் விவரமானவர்கள் சரியாக ஊகித்து வீட்டீர்களே. நேற்றா! இன்றா!! நாளையா!!!. உலகின் உயரமான கட்டிடம் எனும் அந்தஸ்தை இன்று துபாய் தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறது. கட்டிட்த்தின் பெயர் புர்ஜ் துபாய்.

சரி உயரம் என்ன?? உஷ்... சொல்ல மாட்டோம் (நம்ம கேப்டன் விஜயகாந்த் எப்போவும் சொல்ற ஸ்டைல்தான்... தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன்...) ஏங்க??? என்று நாம் கேட்டால், அவர்கள் சொல்கிறார்கள்... நாங்களும் இதமா சொல்லப் போயி வேற எதாவது ஊரில இதை விட உசரமா கட்டிப்புட்டா, நாங்க என்ன செய்யுறது. தென் கொரியா காண்டிராக்டர், சாம்சங் கம்பெனிக்கு, அவர்தாங்க பில்டிங் கட்டுறவர், அவருக்காவது தெரியும் என நம்புகிறோம்.

இன்னைக்கு தேதிக்கு 146 மாடி முடிஞ்சிருக்கு... உசரமா ஒரே ஒரு கட்டிடம் கட்டாம, அத ஒரு ஊரு மாதிரி கட்டுறது நம்ம துபாய் துணிச்சல். இந்த ஊரு கட்ட போட்ட திட்டம் எவ்வளவு. அதிகமில்லை ஜெண்டில்மேன் சுமார் 9,000 கோடி.

நவ நாகரீக வர்த்தக மையமும், நட்சத்திர ஹோட்டல்களும் அடக்கிய சொர்க்க புரியே இந்த டவுன் டவுண். பின்னே 30,000 வர்த்தக மற்றும் குடியிருப்பு வசதிகளும் உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால், பெயர் துபாய் மால் இதில் அடக்கம். இந்த கடை திறந்து இப்போ ஒரு வருசம் ஆச்சு. இதில் உசரமான ஒரே கட்டிடத்துக்கு மாத்திரம் 400 கோடி.

போற போக்கில ஒரு உபரித் தகவல். துபாயின் கட்டிட கட்டுமானத்தை பற்றி புரிந்து கொள்ள இந்த தகவல் உதவும் என நம்புகிறோம். இந்த உலகத்தில் உள்ள கிரேன் அதாங்க, மும்பை எக்ஸ்பிரஸ்ல நம்ம கமல்ஹாசன் ஏறி குரங்கு கூட விளையாடுவாரே, அந்த இரும்பு ஏணி தான். அதில 35% இங்கே துபாய்ல தான் குந்திகிட்டு இருக்கு. உலக விகித்தில் இது ரொம்ப ஜாஸ்தி, ஏன்யா 35% கிரேன் இங்க இருக்குன்னா அத்தன கட்டிட வேலை இங்க தான் நடக்குதுன்னு அர்த்தம்...

உசரமான கட்டிடம் கட்டுறோம் என சவுண்டு விட்ட நேரத்தில் இருந்து நாங்களும் பார்த்துக் கிட்டே இருக்கோம். கிரேன் வருது, ஆள் வருது, அம்பு வருது, அப்பு வருது, குப்பு வருது.. ஆனா பில்டிங் மட்டும் காணேம், என்னாடா வருசம் ஒண்ணாச்சே, ஒரு மாடி கூட கட்டலயேன்னு பார்த்தா சோக்கா சொன்னாரு துரை ஒரு கதை. 100 மாடி, 150 மாடின்னு கட்டுறது எப்படி, பூரா காங்கீரீட்டில தூண் எழுப்பி, சும்மான்னாக்க ஊடு செங்கல் வைச்சு சில சுவர், கண்ணாடில மீதி சுவர வைச்சி பூசாம பெயிண்ட் அடிக்காம, முடிக்கிறது தான் இந்த முறை. அதனால பில்டிங் நிக்கிறதுக்காக பூமிக்கு மேல உள்ள மாதிரி பூமிக்கு கீழேயும் ஆழமா பவுண்டேஷன் இருக்குதாம். சுருக்காச் சொன்னா 100 மாடில கட்டிடம் கட்ட 100 மாடி ஆழத்துக்கு குழி தோண்டி, பவுண்டேஷன் போட்டு அப்புறம் தூக்கணும் பில்டிங்க.

அதனால தான் பூமிக்கு கீழே பள்ளம் தோண்டுறது, நிரப்புறதுண்ணு நேரம் ஆனாலும் பூமிக்கு மேல சுளுவா அஞ்சு மாடி எட்டு மாடின்னு ஒரு வாரத்தில கட்டிராங்க. சரி, உலகத்திலே பெரிய டவர் கட்டியாச்சு, இவ்வளவு உசரமா கட்டி என்ன செய்ய போறீங்க, என்ற கேள்வி நம் வாசகர் மனதில் வரலாம். நீங்கள் நினைப்பதை உணர்ந்து பதில் சொல்வதே இல்லாமல் வேறு என்ன வேலை. தங்க ஒரு சர்வதேச புகழ் அர்மானி தன்னோட நட்சத்திர ஹோட்டல இங்க நட்த்த போகுது. 175 சொகுசு அறைகளும், 144 விரிவான தங்கும் வசதிகளும் அடங்கிய சூட்களுமென திட்டம் உண்டு. சுமார் 1,500 அடி உயரத்தில பொது மக்கள் போய் மேலே இருந்து கீழே பார்க்க வைக்க திட்டம் இருக்குது. இதுவே உலகத்தின் மிக உய்ரமான பார்வை மையம் என்பதும் ஒரு தகவல்.

144 தொடங்கி 146 மாடி வரை உள் வெளி கிளப். ஏங்க, 100/ 150 மாடியா இருக்கே. லிப்ட் ரொம்ப நேரமாகுமோ, என பயப்படாமல் இருக்க ஹை ஸ்பீடு லிஃப்ட் உதவியா இருக்கு. எண்ணம் உயர்வானால் செயல் உயர்வாகும். உயரம் அண்ணார்ந்து பார்க்க வைத்து அபிமானம் கூட்டும்... கூடவே ரொம்ப நேரம் பார்த்தால், கழுத்து வலியையும்...

துபாய் சுற்றி சுற்றி பல்பொருள் அங்காடிகள் உண்டு. சராசரி துபாய் வாழ் மக்களின் வார இறுதி திட்டங்களில் நிச்சயம் இது இடம் பிடிக்கும். வெறுமையான ஒரு தள்ளு வண்டியுடன் உள்ளே சென்று, கண்ணில் பார்த்தது, கையில் பிடித்து போடு. கொண்டு போன நடை வண்டியை நிரப்பு என்பதான எளிதான செயல் திட்டங்கள் உண்டு. என்ன இப்படிக்கா ஒரு நடை போய் வந்தால், மூன்று மணி நேரமும் ஒரு 500 திராமும் கணக்கில் கழியும். இதனால் தானே என்னவோ ஊரை சுற்றி ஷாப்பிங். எத்தனை வந்தாலும் போத வில்லை. பாருங்களேன் மொத்த பல் பொருள் அங்காடிகள் வாடிக்கையாளரை கவர, அதிரடி விலை குறைப்பு, தரம் என்று மட்டும் இல்லாமல் அனுபவம், உணர்வு என்ற அடுத்த கட்ட நிர்மாணத்துக்கு சென்று விட்டார்கள்.

உதாரணத்துக்கு இபுன் பத்துதா (இதுவும் ஒரு ஷாப்பிங் மால் பெயர்)..பார்ப்போமே. நம்ம பண்ணைபுர ராசா, அதான் இளையராஜா தத்துவார்த்தமாய் சொல்லுவார். இலக்கு என்பதற்கு இருப்பு கிடையாது. அது ஒரு ஓடும் தடாகம். சரிதான்.

நேற்று இந்த இபுன் பத்துதா திறந்த போது, உலகின் மிகப் பெரிய அங்காடியாய் இருந்த்து. இன்று அதை துபாய் மால் தட்டிச் சென்று விட்ட்து. சரி இப்போது என்ன செய்ய. உலகின் மிகப் பெரிய தத்துவ அங்காடி, அதாவது தீம் அங்காடி. சைசில் இது ஒன்றும் சளைத்த்து இல்லை. ஆறு அரங்கங்களாக சுமார் 1.3 கீ,மீ தூரத்தில் ஒரு அரங்கம், என்று சுமார் 8 கீ.மீ தூரம் உண்டு. சுருக்கமாய் சொன்னால் முழு தூரத்தையும் கடக்க ஒரு மனிதனால் ஒரு நாளாய் முடியாது. என்ன செய்யணும். ஒரு பக்கம் போயி, கால் வலிக்கிற வரை நடந்து பார்த்திட்டு, அதே இட்த்துக்கு திரும்ப வந்து வீட்டுக்கு போயிற வேண்டியது தான். இதே கணக்கில ஒரு நாலைஞ்சு தடவையா வந்து வந்து போனா ஓரளவுக்கு பார்த்துடலாம்.... 21 தியேட்டர்கள் உண்டு. ஐ மேக்ஸ் திரையும் உண்டு. என்ன, காசுதான் புடுங்கிடுவாங்க.. நம்ம காசுல சுளையா 500/600 துண்டு....

அரபு நாட்டின் சரித்திர அறிஞர் இபுன் பத்துதா 14ஆம் நூற்றாண்டின் ஆள். தன் தொலை நோக்கு பார்வையால், 6 நாடுகளில் சுற்றி தன் பயணம் பற்றிய விவரங்கள் எழுதியுள்ளார். அவர் நினைவாக அவர் பார்த்த 6 நாடுகளை அரங்கம் ஆக்கி இந்தியா, சீனா, எகிப்து என பெயரிட்டு சரித்திரத்தை ஷாப்பிங் ஆக்கியது சூப்பர்.

யார் இந்த இபுன் பதுத்தா. இங்கே சென்று பாருங்க‌ள்..

ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல தான் நான் காப்பி குடிப்பேன். இதுக்கு மேலே எதாவது இருக்கா என்றால், இருக்கு வாங்க. ஏழு நட்சத்திரம் ஹோட்டல் ஒண்ணு கடலுக்குள்ள கட்டியிருக்காங்க. அது என்ன என்ற விவரம் தெரிய அடுத்த பகுதிக்கு காத்திருப்போமா..

(இன்னும் கொஞ்ச‌மே வ‌ரும்...)

ச‌ங்கி ம‌ங்கி அதிர‌டி அல‌ப்ப‌றை - 12.09.09






எலே எடுபட்ட பயலே சங்கி... எப்படிடா இருக்க??

வாலே மங்கி... இன்னாடா மேட்டரு? நெம்ப நாளா ஆளயே காணுமேடா? உள்ளார போயி வந்தியா??

இன்னாடா, காலைலயே டெர்ரர் கேள்வி எல்லாம் கேக்கற?? நானு இங்கனதானேடா கீறேன்... சொல்லுடா... இன்னான்னா மேட்டரு வச்சு கீற..

சொல்றேன்டா, கேட்டுக்கோ.. சினேகா மேட்டரு, நம்ம கமல்தாசன் மேட்டரு... துபாய் மேட்டரு... ரெட்டிகாரு மேட்டரு...அல்லாத்தையும் சொல்றேன்...

நம்ம சிரிப்பழகி சினேகா, திருவண்ணாமலை கிரிவலம் போறேன்னு சொல்லிகினு, கால்ல செப்பல் போட்டு போயிட்சாம்... அது சாமி குத்தம்னு சொல்லி, நெறய பேரு இப்போ சினேகா மேல ஆக்சன் எடுக்கணும்னு கூவறாங்களாம்...

அப்டியா?? அதானே... கோயிலுக்கு போறப்போ, ஏண்டா செருப்பு போட்டுகினு போகுது...

அத்த கேட்டாங்கபா... அதுக்கு, சினேகா, கால்ல ஒரு ஆபரேசன் பண்ணனும். வலி இருக்குதுனு சொல்லிச்சுபா...
நம்ம ஆளுங்க விடுவாய்ங்களா... நேத்து கூட டி.வி.ல ஒன்னிய பாத்தேன்... "பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு கமல்தாசன் கூட டூயட் பாட்டு பாடி, ஆடுனியேமா, அப்போ காலு வலிக்கலியான்னு கேட்டுடாய்ங்க... இவிய்ங்க ஏதும் பதில் சொல்லலியாம்...

பொறவு... நம்ம கமல்தாசன் அவரோட "உன்னை போல் ஒருவன்" படத்தோட கேசட் ரிலீஸ் பண்ணுனாராம்... டேய் மங்கி... படத்தோட பாட்டு கேசட்டுடா... படம் கேசட் இல்ல... இன்னாடா இம்புட்டு லொள்ளு பேசுத நீயி.....

கேசட் ரிலீஸ் பண்ணப்பறம் அவர பேச சொன்னாய்ங்களா??

ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல...

இன்னா மேட்டருன்னா.. அவரு சொன்னது இதுதாம்பா...
எல்டாம்ஸ் சாலைக்கு என் பெயர் வைப்பது சரி என்று சொன்னால், அது தற்பெருமை... தவறு என்று சொன்னால் அது அகம்பாவம் அப்படின்னு சொல்லிகினாருபா...
பொறவு பேச சொல்ல.. இன்னொரு மேட்டரும் சொன்னாரு...

"உன்னை போல் ஒருவன்" எ வெட்னஸ்டே படத்தோட ரீமேக் இல்ல.. தழுவல்தான்.. அது புதன்கிழமையா இல்லாம, வியாழக்கிழமை / வெள்ளிக்கிழமையா கூட இருக்கலாம்னு சொன்னாருபா...

அப்படியே பொண்ணு சுருது ஜூப்பரா மீஜிக் போட்டுகீது... படம் வந்த பொறவு, "மீஜிக்"ல சுருதிதான் ஒலக நாயகின்னு சொன்னாருபா...

அட்ரா..அட்ரா சக்க..மெய்யாலுமாடா... சர்தானேடா.. அவரு பொண்ண அவரு கூட பாராட்டலேன்னா, எப்டிடா?.. ஆமாம்...அவருக்கு இப்படி எல்லாம் பேசறதுக்கு யாருடா கத்து குடுத்தது... சரி... மேல வேற துபாய் மேட்டரு சொன்னியே... அத்த பத்தி சொல்லுடா...

துபாய்ல நேத்து ராத்தி ராஜா எல்லாம் ஒண்ணு கூடி...

ஆஹா... ஒண்ணு கூடிட்டாய்ங்கடா... ஒண்ணு கூடிட்டாய்ங்க... சரி...இன்னா பேசிக்கினாய்ங்க...

இன்னானா... இனிமேலிக்கு தெனத்துக்கும், இங்க இருக்கற, பூரா இஸ்கூல்லயும் தேசிய கொடி ஏத்தணும்... அப்படியே தேசிய கீதமும் பாடணும்னு சொல்டாய்ங்கப்பு...

நல்ல மேட்டருதானடா... இதுக்கு ஏன் இவ்ளோ ஃபீலிங்கு??

டேய்... நீ தெரிஞ்சுதான் கேக்கறியா... நம்ம ஆளுக்கு நம்ம ஊரு தேசிய கீதமே தெரியாதேடா... அப்புறம்தானடா அவிய்ங்க ஊரு தேசிய கீதம் பாடறது...

இர்றா.... இர்றா... வயக்கம் போல எனிக்கு தல சுத்துது...

ஆமா..இன்னாடா, திடீர்னு அயுவுற...

நம்ம ரெட்டிகாரு எலிகாப்டர் வுயுந்து செத்து பூட்டாரு இல்ல... அவரு செத்துபூட்டாரேனு கவலையில 500 பேருக்கு மேல செத்து பூட்டாய்ங்களாமடா.. அதான் ஒரே ஃபீலிங்கா இருக்கு...

அட பொறம்போக்கு முண்டங்களா.. அவருக்கு போற நேரம் வந்துச்சு... போயிட்டாரு.. அதுக்காக நீயும் போனாக்க, அவரு திருப்பி வந்துட போறாராடா... நீ போயிட்டா, ஒன் குடும்பத்த யாருடா காப்பாத்துவா...இப்போ, அவரு புள்ளையே, மொதலமைச்சர் ஆவறதுக்கு தானேடா ப்ளானிங் பண்ணிகினு கீறாரு.. நீ இன்னாடானா அவருக்காக சாவுற... நீங்க எல்லாம், இத்த எப்போதான் தெரிஞ்சுக்க போறீங்களோ..

சரி... நம்ம கேப்டன் பத்தி ஏதாவது மேட்டர் இருக்காடா??
கீதுபா... ஜோக்கிரில போயி பாரு... மொதல் பகுதி கீது...
அத்த படிச்சுட்டேன்.. இப்போ..ரெண்டாவது பகுதிக்காக நான் வெயிட் பண்றேன்பா...

டேய்... ரெண்டாவ‌து ப‌குதியும் போட்டாச்சு... அப்பால‌, சூப்ப‌ர் ஸ்டார‌ ப‌த்தி கூட‌ அங்க‌ கூவி இருக்கேண்டா... அத்த‌யும் பாரு...

சர்தாம்பா..அப்பாலிக்கா மிச்ச மேட்டரு எல்லாம் சொல்றா... நான் நேர அங்கனதான் போறேன்... ஆமாம்...டாஸ்மாக்தான்..ஒரு ஆஃப் அடிச்சாதான் சுத்தறது நிக்கும்... இன்னாது... இன்னா சுத்துதா... என் தலதாண்டா மட மங்கி பயலே...

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 11)

உலக மனுச ஜீவன்கள்ல இரண்டு வகை. வாரம் பூரா வேலை பார்த்து லீவு கிடைச்ச உடனே சுருண்டு மருண்டு மரவட்டை மாதிரி படுக்கிற சாது சாதி. இன்னொன்னு லீவு வுட்டதும் தோள்ல துண்ட போட்டுட்டு கிளம்புற அல்லது பட்டய கிளப்புற பிரதி வாதி. முன்னர் சொன்ன குரூப் எல்லாம், குளிச்சேன் தூங்கினேன் சாப்பிட்டேன்னு சொல்லும் நம்ம கேட்டா, அதுவே அடுத்த குரூப், வார இறுதி, விடுமுறைன்னாலே, கேளிக்கை பொழுது போக்குன்னு உடனே கிளம்பிருவாங்க.

நாலு சக்கரமும் ஓடக் கூடிய வண்டிய (நல்லா பாருங்க, அல்லது கேளுங்க, கார் நாலு சக்கரத்தில இருந்தாலும், ஒடுறது என்னவோ இரண்டுதான், மத்த இரண்டும் உப்புக்குச் சப்பாணி (16 வயதினிலே கமல் அல்ல) மாதிரி சும்மா சுத்திக்கிட்டு இருக்கும்) எடுத்துக்கிட்டு, பாலைவனத்துக்கு போயி, டயர்ல உள்ள பாதிக் காத்த காத்து வாங்க விட்டுபுட்டு, ரோடே இல்லாத சொரி மண்ணுல வண்டிய ஓட்டுவாங்க. காத்து தான் பாலைவனத்துல பி.டபிள்யூ.டி, அதாங்க ரோடு போடுற வேலை. அது பாட்டுக்கு போற வழிக்கு மண்ண குமிச்சு வைச்சுட்டு போயிடும். அந்த ஏற்ற இற‌க்கங்கள்ல வண்டி போறது ரொம்ப நல்லா இருக்கும். கொஞ்சம் பயமாவும் இருக்கும். வானத்துல / காத்துல போயிருப்பீங்க, கடல்ல போயிருப்பீங்க, பாலைவனத்துல போறது ஒரு தனி அனுபவம். எல்லா இடமும் ஒரே மாதிரி தெரியும். காந்த துணையோட உள்ள காம்பஸ் மட்டும் இல்ல நாம் தொலைஞ்சு போற சான்ஸ் ரெம்ப அதிகம். இந்த பீதி பயணம் முடிந்ததும் தற்காலிக டெண்ட்ல‌ ரிலாக்சேஷன். நல்ல அரேபிய சாப்பாடு, பெண்கள் என்றால் கையில் மருதாணி, எகிப்தின் விசேஷமான பெல்லி டான்ஸ் (தொப்பை நடனம்), அரபி உடையணிந்து ஒரு ஃபோட்டோ, ஒட்டகத்தின் மேல் ஒரு ஒய்யார சவாரி. இந்த முழுதும் ஒரு பேக்கஜ் ஆக டெஸர்ட் டிரைவ் என்ற பெயரிலும், நம்மூர் கணக்கில் 3000 ரூபாயிலும் கிடைக்கும்.

கடலுக்குள்ள வாயில ஆக்ஸிஜன் குழாய கடிச்சுக்கிட்டு, கடலுக்குள்ள அப்படி என்னதாம்மா இருக்கு என்று பார்த்து வரலாம். அடிக்கடலுக்குள்ள மீனம்மா, மீன் மாமியார்ன்னு ஸ்பெஷலா பாட்டுப் பாடி ஆடலாம். போயிட்டு வந்த மக்கள் சொல்றாங்க, பழக்கப்படுத்தின டால்பின் வந்து நம்ம கிட்ட குஷி படுத்திட்டு போகுதுன்னு. என்ன நம்ம ஊர் காசில ஒரு 10000 ரூபா அம்புட்டுதேன், ஒரு அரை மணி நேரத்துக்கு.

இல்ல வானத்துல போயி பாராசூட் கட்டிக்கிட்டு, தொபுக்க்டீர்ன்னு கீழ குதிக்கலாம். கடல்ல டால்பினோட நீந்தி அதுக்கு ஒரு முத்தமும் தரலாம். அல்லது நமக்கு ரொம்ப பழகிப் போன தண்ணீர் பார்க் ! அதாங்க வாட்டர் அம்யூஸ்மெண்ட் பார்க் எல்லாம் சர்வதேச தரத்தில நம்ம பர்ஸ்ச பதம் பார்க்க பல் இளிச்சுகிட்டு நிக்குது. சரி ரேட்டு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, சினிமா டிராமா பத்தி சொல்லுங்கன்னா.

தமிழ் படம் ஒடுற தியேட்டர் முந்தி ரெண்டு, மூணு இருந்துச்சு, இப்போ ஒண்ணே ஒண்ணு என் ஒன்றரை கண்ணுன்னு கலேரியாங்கிற பேரில இருக்கு. "டோன்யா"ன்னு ஒரு தியேட்டர் போர்ட்டுக்கு உள்ளே ரெஸ்டிரிக்ட்ட் ஏரியாக்கு (எங்க ஏரியா உள்ள வராதே!!) உள்ள இருக்கிறதால, அங்க உள்ள மக்களுக்கு தான் உதவும். நம்ம துபாய் காரருக்கு வண்டி பிடிச்சு, கேட் பாஸ் வாங்கி உள்ள போறது எல்லாம் நடக்குற வேலைய சொல்லுங்க பாஸ் என்ற வார்த்தையோடு போகும்.

ஒவ்வொரு எமிரேட்டுலயும் ஒரு தியேட்டர் இருக்கு. அதென்ன ஒன்றரை, கலேரியா 1, 2ன்னு ரெண்டு தியேட்டர் இருந்தாலும் ஒண்ணு ரொம்ப பெரிசு (நம்ம நமீதா மாதிரி), அடுத்தது ரொம்ப சின்னது (நம்ம பாவனா மாதிரி). நம்ம வீட்டுல உட்கார்ந்து பாக்கிற மாதிரியே இருக்கும். ஒரு டிக்கெட் விலை திராம் 30 மட்டுமே (ரூ.400 வரை)... அதுக்கு கார்ல போய், அங்ஙனயே பார்க்கிங் போட்டா, அதுக்கு ஒவ்வொரு மணிக்கும் திராம் 10. ஆக, ரூ.400 குடுத்து டிக்கெட் வாங்கி "கந்தசாமி" படம் பாத்தவியங்களுக்கு, பார்க்கிங் ரூ.525க்கு குறையாம... எவ்ளோ சல்லிசா இருக்கு இல்ல... சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப் பணம் என்று.

தமிழ் அசோசியேஷன் எல்லாம் இல்லையா என்ற கேள்விக்கு ஏன் இல்லாம ஒண்ணுக்கு பத்து இருக்கு என்று பதில்லலாம். அதுவே பக்கத்து சேர நாட்டுக்கு ஒரே அமைப்பு அம்சமா இருக்கு. ஒண்ணு மண்ணா இருக்கதால நல்ல அறுவடை மிதமிஞ்சிய மகசூல். நம்ம ஆளுங்க தான் மதம், வட்டாரம், பின்ன தான் "தலை"வனா இருக்கணும்னு இப்படி எல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு சகட்டு மேனிக்கு கடை துறந்ததாலே நீ பெரிசா நான் பெரிசா என்ற முக்கிய சண்டையில் முழு முச்சா இருக்காங்க. ஒத்துமையா ஒரே அமைப்பா இருங்கப்பா என்று ஒவ்வொரு மேடையிலும் எம்பெஸி ஆளுங்க கரிசனமா
சொல்றதெல்லாம் ஆறிப்போன காப்பி மாதிரி. குடிச்சதும் தெரியல, செமிச்சதும் தெரியல.

வருடா வருடம் நடக்கும் ஒரு கோலாகல கொண்டாட்டம் ‘துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல்’. அக்கம் பக்கம் உள்ள அத்தனை சுத்து பட்டி அரேபிய நாடுகளும் வந்து கூடிக் கும்மாளம் போடும் திருவிளாதேன். ஊரே திருவிழா கோலம் பூண்டு, வெளியூர் வாசிகளால் தங்கும் விடுதிகள் எல்லாம் நிரம்பி வழியும், விமான போக்குவரத்து சில பல/ பல சில மடங்குகளாகும். இந்த ஒரு மாத வருமானம் சில ஹோட்டல்களுக்கு ஒரு வருடம் வரை தாக்கு பிடிக்க ஊதியம் தரும்.

சரி அப்படி எங்கு கொண்டாட்டம். நம் ஊர் பொருட்காட்சி போல், ராட்டினம், பஞ்சு மிட்டாய் சமாச்சாரங்கள் ஒரு இடத்தில் உண்டு. அந்த இடத்திற்கு "க்ளோபல் வில்லேஜ்" என்று பெயர். உள்ளூர் கடைகள் முழுதும், தள்ளுபடி விலையில் வாடிக்கையாளரை கூப்பிட்டு பொருட்களை கையில் திணிப்பார்கள்.வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்றாலும் அந்த சலுகை விலையில் நம் மனமே சபலப்படும்.

சொல்லுங்கப்பா உங்க வீகத்தன்னு நீங்க கேட்டீங்கன்னா, உள்ளூர் வர்தத‌கத்த உசர வைக்க 1996 வருசம் சும்மா திருவிழான்னு தொடங்குனது, இன்னைக்கு ரொம்ப பெரிசா இந்த வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைக்குது. ஜனவரி 15 தொடங்கி ஃபிப்ரவரி 15 வரை ஒரு மாத கூத்து தான், உள்ளுர் சராசரிவாதியை போக்குவரத்து நெரிசல் என்ற பெயரில் பதம் பார்க்கும். இத்தனைக்கும் 1 லட்சம் பார்வையாளர்கள் முதல் நாள்லயும் மொத்தமா 35 லட்சம் பேர் ஒரு மாசத்திலயும்னு அவங்க பெருமையா கணக்கு சொல்லும் போது நமட்டு சிரிப்பு சிரிச்சு, "எங்க ஊர் தீவுத்திடல்"ல இத விட பெருசா பண்ணிட்டோம்டா என்று நினைக்கும் நம் நினைப்பே, அடுத்த தகவலில் தடுக்கி விழும். இந்த திருவிழாவில 100 கோடி ரூவாய்ல சாமான் வாங்கியிருக்காக. நம்முர்ல வெறும் பஜ்ஜி, போண்டா சேல்ஸ்தேன்....

உள்ள நுழைய கட்டணம் 10 திராம், நம்மூர் கணக்கில 130 ரூபா – ஒரு ஆளுக்குத்தான். சரியாத்தான் நினைச்சீக. கொஞ்சம் ஜாஸ்தியாச்சேன்னு நினைச்சீங்கன்னா, இதையும் கேட்டுகோங்க, இந்த சமயத்துல கவர்மெண்ட்டே லெக்ஸஸ் கார் அதிர்ஷ்ட குலுக்கல் ஒண்ண நடத்துது. ஒரு டிக்கட்டோட வெல வெறும் 250 திராம் தான்... அதாவது, நம்மூர் காசுல ரூ.3250 தேன்... ஒவ்வொரு 5000 டிக்கட்டுக்கு ஒரு குலுக்கல்.
நம்ம டிக்கட்டோட நம்பர் குலுக்கிப் போட்டு, அதில நம‌க்கு அதிர்ஷ்டம் மட்டும் இருந்துச்சுன்னா, போகும் போது லெக்சஸ் கார் கொண்டு போக வாய்ப்பு இருக்கு. பின்ன என்னங்க, ஒவ்வொரு 5000 டிக்கெட்டுக்கும் ஒரு குலுக்கல், தினத்துக்கும் இரண்டு லெக்சஸ் கார்ங்கிறப்போ கிடைக்க நல்ல சான்ஸ் இருக்கில்லையா. அந்த நப்பாசையில நம்மாளும் போவாய்ங்க. கிட்ட போயி கேட்டீங்கன்னா, மன்னன் பட "கவுண்டமணி" ஸ்டைல்ல ‘உள்ள வாங்கி வெளியில விக்க வேண்டியது தான், அத யாருப்பா அசிங்கமா ரோட்டுல‌ எல்லாம் ஓட்டுவாய்ங்கம்பான்’

இது மட்டும் இல்ல. பத்தாயிரத்துக்கு தங்கம் வாங்கினா, பெட்ரோல் பங்க்ல போயி பெட்ரோல் இல்லாம 50 ரூபாய்க்கு மேலா சாமான் வாங்கினா (மேலயும் கீழயும் பார்க்காதீங்க..... ஆயில், ரேடியேட்டர் தண்ணீ, குழாய்புட்டு, கேக், பிஸ்கட், ஜூஸ் இந்த மாதிரி இத்யாதி இத்யாதி சாமான்கள்) உங்களுக்கு கூப்பன் தான், குலுக்கல் தான், குப்புன்னு பரிசு மழைதான். தினத்துக்கு நிசான் கார், 1 கிலோ தங்கம், ஒன்றரை கோடி ரூபான்னு பூரா வாய் ஜொல்லு விடுறா மாதிரி பரிசுதேன்.

இங்கனதான்னு இல்ல, துபாய் முழுக்க இந்த பரிசு கலாச்சாரம் அதிகம் தான். உள்ளூர் வங்கிகள் கூட டெபாஸிட் பெற்றுக் கொண்டு மாதம் ஒரு முறை காலாண்டுக்கு ஒரு முறை எனும் விதமாய் குலுக்கி பரிசு தருவார். எமிரேட்ஸ் போஸ்ட் எனும் நிறுவனம் கூட 1 கோடி கனவு எனும் திட்ட்த்தின் கீழ் அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை விதை விதைப்பார். என்னடா தூக்கி பிடிச்சு பேசுறீங்களே, இதுவும் ஒரு லாட்டரி சீட்டு போலத்தானே, என்பவருக்கு. இல்லைங்க, இது சிறு சேமிப்பு. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சேமிப்பு பத்திரத்தின் குலுக்கலே இந்த அதிரடி பரிசு.

வருசத்துக்கு ஒரு தடவை ஷாப்பிங் பெஸ்டிவல், நடக்குறதால நடுவில ‘துபாய் சம்மர் சர்பிரைஸ்’ நடக்கும். இதுவும் அது போலத்தான். கேளிக்கைகள், கொண்டாட்டம் எல்லாம் தூள் பறக்கும்.
ரெண்டுக்கு என்ன வித்தியாசம்னா, துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் குளிர் காலத்தில் நடக்கும்... துபாய் சம்மர் சர்ப்ரைஸஸ் என்பது கோடை காலத்தில் நடக்கும்... பின்னே, வெயில்காலத்துல ஊருக்குள்ள ஆளுங்கள எப்படி கூப்பிடறது... இல்ல..எவன் இந்த சூட்டுக்கு உள்ள வருவான்?

(இன்னும் கொஞ்சமா இருக்கு....)


பட்டு மாமி...பட்டு புடவை....பதினாறும் பெற்று பெருவாழ்வு


அனைவரின் வாழ்விலும் திருமணம் என்பது மனதுக்கு குதூகலம் அளிக்கக்கூடிய விஷயமாகும்....

திருமணத்தின் போது, மண்டபத்தில் எங்கெங்கு காணினும் மகிழ்ச்சி கொப்பளிக்கும் .... உற்றார், உறவினர்கள், நண்பர்கள் குழு என்று ஒரு குதூகல சூழ்நிலை நிலவும்....

வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் எத்தனையோ உறவினர்கள், திருமணத்திற்கென்றே வெளிநாடுகளிலிருந்தும் கூட வரும் உறவினர்கள், நண்பர்கள் என்று அந்த சூழலே விழாக்கோலம் பூண்டிருக்கும்.....

முந்தைய நாளிலிருந்தே உற்சாகம் கரைபுரண்டோடும்.... பாட்டும், கூத்து, கும்மாளம் என்று கல்யாண‌ மண்டபம் எங்கும் சலசலவென்ற பேச்சு சத்தம் எங்கும் எதிரொலிக்கும்...

பல வண்ணங்களில், பல விலைகளில், பல கடைகளில் வாங்கப்பட்ட பல்வேறுபட்ட பட்டுசேலைகளின் அணிவகுப்பு நடைபெறும்.... எந்தெந்த புடவை எந்தெந்த கடைகளில் வாங்கப்பட்டது, எந்தெந்த கடைகளில் இவை விலை குறைவாக கிடைக்கும் என்று விவாதமும், பட்டிமன்றமும் நடைபெறும்....

என்னிடம் வெறும் 20 பட்டுப்புடவைகள் தான் இருக்கிறது என்று தான் ஏதோ பரம ஏழை என்பது போல் சொல்பவர் பேச்சுக்கு அந்த பெண்டிர் கூட்டம் முழுதும் மகுடி கண்ட பாம்பு போல தலையாட்டும்.... பின், அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அந்த திருமண மண்டபத்தில் (பட்டுப்புடவையை பொறுத்தவரையில்)....

முந்தைய நாள் சாயந்திரம் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, மறுநாள் கல்யாணம் அன்று அனைவரின் கண்களும், அந்த பட்டுப்புடவை பெண்மணியின் பட்டுப்புடவையின் மேலேயே இருக்கும்.... அவரும், இதுநாள் வரையில் தான் எடுத்து கட்டாததும், இந்த திருமணத்திற்கென்றே வாங்கி கட்டிக்கொண்டது போலவும், சொல்லாமல் சொல்லி, அட்டகாசமாய் ஜிகுஜிகுவென்று ஒளிரும் ஒரு பட்டு புடவையை எடுத்து அணிந்து கொண்டு வருவார்....

அந்த பட்டுப்புடவையை கண்டு, அங்கு வெளிப்படும் பெருமூச்சின் ஒலி அந்த திருமண மண்டபத்தையே அதிர வைக்கும்.... காண்பவர் அனைவரின் கண்களும் ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்தும்.... இப்போது, அந்த பெண்மணி சொல்லும் வார்த்தை அனைவரையும் கோபமுற செய்யும்....

இந்த புடவை வெறும் ரூ.50,000 தான்... எனக்கு கூட இவ்வளவு சீப்பா வாங்கணுமான்னு தோணித்து.. இருந்தாலும், அடுத்த மாசம், இதைவிட கொஞ்சம் காஸ்ட்லியா வாங்கிக்கலாம்னு இந்த கல்யாணத்துக்காக இதை எடுத்துட்டேன்... ஒரு புடவை பார்த்தேன் பாருங்கோ.... ஆஹா.. அது சூப்பர்.. விலையும் கொறச்சல்தான்.. வெறும் 70,000 தான் என்பார்...

அந்த புடவையை மண்டபத்தில் வந்து அமர்ந்துள்ள அனைவரும் பார்க்கும் வண்ணம், அவரே அனைவரையும் தேடிச்செல்வார்... எல்லோரிடமும், அந்த புடவையின் பார்டரை மூன்று, நான்கு முறை எடுத்து காட்டுவார்.... உடனே, அவர்களும் அந்த புடவையை பார்த்து ஏதாவது கேட்காமல் இருக்க மாட்டார் என்று அவருக்கு தெரியும்.... இவருக்கு பட்டு மாமி என்று நாமகரணம் சூட்டுவோம்...

இப்போது கல்யாண மண்டபம் முழுதும் பட்டு மாமி நிறைந்திருக்கிறார்... அவரின் பட்டுப்புடவை அங்குள்ள பெண்டிரிடையே நிறைந்திருக்கிறது.... அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி சொன்னார்... எனக்கென்னவோ, பட்டு மாமி, இந்த வயசுல இவ்ளோ பட்டுப்புடவை கட்டுவான்னு முன்னாடியே தெரிஞ்சுதான் சின்ன வயசுலயே அவங்களுக்கு பட்டுன்னு பேர் வச்சு இருக்கான்னு நினைக்கிறேன் என்றார்...

இதை கேட்டு, அங்கு கூடி இருந்த அனைவரும் அதை ஆமோதிப்பது போலவே இருந்தது... நாம சான்ஸ் கிடைக்கறப்போ, பட்டு மாமிய நல்லா நோஸ்கட் பண்ணனும் என்று அந்த கூட்டம் முடிவு பண்ணியது.

கெட்டி மேளம், கெட்டி மேளம் என்ற ஐயரின் குரலுக்கு செவிசாய்த்து, கெட்டி மேளம் கொட்டப்பட்டது... கல்யாண மாப்பிள்ளை, மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். கூடி இருந்த உறவினர்கள், நண்பர்கள் அட்சதை தூவி பொதுவில் வாழ்த்தி விட்டு,பின் ஒவ்வொருவராக வந்து மணமக்களை வாழ்த்தினர்...

ஆல் தி பெஸ்ட் டா...
பெஸ்ட் ஆஃப் லக் டா..
விஷ் யூ போத் எ வெரி ஹேப்பி மாரிட் லைஃப்
விஷிங் தி யங் கபுள் எ வெரி ஹேப்பி மேரியேஜ் லைஃப்

இப்படி பல பேர் பலவிதமான வாழ்த்துக்களை சொல்லி விடைபெற்றனர்...

இப்போது மாமிகள் அவர்களுக்குள் பேசி வைத்தபடி, கும்பலாக மணமக்களை வாழ்த்த வந்தனர்... அப்போது, பட்டு மாமி, மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினார்....

உடனே பக்கத்தில் இருந்த அனைவரும் பட்டு மாமியை பார்த்து, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்தினீர்களே... அப்படின்னா, என்ன அர்த்தம்னு தெரியுமா மாமி என்று கேள்வி எழுப்பினார்...

அங்கிருந்த அனைவரின் பார்வையும் பட்டு மாமி மேல் விழுந்தது... மாமிகளிடையே சலசலப்பு எழுந்தது... உடனே பட்டு மாமி கணீரென்ற குரலில் அங்கிருப்பவர்களை பார்த்து சொல்ல தொடங்கினார்...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று எல்லோரும் மணமக்களை வாழ்த்துவது சகஜம்தான்... அந்த பதினாறு என்னவென்றால் :

1. கல்வி
2. அறிவு
3. ஆயுள்
4. ஆற்றல்
5. இனிமை
6. துணிவு
7. பெருமை
8. பொன்
9. பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்லொழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி

ஆகிய இவைதான் அந்த பெருவாழ்வு வாழ தேவையான பதினாறு என்றார்...

பட்டு மாமியை மடக்க நினைத்த மற்றவர் வாயடைத்து நின்றனர்... ஒருவருக்கொருவர், கண்டிப்பாக எனக்கு தெரியாது, நல்ல வேளை என்னை கேட்கவில்லை என்றவாறு அங்கிருந்து பறந்த‌ன‌ர்....பந்திக்கு முந்தினர்...

தோப்பும்...புங்கை மரமும்...பின்னே ஞானும் - யூத்ஃபுல் விகடன்

ஏற்கனவே இங்கு பதிவு செய்து, பின் யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பி, அதை அவர்களும் பதிவு செய்து, பின் எனக்கு தெரியப்படுத்தினர்.அந்த‌ அறிவிப்பும், அத‌ற்கான லிங்க்கும் இதோ...

அன்புடையீர், தங்கள் படைப்பு/கட்டுரை வெளியிடப்பட்டது. மகிழ்ச்சி. நன்றி.

http://youthful.vikatan.com/youth/gopipoem20082009.asp -

யூத்ஃபுல் விகடன்

இந்த பதிவை வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு என் நன்றி....

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்











Vinayagar Chathurthi

Ganesh Chaturthi or Ganesh Utsav or the birthday of Ganesha (the elephant-headed God of Wisdom and Prosperity) falls on the fourth day of the Hindu month of Bhadrapada (around August-September).
Ganesha is India's cutest god. He has the head of an elephant on which is perched a dainty tiara, four podgy hands joined to a sizeable belly with each hand holding its own symbolic object. One has a trishul, or a trident, the second, an ankush, or goad made from his very own broken tooth; the third hand elegantly holds a lotus and the fourth a rosary (which is sometimes replaced by modaks - his favourite sweet). Ganesha is famous not only for being a trickster and for his sense of humour, but equally for his wisdom. He is the son of Shiva (Destroyer in the Hindu Holy Trinity of Creator-Preserver-Destroyer) and Parvati (Shiva's consort).

Ganesha is the foremost god of the Hindu pantheon. This brave guardian of the door to Parvati's bath is beheld today as the most auspicious God of new beginnings. He is worshipped during every festival and before people undertakes a journey or embarks upon a new venture. You will also see him carefully guarding entrances to temples and homes, peeping out of calendars and happily gracing marriages and other such occasions.

ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ள் - அய‌ல் நாட்டு மோக‌ம் (ப‌குதி - 10)

கேளிக்கை பொழுதுபோக்கு எனும் விஷயங்கள் தவிர்த்து, வளைகுடா பற்றியும் அதன் தன்மை பற்றியும் 9 பகுதிகளாக பார்த்து வந்தோம். இது பத்தாவது, இன்னும் ஓரிறு பகுதிகளில் அதையும் சொல்லி நிறைவு செய்ய எண்ணுகிறோம்.

இது வரை வாசித்து வந்த உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.

சரி, துபாய் மிக சிறிய இடம் என்று பதிவில் குற்ப்பிட்டுள்ளீர்கள், பின்னர் எப்படி இத்தனை உலக பிரசித்தி பெற்றது.

இந்த கேள்வியில், வளைகுடாவின் வளர்ச்சி பற்றியும், ஏன் நம்ம ஊர் துபாய் போல இல்லை என்பதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒன்று இரண்டு காரணங்களை பார்ப்போமே.

இந்த அரசின் தொலை நோக்கு பார்வையும், நேர்மையான ஆற்றல் மிக்க செயல் திறனுமே.

நிர்வாகம் ஒரு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் தொழில் போலே நடக்கும். பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகை / கட்டணம் அவர்களுக்கு சேவையாய் சென்றடைகிறதா என்பதில் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்ப்பார்கள். போலீஸ் அற‌வே ல‌ஞ்ச‌ம் வாங்குவ‌தில்லை...( ந‌‌ம்மாளுங்க‌ யாரும் உள்ளூர் போலீஸ் டிபார்மெண்டில் வேலையில் இல்லை....)

எதிலும் உயர்வு, எங்கும் மேன்மை. இதுவே தாரக மந்திரம். இல்லையென்றால் உலகின் உயரமான, உலகின் பெரிய உள்ளரங்கு சந்தை, அல்லது கடலில் மண்ணைக் கொட்டி நிலமாக்கி ப்ளாட் போட்டு விற்போம்‌, ஊருக்குள்ள பள்ளம் தோண்டி கடல் தண்ணி திறந்து விடுவோம், கடலுக்குள்ள மூச்சடக்கி போயி பவுண்டேஷன் போடுவோம்!!! அங்க ஒரு 50 மாடியில 7 நட்சத்திர ஓட்டல் கட்டுவோம், போன்ற சுதந்திர சிந்தனை எக்கச்சக்கம்.

இதெல்லாம் என்ன, சொல்லவே இல்லை என்பவருக்கு இத பத்தி விலாவாரியா அடுத்த பகுதியில் சொல்றோம் என வாக்குறுதி தந்து விட்டு மேலே தொடருகிறோம்.

அஞ்சு வருசத்துக்கு முந்தி இந்த ஷேக் ஸாயித் ரோட்டில ஒண்ணுமே கிடையாது, இப்போ பாரு எத்தனை பில்டிங்கு, எனும் ஆச்சரிய வாக்கியம் மிக சகஜமாக இங்கு கேட்கும். ஆறு மாசத்தில இவ்வளவு மாறுதலா என வந்தவர் அதிசயிப்பார்.

ஒரு தமாஷ கேளுங்க, "உங்க ஆபிஸ் வரணும், வரைபடம் அனுப்புங்களேன்" என கேட்க "அட போய்யா, ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு புதுசு புதுசா மேப் போட்டு, போதும் போதும்னு ஆச்சு நீயே கண்டு பிடிச்சு வா" என சலித்து கொண்டார். இவருக்கே இப்படின்னா, பாவம் மேப் போட்டு விக்குற க‌ம்பெனி பாடு.

6 லேன்ல எக்ஸ்பிரஸ்வேயா, ஒரு ஆறு மாதம் கொடு, 50 மாடியில காங்கிரீட் பில்டிங்கா, ஒரு இரண்டு வருசம் கொடு என்பது போல கற்பனைக்கு எட்டாத காலத்திட்டம் இங்கு சாஸ்வதம். கட்டுமான பணிகள் எல்லாம் திட்டமிட்ட தேதி, திட்டமிட்ட விதத்தில் இனிதே நிறைவேறும். இல்லையென்றால் அத‌ற்கு க‌டுமையான‌ அப‌ராத‌ம் விதிக்க‌ப்ப‌டும்....

அமெரிக்கா பெரிதாய் அஞ்சும், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த முக்கிய புள்ளிக‌ள், இரண்டு வருடங்களுக்கு முன் துபாய் வந்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததாய் பரவலான ஒரு கிசு கிசு உண்டு.

இந்தியா தேடிக் கொண்டு இருக்கும் ஒரு நிழல் உலக தாதா (தாத்தா அல்ல - அவ‌ர் அவ‌ரை விட பெரிய கேடி) தன் மகளுக்கு விமரிசையாய் கண்ணாலம் கட்டிக் கொடுத்தது இங்கே தான். எப்ப‌டி........

அது எப்படி ஒரே நேரத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நட்பாய் இருப்பது. அது தான், துபாய். தெளிவான சிந்தனை, கடுமையான சட்ட திட்டங்கள் (என்ன தான் தாதா வா இருந்தாலும் இங்க இருக்கச் சொல்ல பச்ச பிள்ள மாதிரி இருக்கணும், இல்லன்னா.....அதான் ஏற்க‌ன‌வே சொல்லிட்டோமே....)

கோடு கிழிப்பதில் இருக்குது இவர்கள் சூட்சமம். இத கேளுங்களேன். சரக்கு (மது) அடிக்க அனுமதி உண்டு. அதுவும் சில எமிரேட்டுகளில், குறிப்பிட்ட உணவு விடுதிகளில் மாத்திரம். குடிச்சோமா, சத்தம் இல்லாம போனோமான்னு இருக்கணும். இல்லாம சலம்புனீங்க, அவ்ளோதான், தூக்கிக்கிட்டு போயி உள்ள போட்டு, நொங்கி எடுத்து, அப்புறமா ஊர விட்டு நாடு கடத்திருவாங்க அம்புடுதேன்.

புனித ரமலான் மாதத்தின் போது, குடி/சரக்கு எங்கும் தடை செய்யப்படும்.... ஹோட்டல்கள், பார்கள் இந்த சமயத்தில் குடி/சரக்கு சப்ளை செய்யாது... அது போன்றதொரு உத்தரவு அவர்களுக்கு அரசாங்கத்தால் முறையாக முன்கூட்டியே அனுப்பப்படும்....
ஷார்ஜாவில் எப்போதுமே குடி/சரக்கு கிடையாது (பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் கூட)... காரணம், அவர்கள் சவுதி அரேபியாவின் சட்ட திட்டத்தை பின்பற்றுவது தான்....

ஷார்ஜாவில் இருப்பவர் சரக்கு குடிக்க வேண்டுமெனில், இந்த பக்கம் இருக்கும் துபாய்க்க்கோ அல்லது அந்த பக்கம் இருக்கும் அஜ்மனுக்கோ தான் செல்ல வேண்டும்.... வ‌ரும்போது போதையில் த‌ள்ளாடிக்கொண்டே வ‌ர‌வேண்டும்.

வண்டிகளின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் விசயத்துல யாவாரத்த பாருங்க, கார் நம்பர் ப்ளேட்டுகள் மற்றும் அதற்கு கொடுக்கப்படும் கொள்ளை விலை...ஒவ்வொரு டிஜிட் குறையும்போதும், நம்பர் ப்ளேட்டின் விலை அதிகமாகும்..
உதாரணமாக 4/5 மாதங்களுக்கு முன் ஒரு டிஜிட் கொண்ட நம்பர் ப்ளேட் அபுதாபி தொழிலதிபர் ஒருவரால் திராம் 27 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி) கொடுத்து எடுக்கப்பட்டது... இது கின்னஸ் சாதனை விலை, ஒரு நம்பர் ப்ளேட்டுக்கு….ப‌டிக்கும் போதே சிறு மூச்சு, பெரு மூச்சு எல்லாம் வந்து காது வழியா கரிவண்டி கணக்கா புகை வருதே...

காசு ஜாஸ்தி பண்ணு, ஆனா சேவைய உயர்த்து, இது தான் கொள்கை. டெலிஃபோன் சர்வீஸ் செய்யுறது ரெண்டு பேர், எடிஸாலட் மற்றும் டூ... இந்தியாவிற்கு பேசுவதற்கு மட்டும் கொள்ளை கட்டணம்.... ஏன்னா, இங்க இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்..

சில தொழில் நுட்ப காரணத்திற்காக அமீரக அரசாங்கம், திடீரென அனைத்து டாக்சிகளின் நம்பர் ப்ளேட் நிறத்தை கருப்பு வெள்ளையிலிருந்து, மஞ்சள், கருப்பிற்கு மாற்ற சொல்லியது.... இரு தினங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்களின் நம்பர் ப்ளேட் நிறம் மாற்றப்பட்டுள்ளது.... அதுதான் அமீரகம், மற்றும் அதன் சட்டம் அதை நடைமுறைப் படுத்தும் வேகம்.... இதே நம்மூரில் நடக்குமா?

(தொடரும்.....)

தோப்பும்... புங்கை மரமும்... பின்னே ஞானும்

நான் தேட தொடங்கினேன்
ஊரோரமா ஆத்துப்பக்கம் பெரிய தோப்பு
பூத்து குலுங்கும் கனிகளுடன் சில பல மரங்கள்
தேடினது..... கெடைக்கல.......

ஊரிலிருந்து இரண்டாக பிரியும் பெரிய சாலை
அந்த பக்கம் போனால், பஞ்சாலை
இந்த பக்கம் வந்தால், பூஞ்சோலை

பஞ்சாலையின் சங்கு ஊதியதும்
பஞ்சடைத்த கண்களுடன், பஞ்சு நிறைந்த தலையுடன்
செருப்பின்றி பல ஜோடி கால்கள்.... அந்த வீதியில்......
கஷ்டம்தான்யா என்னிக்குமே உங்களுக்கு....அது விதி....

வேலையின்றி திரியும் வெட்டி கூட்டம்
எதிர்சாலையில் பல வண்ண கைலிகள் ....
வாயில் எரியும் கொள்ளிக்கட்டையுடன்.....
புகுந்தது ....பூஞ்சோலையினுள்.....கையில் சீட்டு கட்டு

என்றும் நீர் நிரம்பி சலசலவென்று ஓடும் ஆறு,
இப்போதோ...சலசலப்பின்றி அன்னநடை போட்டு செல்கிறது....

ஆற்றில், காணும் இடமெங்கும் பலதரப்பட்ட வண்டிகள்
வெளியே செல்லும் அனைத்து வண்டிகளும்
பிள்ளைத்தாய்ச்சி வயிறு போல ஆற்று மணலை நிரப்பி.......

இவ்வளவு கொள்ளை போனபின்பும் ஆறு தன்னகத்தே
சிறிதளவேனும் நீரை வைத்திருக்கிறதே......

அப்புறம், பஞ்சாலை சுற்றி, பஞ்சு துகள்கள் பறந்தபடி.....
இப்புறம், ஊர் மக்கள் தன் சந்தோஷம் துறந்தபடி.....

தோப்பினுள்ளே ஜோடி ஜோடியாக இருந்த பல மரங்கள்
பல துண்டுகளாய் வெட்டி லாரிகளில் ......... . .
தோப்பும் ஆங்காங்கே வெறிச்....வெறிச்...

எப்படி இருந்த ஊர், இப்படி ஆகிவிட்டதே......
தோப்பினுள்ளே அந்த ஒரு மரத்தை தேடினேன்......
அதில்தான் எவ்வளவு கிளைகள்....இலைகள்....

அன்று ஊர் முழுதும் கூடி, அங்கேதானே இருந்தது...
இன்று, ஒரு இரவு முழுதும் (கிழக்கு பக்கம்) தேடியும் கிடைக்கவில்லை......

சரி.... நாளை இரவு வந்து.....
மேற்கு பக்கம் முழுசா தேடி பார்ப்போம்
என்றபடி தோப்பை விட்டு வெளியேறினேன்......

நான் தேடிய அந்த மரம் .......
நான் தூக்கிட்டுக்கொண்ட அந்த
புங்கை மரம்....!!!!