'மேதை'யாக வந்து கலக்கப்போகும் 'கி'ராமராஜன்!


கலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படமான 'மேதை' என்ற படத்தின் மூலம் தனது மறுபிரவேசத்தை நிகழ்த்தப் போகிறார் ராமராஜன். (இதுவரை பட்டாப்பட்டி டவுசரில் அனைத்து கிராமங்களையும் கலக்கி வந்த "மாமேதை கி ராமராஜன்" இந்த "மேதை" படத்தில் ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் அசரும் வகையில் கோட் சூட் அணிந்து கலக்குகிறார். ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஒரு காட்சியில் பால்சொம்புடன், பட்டபட்டி டவுசர் அணிந்து வருவார் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன).
இது அவருக்கு 44-வது படம். (முந்தைய 43 படங்களிலும் டவுசர் அணிந்து நடித்த உலகின் ஒரே நடிகர் என்ற பெருமை அண்ணனுக்கு உண்டு).

இந்தப் படத்தில் கிராமத்து பள்ளி ஆசிரியராக வருகிறார் ராமராஜன். வழக்கம்போல கிராமிய பின்னணியைக் கொண்ட இப்படத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் கொண்டதாக அசத்தலாக தயாராகிறதாம்.
படத்தின் முக்கிய பலமாக வடிவேலு நடிக்கிறார். இதுவரை கவுண்டமணியுடன் மட்டுமே கலக்கி வந்த ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் மண்ணின் மைந்தருடன் இணைந்து காமெடி பண்ண தயாராகிறார். (வடிவேலு இந்த படத்துல அண்ணன் மேட்டர முடிச்சுடுவாருன்னு நெனக்கறேன்).
புதுமுக நாயகி ஒருவர் ராமராஜனுடன் ஜோடி சேருகிறார். சார்லி, அஜய், ஹாசினி, ஸ்ரீரஞ்சினி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார், தீனா.
மதுரை அருகே மேலூரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் பல இடங்களில் நடக்க இருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், என்.டி.ஜி.சரவணன்.
(இந்த படத்தின் மூலம் கி"ராமராஜன்" முன்னணியில் இருக்கும் டெர்ரர் ஸ்டார் ஜெ.கே.ரித்தீஷ் மற்றும் யுனிவர்சல் ஹீரோ சாம் ஆண்டர்சன் ஆகியோருக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று அகில உலக கி"ராமராஜன்" ரசிகர் மன்றம்? தெரிவித்துள்ளது).

பற்றி எரியாத உலகம் வேண்டும்



மேகங்கள் சூழ்ந்தால் மழை வரும் என்பது நியதி
ஆனால், இங்கு போர்மேகங்கள் சூழ்ந்துள்ளதே
இறைவா இது என்ன விதி?

நீ வான்மேகம் கொண்டு தேன்மழை பொழிந்தால் மட்டும் போதுமே
அது, விளைநிலங்களையும், எங்கள் வயிறையும் குளிர வைக்குமே

ஆனால், இங்கு குண்டுமழை பொழிகிறதே
அது வெறும் ரத்த வெள்ளத்தை மட்டுமே தருமே
அப்பாவி ஜனங்கள், பெண்டு பிள்ளைகளை அது அழிக்குமே

என்று தணியும் இந்த போர் தாகம், என்று முடியும் இந்த போர்க்கோலம்??

உண்ணாவிரதத்தை நிறுத்த உண்ணாவிரதம்


இந்த உலகம் எவ்வளவோ விசித்திரமான காமெடிகளை கண்டுவிட்டது. அதை நாமும் கண்டு களித்தோம், களித்துக்கொண்டு இருக்கிறோம். வரும் காலங்களில் கண்டுகளிப்போம்.

சமீபத்தில் நடந்த பல காமெடிகளின் உச்சமாக இன்று இதோ இந்த காமெடி காட்சி உங்கள் பார்வைக்கு அரங்கேறுகிறது.
*****************
முதல் அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார் (உண்ணாவிரதத்துக்கே உண்ணாவிரதமா??)

முதல் அமைச்சர் கருணாநிதி இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சிங்கள அரசால் சுட்டுகொல்லப்படுவதை அறிந்து மனவேதனையோடு இருந்த நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அரசியல் தீர்வு காண மத்திய அரசை நடவடிக்கை எடுக்க சொல்லி பல கட்ட போராட்டங்களை நடத்தினார். (அதில் ஒன்றுதான், கொட்டும் மழையில் எல்லோரையும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தசொல்லி தன் வாகனத்தில் இருந்தபடியே அதை பார்வை இட்டது).

தற்போதுள்ள கடுமையான முதுகு வலியையும் பொருட்படுத்தாமல், டாக்டர்களின் ஆலோசனைகளையும் கேட்காமல் தன்னை மிகவும் வருத்தி வருகிறார்.

இங்குள்ள சிலர் (ராமதாஸ், திருமாவளவன் அல்ல) அவர் மீதும் அவரின் கழக ஆட்சியின் மீதும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வசைபாடி, குறைகூறி அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். அவர் தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல் உழைத்தும், வீணர்கள் தொடர்ந்து அவரை குறைகூறி கொண்டிருக்கிறார்கள்.
தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் இறுதி முயற்சியாக தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது எங்களையும், அவரின் மேல் பாசமும், அவரின் தமிழின் மேல் நேசமும் கொண்டுள்ள கோடானுகோடி தமிழர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது (என்னே வாழும் வள்ளுவனுக்கு வந்த சோதனை?!!)

அவர் பூரண நலம் பெற ஒய்வு மட்டுமின்றி, உண்ணாவிரதத்தையும் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் (ராமதாஸ் மற்றும் அன்புமணி அல்ல) குழு ஆலோசனை அளித்துள்ளது.

தமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்திடும் முதல் அமைச்சர் கருணாநிதி தமிழ் மக்கள், தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் சமுதாயம் வளர ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிற காரணத்தினால் மருத்துவக்குழுவின் ஆலோசனையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வேண்டுகோளை அவர் ஏற்காத பட்சத்தில், நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதை தவிர வேறு வழி இல்லை என்று வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார். (தல ஆறுமுகம், இதுதான்யா அல்டிமேட் ஸ்டேட்மெண்ட்).

ஜல்லி கவி ஜெகத்ரட்சகன்

என் இனிய தமிழ் மக்களே. நேற்று நம் ஜல்லி கவி ஜெகத்ரட்சகன் கலைஞரை வாழ்த்தி எழுதிய ஒரு கவிதை நடை அறிக்கையை பாருங்கள். இதுபோல் ஒரு கவிதைநடை அறிக்கை உலகிலேயே முதன்முதலாக உங்கள் பார்வைக்கு.
*******************************
ஒரு மாதமாக எங்கள் இதயம் ஓரிருமுறை துடிக்கவும் தவறுகிறது! பதைப்பு அலை எங்களைப் பரிதவிக்க வைக்கிறது!

எழுந்து வந்து எங்களைப் பார்க்க இன்னும் எத்தனை நாட்கள்? தம்பி என்ற அழைப்பில் என்னிடம் தாயன்பை காட்டிய தத்துவமே!

வருந்துவதா - வாடுவதா!

மகரந்தப் புன்னகையால் மற்றவர்களை வாழவைத்து மன்னிக்கும் கருணையினால் மாற்றார்க்கும் வாழ்வளித்த நடமாடும் பகுத்தறிவு நலிவடைந்து வருந்துவதா! நல்லோர்கள் உள்ளமெல்லாம் வேதனையில் வாடுவதா!

இந்தியாவின் முதுகெலும்பாய் இருப்பதே நீங்கள்தான், சங்கத் தமிழ் இன்று மருத்துவ மனையில்! தவிக்கும் என் உள்ளமோ உங்கள் நினைவில்!

தலையணையில் சாய்ந்தபடியே உன் தமிழ் ஆணைகள் தங்குதடையில்லாமல் அன்றாடம் ஆட்சியை நடத்துகின்றன. சூது மதியினர் சுரண்டல் வாழ்வைச் சொந்த வாழ்வாக்கிக் கொண்டவர்கள், அந்தி வந்தால் ஆறலை கள்வர்கள் ஆட்டம் போடுவார்கள்!

வயதில் என்ன போராட்டம்

இந்த நேரத்தில் இது என்ன தாங்க முடியாத இடி! நீ உண்ணாமல் இருந்தால் உலகம் தாங்காது! எந்த வயதில் என்ன போராட்டம்! இருக்கின்ற நாங்கள் உன்னால்தான் உண்ணுகிறோம்! ஊர் நலத்தை எண்ணுகிறோம். எல்லாம் நலமாகும்! எங்கள் பணி உரமாகும்.

மன்றாடி வேண்டுகிறோம். மாமன்னன் உண்ணும் கவளம்தான் உங்கள் உயிர்மூச்சைத் தளிர்க்க வைக்கும்! பொங்கு தமிழ் விரைவில் பூரண நலம் பெற வேண்டும்! மருத்துவ மனை உன்னை மகிழ்வோடு அனுப்பும் நாள், எங்கள் மனவயல்களில் இன்பமழை பொழியும் நன்னாள்
***************
தல, இதெல்லாம் உங்களுக்கே ரெம்ப ஓவரா தெரியல. எங்களுக்கு தெரியுது, இதெல்லாம் டூ டூ மச்.

பட்டுச்சேலையில் திருவள்ளுவரும், 1330 குறளும்


கோவை மாவட்டம் சிறுமுகை புதூர் ராமலிங்க சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் 1330 திருக்குறளையும், திருவள்ளுவரின் உருவத்தையும் ஒரே பட்டுச் சேலையில் நெய்துள்ளனர்.
கோ ஆப்டெக்ஸ் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒரே பட்டுப் புடவையில் 1330 குறளையும், திருவள்ளுவர் உருவத்தையும் வடிவமைத்துள்ளனர். 4 மாதம் 10 நாட்களில் ரூ.3.27 லட்சம் செலவில் இந்த சேலை தயாராகியுள்ளது. இந்த பட்டுப் புடவை நேற்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதேப்போன்ற சேலை வேண்டுமானால், முன்கூட்டியே தெரிவித்தால் நெய்து தர முடிவு செய்துள்ளோம். பட்டுச் சேலையின் மதிப்பு 70 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்கும் என்று சிறுமுகை புதூர் ராமலிங்க சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் சங்க மேலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்த திருக்குறள் பட்டுச்சேலையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. இந்த முயற்சியில் பாரதியார் பல்கலைக்கழகம், கோவை மாவட்ட லயன் சங்கமும் ஈடுபட்டுள்ளன.
(நன்றி : வெப்துனியா)

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்


"ஸ்லம்டாக் மில்லியனர்" படத்திற்காக 3 பிரிவில் போட்டியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு பிரிவில் ஆஸ்கர் விருது வென்றார்.


பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர்
பெஸ்ட் ஒரிஜினல் சாங்


அவருக்கு நம் வலைத்தளம் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

இதுவரை அறிவிக்கப்பட்டதில், "ஸ்லம்டாக் மில்லியனர்" படம் 8 விருதுகளை வென்றிருக்கிறது (சிறந்த படம் உட்பட).

இந்தியாவின் ஒரிஜினல் உலக நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்தான்........
(உள்குத்து ஏதுமில்லாத உண்மையான வாழ்த்து இது)

இன்றைய செய்திகள் - 22.02.09

கொழும்பில் விமான தாக்குதல் வான் புலிகளால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று விடுதலைப்புலிகள் அறிவிப்பு.
***************
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்.வெடிகுண்டு கார் தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பலி.
***************
"ஸ்லம்டாக் மில்லியனர்" படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு ஆஸ்கார் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.
**************
ராணுவமும், விடுதலைப்புலிகளும் உடனடியாக போரை நிறுத்தவேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
*************
சென்னை ஐகோர்ட் சம்பவம் மிக மிக துரதிர்ஷ்டமானது என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்து.
***************
இலங்கை பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று பா.ஜனதா குற்றச்சாட்டு.
***************
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.க.சார்பில் பிரம்மாண்டமான இளைஞர் சங்கிலி போராட்டம். போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் திடீரென தீக்குளித்தார்.
******************
தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கோர்ட்டுகளும், செவ்வாய்கிழமை வரை மூடப்பட்டு இருக்கும் - ஐகோர்ட்.
*****************
நதிநீர் பங்கீட்டு பிரச்சனை உள்ள தமிழ்நாட்டில், தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்தான் நிரந்தர தீர்வாக அமையும் - கருணாநிதி.
****************
சென்னை கிரீன்வேஸ் சாலைக்கு டி.ஜி.எஸ்.தினகரன் பெயர் - கருணாநிதி உத்தரவு.
****************
வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - வைகோ அறிக்கை.
****************
ஐகோர்ட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு. கதவுகள் பூட்டப்பட்டதால் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
****************
தங்கம் பவுனுக்கு ரூ.64/- உயர்வு. ஒரு கிராம் ரூ.1,457/-க்கு விற்பனை.
***************
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் - போலீஸார் மோதல் சம்பவம். தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் - கருணாநிதி உறுதி.
****************
கலைஞர் குழுமத்தின் சிரிப்பொலி சேனல் - நடிகர் கமலஹாசன் துவங்கி வைத்தார்.
*************
ஐகோர்ட்டு வாசலில் "ஜீப்" எரிக்கப்பட்ட சம்பவம். 100 வக்கீல்கள் மீது மீண்டும் ஒரு வழக்கு.
*************
டைரக்டர் சீமான் புதுச்சேரி ஜெயிலில் அடைப்பு. டைரக்டர் மணிவண்ணன் அவரை சந்தித்தார்.
***************
சென்னையை சொகுசாக சுற்றிப்பார்க்க 4 பஸ்கள் விரைவில் அறிமுகம். தமிழக அரசு அறிவிப்பு.
*************
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி - முதல் நாளில் 406 ரன்கள் குவித்தது இலங்கை. ஜெயவர்த்தனே, சமரவீரா அபார சதம்.
**************
இந்தியாவுக்கு எதிரான 20/20 போட்டி. நியுசிலாந்து அணி அறிவிப்பு.
**************
முதலாவது ஹாக்கி டெஸ்ட் - இந்திய - நியுசிலாந்து ஆட்டம் டிரா.
*************
மும்பையில் நவம்பர் 26-ம்தேதி பயங்கரவாதிகள் நடத்திய பேரழிவு தாக்குதல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை இந்திய போலீசாரிடம் அமெரிக்காவின் எப்.பி.ஐ. அளித்துள்ளது.
************
அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட நான்கு இந்தியர்களுக்கு நியுஜெர்சி பெடரல் கோர்ட்டில் நடந்த வழக்கில், ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு கோடியே 12 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
**************

ரஜினி ராம்கிக்கு வாழ்த்துக்கள்



பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் போட்டியில் நமது அருமை நண்பர் ரஜினி ராம்கி எழுதிய மு.க புத்தகம் பரிசுக்குரிய புத்தகமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து ஆண்டு தோறும் புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக பரிசுகள் அளித்து பாராட்டி வருகிறது. இந்த ஆண்டின் பரிசுக்குரிய புத்தகங்களில் ஒன்றாக மு.க புத்தகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், பரிசுகளும் அவரை மேலும் நல்ல படைப்புகள் படைக்க உத்வேகம் கொடுக்கும் என்பது திண்ணம்.

நம் அருமை நண்பர் ரஜினி ராம்கி இது போன்று மேலும் பல பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.

நன்றி : www.rajinifans.com (செய்தி)

இன்றைய செய்திகள் - 19.02.09

இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று சோனியா காந்தி உறுதி.
**********
போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வற்புறுத்த முடியாது என்று பிரணாப் முகர்ஜி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எம்.பி.க்கள் கடும் அமளி.
***********
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தையை சேர்ந்த பிரமுகர் தீக்குளித்தார்.
***********
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.11,480-ஆக உயர்ந்தது. கடந்த 2 நாட்களில் ரூ.544 கூடியது.
************
போர் பகுதியில் இருந்து வெளியேறும் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற ஐ.நா.சபை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு.
*************
ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 17 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல்.
************
ஏவுகணை சோதனை நடத்தினால் வடகொரியா மீது தடை விதிக்கப்படும் என்று தென்கொரியா அறிவிப்பு.
************
இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கவில்லை என்று டெல்லி மேல்சபையில் பிரணாப் முகர்ஜி விளக்கம்.
************
பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதால் தீவிரவாத பிரச்சனை தீர்ந்துவிடாது என்று பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி பேச்சு.
************
மும்பை தாக்குதலில் பிடிபட்டுள்ள முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாபை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தல்.
***********
மங்களூரை தாலிபான்களின் நகரங் என்று கூறிய மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு.
************
"சத்யம்" நிறுவனர் ராமலிங்க ராஜுவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி.
************
பெங்களூரை உலுக்கிய தொடர்கொலையில் பரபரப்பு தீர்ப்பு. பெண்களை கற்பழித்து கொன்ற போலீஸ்காரருக்கு தூக்கு தண்டனை.
***********
சுப்பிரமணிய சுவாமி தாக்கப்பட்ட வழக்கில் வக்கீல் கைது. 19 பேர் மீது வழக்கு பதிவு.
***********
தனது 61-வது பிறந்தநாளை ஒட்டி 61 ஜோடிகளுக்கு இலவச திருமணம். சென்னையில் ஜெயலலிதா இன்று நடத்தி வைக்கிறார்.
**********
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வக்கீல்கள் மீது நடவடிக்கை. போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்.
************
சிங்கப்பூரில் இருந்து ரூ.1 1/2 கோடி தங்க நகைகளை கடத்தி வந்த தொழில் அதிபர் பிடிபட்டார்.
************
நியூசிலாந்து சுற்றுப்பயணம் கடினமாக இருக்கும். பயணம் புறப்படும் முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி பேட்டி.
**********
துபாய் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்த இந்தியாவின் சானியா மிர்சா இரட்டையர் பிரிவிலும் தோல்வி.
**********
திரைப்பட இயக்குனர் சீமானை கைது செய்ய அவர் வீட்டு வாசலில் காத்து இருக்கும் புதுச்சேரி போலீசாரின் தனிப்படை.
***********
விரைவில் கேப்டன் டி.வி. - விஜயகாந்த் அறிவிப்பு.

அதிரடி திகில் சிறுகதை

நண்பர்களே. நான் சமீபத்தில் எழுதிய ஒரு அதிரடி திகில் சிறுகதையை படிக்க இங்கே செல்லுங்கள்.

www.jokkiri.blogspot.com

இன்றைய செய்திகள் - 17.02.09

மத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள், வரிச்சலுகை இல்லை. அடித்தள மக்களின் வாழ்வில் தொடர்ந்து ஒளி ஏற்றும் பட்ஜெட் என கருணாநிதி பாராட்டு.
**********
ரூ.750 கோடி செலவில், நாலாவது கட்டமாக இலவச டி.வி.கொள்முதல் செய்யப்படுகிறது, மு.க.ஸ்டாலின் தகவல்.
***********
தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை க.அன்பழகன் இன்று தாக்கல் செய்கிறார்.
***********
பொது வேலை நிறுத்தம் செய்வது அரசியல் கட்சிகளின் உரிமை, அதில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பு.
***********
சீன என்ஜினியரை விடுவிப்பதற்காக 16 தலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான் அரசு.
***********
இங்கிலாந்து-பிரான்ஸ் நீர்மூழ்கி கப்பல்கள் கடலில் மோதல்.
***********
சத்யம் நிறுவனத்தின் தணிக்கை அறிக்கை போல் மத்திய பட்ஜெட் உள்ளது என்று பா.ஜனதா விமர்சனம்.
**********
ஹிந்தி நடிகர் ஷாருக்கானுக்கு ஆபரேஷன். மும்பை ஆஸ்பத்திரியில் நடந்தது.
***********
வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.
************
தமிழக கடலோர பாதுகாப்பு மேலும் வலுப்பெறுகிறது. இந்திய கடற்படைக்கு மேலும் 2 அதிநவீன போர்க்கப்பல்கள். சென்னையில் கவர்னர் அறிமுகம் செய்து வைத்தார்.
************
குடும்ப அரசியலில் இருந்து விலக அமெரிக்க மக்களிடம் இருந்து இந்திய மக்கள் பாடம் பயில வேண்டும். புத்தக வெளியீட்டு விழாவில் நரேந்திர மோடி பேச்சு.
************
ஆப்பரேஷன் செய்த தையல் பிரிக்கும் முன்பே பணிகளை கவனிக்கும் முதல் அமைச்சர் கருணாநிதி. படுக்கையில் இருந்தவாறே கோப்புகளை பார்க்கிறார். (தலையோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா??)
*************
தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரம். வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் கொடுக்கப்பட்டு விடும் என்று நரேஷ் குப்தா பேட்டி.
*************
இலங்கையில் போரை நிறுத்த மனிதச்சங்கிலி. பா.ம.க.வினருக்கு ஜி.கே.மணி வேண்டுகோள்.
**************
பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு எம்.ஜி.ஆர்.விருது. 21-ம் தேதி வழங்கப்படும் என்று ஆர்.எம்.வீரப்பன் அறிவிப்பு.
*************
பொருளாதார நெருக்கடியை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை என்று ஜெ.ஜெயலலிதா தெரிவித்தார்.
*************
சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடினார் இல கணேசன்.
*************
மார்ச் 1-ம் தேதி ஏ.ஆர்.ரகுமானுக்கு சினிமா இசையமைப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா.
**************

அதிரடி விஞ்ஞான சிறுகதைகள்

சில விஞ்ஞான சிறுகதைகள் உங்கள் பார்வைக்காக.

எனது கிவ்வாய் கிரக அனுபவம்
மூன்றாவது கை
யோதா - 3756478

இங்கே போய் பாருங்கள்

www.jokkiri.blogspot.com

உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

இன்றைய செய்திகள் - 12.02.09

சிங்கள ராணுவ தாக்குததில் 1000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பழி. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்.
****************
ஆப்கனிஸ்தானில் அரசு அலுவலங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டதில் 19 பேர் பலி, 54 பேர் படுகாயம்.
****************
மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி முகம்மது அஜ்மல் மீது பாகிஸ்தானில் வழக்குப்பதிவு.
******************
மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி, செருப்பு, கடிகாரம் ஏலம். அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கிறது.
********************
வங்காளதேச புதிய ஜனாதிபதி முகம்மது ஷில்லூர் ரகுமான் போட்டியின்றி தேர்வு.
*******************
ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு..ஏ.ஈ.) கடந்த ஒரு மாதத்தில் 55 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று தகவல்.
*******************
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவாக இருக்கிறது என்று போலந்து குற்றம் சாட்டி உள்ளது.
******************
மலேசியாவில் இந்தியர்களின் உரிமைக்காக போராடிய ஹிந்த்ராப் அமைப்பை சேர்ந்த 5 தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டப்படி கைதாகி 2 ஆண்டுகள் சிறையில் அடைப்பு. அவர்களை விடுதலை செய்வதில் தலையிட முடியாது என்று பெடரல் கோர்ட் தெரிவிப்பு.
*******************
ஒபாமாவை கொல்ல முயற்சி. துப்பாக்கியுடன் வந்த 64 வயது அல்பிரெட் பிராக் என்பவர் கைது. இவர் லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
******************
ராக்கிங்கை தடுக்க தவறும் கல்லூரிகளுக்கு அரசு நிதி உதவியை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
*****************
பொதுத்தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்.
****************
ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டர் விபத்து தவிர்ப்பு. ஹெலிகாப்டர் விமானி மீது தவறு இல்லை என்று விமானப்படை தளபதி பேட்டி.
***************
தன் காதலர் கிறிஸ்டோபர் டோர்ரிஸ் என்ற அமெரிக்கரை, பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா மணக்கிறார்.
****************
கருணாநிதிக்கு முதுகு தண்டவடத்தில் ஏற்பட்ட வலிக்காக நடந்த 3 மணி நேர ஆபரேஷன் வெற்றி.
*****************
தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 3,000 பேர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். ******************
ஒரு பவுன் தங்கம் 10,672 ஆக உயர்வு.
******************
சமீபத்திய இந்திய-இலங்கை தொடரின் தோல்விக்கு பொறுப்பேற்று ஜெயவர்தனே காப்டன் பதவியை ராஜினாமா செய்கிறார்.
*******************
தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. ஐ.சி.எல்.வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
********************

சூப்பர் ஸ்டார் ரசித்த இரண்டு திரைப்படங்கள்

ரஜினி வாழ்த்து - நான் கடவுள், வெண்ணிலா கபடி குழு படக்குழுவினருக்கு.






சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரசித்த இரண்டு திரைப்படங்கள்
வெண்ணிலா கபடி குழு
நான் கடவுள்

படத்தை ரசித்ததோடல்லாமல், படக்குழுவினரை வாழ்த்திய சூப்பர் ஸ்டாருக்கு என் சல்யூட்.

அப்படியே நான் கடவுள் பட டைரக்டர் பாலாவுக்கு, படத்தை பாராட்டி தன் கைப்பட ஒரு வாழ்த்து கடிதமும் எழுதி விட்டார். நல்ல விஷயங்களை, தான் ரசிப்பதோடு மட்டும் அல்லாமல், அதற்கு வாழ்த்தும் தெரிவிப்பது சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

இன்றைய செய்திகள் - 09.02.09

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இலங்கை அரசை மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.
**********
இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜனநாயக முறையில் தீர்வு காண வலியுறுத்தி, மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மாபெரும் பேரணி.
***********
இலங்கை போர்கப்பல் மூழ்கடிப்பு. விடுதலைபுலிகளின் கடற்படை தாக்குதல்.
*************
மும்பை தாக்குதல் தொடர்பான இந்தியாவின் ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் இன்று பதில் அளிக்கிறது. ஐரோப்பாவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்.
*************
பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட இங்கிலாந்து தீவிரவாதிகளால், அமெரிக்காவுக்கு ஆபத்து.
*************
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீக்கு 84 பேர் பலி.
**************
போலந்து நாட்டு என்ஜினியர் தலை துண்டித்து கொலை. தாலிபான்கள் அட்டூழியம்.
*************
ஒரே குடும்பத்தை முன்னிறுத்துவது எதிர்கால இந்தியாவுக்கு ஆபத்து. காங்கிரஸ் மீது நரேந்திர மோடி கடும் தாக்கு.
*************
ஓய்வூதியத்தில் அதிருப்தி. விருதுகளை திருப்பி அளித்தனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.
*************
ஹாவேரி அருகே விபத்து. பெங்களூரில் ரயில் தடம் புரண்டது. 8 பேட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின.
*************
வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.
*************
இருதய ஆப்பரேஷன் செய்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தையல் பிரிக்கப்பட்டது.
*************
இலங்கை தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்த ஆண்டு, என் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
**************
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதியை ஏற்றினார்.
**************
இலங்கை பிரச்சனை தொடர்பான மாற்று கட்சிகளின் இழிவு பேச்சு. உடல் தாங்குகிறதே, உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும் - கருணாநிதி வேதனை.
***************
நடிகர் பிரபு மகள் திருமணம். ரஜினிகாந்த், கமலஹாசன் நேரில் வாழ்த்து.
***************
கைக்குழந்தைகளுடன் வந்து பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த 3 பெண்கள் கைது.
****************
சென்னை நகரில், விடுமுறை நாட்களில் கூட எங்கு பார்த்தாலும் "எம்" சர்வீஸ் பஸ்கள். அதிக கட்டணத்தால் அவதி - பொதுமக்கள் புகார்.
****************
5 போட்டிகள் கொண்ட இந்திய-இலங்கை கிரிக்கெட் தொடரின், கடைசி போட்டியில், இலங்கை ஆறுதல் வெற்றி. இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. யுவராஜ் தொடர் நாயகன் விருது பெற்றார்.
***************
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட். இங்கிலாந்து 51 ருன்னில் சுருண்டு, இன்னிங்க்ஸ் தோல்வி.
*************
3-வது ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
**************

வசூ‌‌லி‌ல் டாப் 5 படங்கள்

இந்த வருடம் சோம்பலுடன் தொடங்கியிருக்கிறது. சூப்பர் ஹிட் எதுவும் இதுவரை இல்லை. நான் கடவுள் தான் ஒரே நம்பிக்கை. பொங்கல் படங்களில் படிக்காதவனுக்கே முதலிடம். தளபதிக்கு அதே இரண்டாவது இடம்.

5. காதல்னா சும்மா இல்லை

இரண்டு வாரங்கள் முடிவில் சென்னையில் 37 லட்சங்கள் வசூலித்துள்ளது. சென்றவார வசூல் நான்கு லட்சங்களுக்கும் கீழ். தோல்வியின் விளிம்பில் தத்தளிக்கிறது ரா‌ஜ் டிவியின் முதல் தயா‌ரிப்பு.

4. அபியும் நானும்

ஆறாவது வாரத்தில் நான்காவது இடம். சென்றவார வசூல் ஏறக்குறைய ஐந்து லட்சங்கள். இதுவரை 1.35 கோடி வசூலித்திருந்தாலும், படத்தின் தரத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு.

3. வெண்ணிலா கபடி குழு

பிரபலங்கள் யாருமின்றி வெளியான முதல் மூன்று நாட்களில் பத்து லட்சங்கள் வசூலித்திருக்கிறது சுசீந்திரனின் இந்தப் படம். விமர்சன தி‌ரியாக பேசப்படுவதால் வரும் நாட்களில் வசூல் அதிக‌ரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. வில்லு

சென்ற வாரம் இருபது லட்சங்கள் வசூலித்திருக்கிறது வில்லு. படத்தின் பட்ஜெட்டுடனும், விஜய்யின் ஸ்டார் வேல்யூவுடனும் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. இதுவரை சென்னையில் 2.2 கோடி மட்டுமே இப்படம் வசூலித்திருப்பது கவலைதரும் விஷயம்.

1.படிக்காதவன்

விளம்பரத்தின் அத்தனை அனுகூலமும் படிக்காதவனுக்கு சித்தித்திருக்கிறது. சென்றவாரம் 28 லட்சங்கள் வசூலித்த இந்தப் படம் இதுவரை 2.4 கோடிகளை தனதாக்கியிருக்கிறது. மூன்று வாரங்களில் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
***************
நன்றி : வெப்துனியா

இன்றைய செய்திகள் - 08.02.09

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் 1000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலி.
*****************
ஈழ தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசின் மூலமாக செயல்படுவதுதான் ஒரே வழி என்று க.அன்பழகன் கூறினார்.
******************
இலங்கையில் போரை நிறுத்தக்கோரி நாகை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் தீக்குளித்து இறந்தார்.
*******************
அமெரிக்கவாழ் இந்தியரான நிக்கோலஸ் ரத்தோட் என்பவருக்கு அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
*******************
அணு விஞ்ஞானி காதிர்கான் விடுதலையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பதில்.
*******************
பிரபல கன்னட நடிகர் வினோத்ராஜ் நேற்று, பெங்களூரில் தனது தாயாருடன் காரில் சென்றபோது அவரை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. இதில் வினோத்ராஜ் உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெங்களூர் நகரின் மையப்பகுதியான மெஜஸ்டிக் பகுதியில், பட்டப்பகலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
*******************
மும்பை தாக்குதல் - பாகிஸ்தானிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
********************
உடல்நிலை தொடர்ந்து மோசம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தொடர்ந்து செயற்கை சுவாசம். சோனியா காந்தி நேரில் சென்று பார்த்தார்.
********************
மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சியுடன் நடந்த மோதலில் 5 பேர் படுகொலை.
********************
டெல்லியில் கடும் பனிமூட்டம். விமானத்துக்குள் 7 மணிநேரம் பயணிகள் தவிப்பு.
********************
காதலர் தின கொண்டாட்டங்களை அனுமதிக்க மாட்டோம். பெங்களூர் மாணவர் அமைப்பு தலைவர் அறிவிப்பு.
********************
நடிகை நயன்தாரா லிங்குசாமியிடம் இருந்து பெற்ற அட்வான்ஸ் தொகையை திருப்பி தந்து விட்டதால், அவரின் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கியது.
*******************
தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடலூரில் இன்று ஜோதி தரிசனம். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள்.
*******************
அனைத்துக்கட்சியினரும், பொதுமக்களும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தல்.
******************
"செந்தூர் எக்ஸ்பிரஸ்" ரெயில் இன்று துவக்கம். திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இன்று கோலாகல விழா. மத்திய மந்திரி லாலுபிரசாத் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்.
******************
லெஸ்பியன் உதவி மையம் தொடங்கப்பட்டது. எங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கொடுங்கள் - சென்னையில் லெஸ்பியன் பெண் பேட்டி (நாடு வெளங்கிடும்டா மக்கா!!!!).
*******************
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த கோரி, சென்னையில் கத்தோலிக்க கிருஸ்துவர்கள் மவுன ஆர்ப்பாட்டம். கண்களில் கருப்பு துணி கட்டி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
******************
வாகனக்கடனில் வண்டி வாங்கியோர் இரு மாதம் தவணை செலுத்த தவறினால், வாகனத்தை பறிமுதல் செய்யும் சட்டம் விரைவில் அறிமுகம்.
****************
விடுதலைப்புலிகளை யாராலும் வெல்ல முடியாது. தமிழ் ஈழம் மலர்ந்தால் தான் இலங்கையில் கால் வைப்பேன் - டாக்டர் ராமதாஸ் பேச்சு.
***************
பிராமணர்களின் நலனுக்காக புதிய அமைப்பு - நடிகர் எஸ்.வி.சேகர் துவக்கினார்.
**************
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை ஏழை விதவை பெண்கள் மற்றும் ஊனமுற்றோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
**************
இந்திய - இலங்கை இடையேயான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தியா ஏற்கனவே நடந்த 4 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**************
4 நாடுகள் ஹாக்கி. இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்.
**************
நியுசிலாந்திற்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி. ரிக்கி பாண்டிங்கிற்கு அவசர அழைப்பு.
***************

இன்றைய செய்திகள் - 07.02.09

இலங்கை தமிழர் பிரச்சனை. டெல்லியில் இருந்தபடி, ராஜபக்சேயுடன் ஐ.நா.பொதுச்செயலாளர் டெலிபோனில் பேச்சு. அப்பாவி தமிழர்களின் நலம் பற்றி விசாரித்தார்.
*************
பாகிஸ்தானில் 52 தீவிரவாதிகள் பலி. இராணுவம் அதிரடி தாக்குதல்.
**************
இந்திய நிருபர்கள் பாகிஸ்தானில் தாக்கப்பட்டனர்.
***************
இலங்கை பிரச்சனையை இராணுவம் கொண்டு தீர்க்க முடியாது. அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்படுவதை இந்தியா தலையிட்டு உடனடியாக தடுக்க வேண்டும். தேசிய செயற்குழு கூட்டத்தில் பா.ஜனதா வலியுறுத்தல்.
***************
டெல்லி ஆஸ்பத்தியில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு செயற்கை முறையில் சுவாசம். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பார் என்று டாக்டர்கள் தகவல்.
****************
வயலார் ரவி உட்பட 5 பேர் போட்டியின்றி டெல்லி மேல் சபைக்கு தேர்வு.
****************
இலங்கை தமிழர்களை பாதுகாக்க அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றுபடுவோம் என்று கலைஞர் கருணாநிதி அழைப்பு.
****************
தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு / சவரனுக்கு ரூ.104 கூடி ரூ.10,536-க்கு விற்பனை ஆனது.
****************
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீ வைப்பு.
*****************
முதுகுவலி அதிகமானதால் கலைஞர் கருணாநிதிக்கு, இன்று வெளிநாட்டு டாக்டர் சிகிச்சை அளிக்கிறார்.
*****************
எல்லோரும் இணைந்து போராடும்போது ஆட்சிக்கு ஆபத்து என்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்று கலைஞர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் பதில்.
******************
முன்னணியில் உள்ள பிரபல கதாநாயகனை வைத்து மீண்டும் நம் நாடு படத்தை தயாரிக்க ஆசை என்று நாகிரெட்டியின் மகன் வெங்கடராம ரெட்டி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த தாமிரபரணி மற்றும் தனுஷ் நடித்த பொல்லாதவன் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தவர்.
*******************
ஐ,.பி.எல்.கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் பிளிண்டாப் தலா ரூ.7 கோடிக்கு ஏலம் (இந்தியா ஏழை நாடுன்னு யார் சொன்னது ??).
******************
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் நியூஜிலாந்து அபார வெற்றி. இதன் மூலம் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியின் தர வரிசையில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
******************
4 நாடுகள் இடையிலான பஞ்சாப் கோப்பைக்கான ஹாக்கி தொடர் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் நேற்று இந்திய உலக சாம்பியன் ஜெர்மனியிடம் 2-4 என்ற கோல் கணக்கில் தனது முதல் தோல்வியை கண்டது.
*******************

இந்தியாவில் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!

இந்திய பொதுத் தேர்தலோடு பெரும் சோதனையும் சேர்ந்தே வருகிறது. ஆம்.. இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 10 மில்லியன் மக்கள் அதாவது ஒரு கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி 22 சதவிகிதம் குறைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த அளவு மேலும் கூடக் குறையலாம். எனவே இப்போதே 400 க்கும் மேற்பட்ட உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இவற்றில் பணியாற்றிய 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்துவிட்டனர். மேலும் 5 லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. 40 லட்சம் முழுநேர / பகுதி நேர தொழிலாளர்கள் ஏற்கெனவே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பணியில் இருப்பதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

"இதுவும்கூட இன்னும் சில மாதங்கள் வரைதான். எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் முடிந்தவரை எங்கள் தொழிலாளர்களை காப்பாற்றவே முயல்கிறோம். குறைந்த சம்பளத்துடனாவது அவர்களை வைத்திருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அதற்குக் கூட வழியில்லாத அளவுக்கு ஏற்றுமதி குறைந்துவிட்டது. உள்நாட்டில் சப்ளை செய்யலாம் என்றால், இங்கே வெளிநாட்டுப் பொருட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. என்ன செய்வதென்றே புரியவில்லை.

பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள கார்மென்ட்ஸ் தொழில் முழுவதுமாக படுத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என்று அகில இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அபாயத்தை நன்கு உணர்ந்துள்ளதாகவும், இதைத் தடுக்க முடிந்தவரை அதிக நிதி உதவி அளித்து வேலை இழப்பைத் தடுக்க முயற்சிப்போம் என்றும் மத்திய நிதித்துறைச் செயலாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

பெருமூச்சு விடாமல் படியுங்கள் - உலக பணக்காரர்கள் பட்டியல் (டாப் 10)



லக்ஷ்மி மிட்டல்



முகேஷ் அம்பானி



அனில் அம்பானி

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டாப் 10 பணக்காரர்கள் வரிசையில் இந்தாண்டும் 4 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானிக்கு 3வது இடமும், அனில் அம்பானிக்கு 6வது இடமும் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி 3வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 78,792 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 7வது இடத்திலிருந்த அவரது தம்பி அனில் அம்பானிக்கு ஒரு இடம் முன்னேறி 6 வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 44,100 கோடி ரூபாயாகும்.
கடந்தாண்டு இரண்டாவது இடத்தில் இருந்த லட்சுமி மிட்டல் இம்முறை நான்காவது இடம்பிடித்துள்ளார்.
பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் முதல் முறையாகப் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. இந்திய ரூபாயில் அவரது சொத்து மதிப்பு 29,841 கோடி.

கடந்தாண்டு 9வது இடத்தில் இருந்த விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு தற்போது டாப் 10 பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான வாரன் பப்பெட் தொடர்ந்து முதலிடத்தையும், ஆரக்கிள் நிறுவனத் தலைவர் லாரி எல்லிஸன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

இன்றைய செய்திகள்

இன்றைய செய்தி கோர்வை - நன்றி அனைத்து ஊடகங்கள்

ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து அப்பாவி தமிழர்களை காப்பாற்றுவது பற்றி நடவடிக்கை எடுக்க ஐ.நா.தூதர் இலங்கை விரைகிறார்.
*********
இலங்கையில் அரசும், விடுதலை புலிகளும் போரை நிறுத்தி விட்டு, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
**********
அமெரிக்காதான் முஸ்லிம்களின் முதல் எதிரி - அல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி.
**********
ஸ்பெயின் நாட்டில் அல் கொய்தாவுடன் தொடர்பு உடைய நான்கு இந்தியர்கள் கைது.
*********
சூரிய கிரகத்திற்கு வெளியே புதிய கிரகம் (ராஜேந்தர், விஜயகாந்த் அல்ல) - ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சியை சேர்ந்த மால்கம் பிரிட்லன்ட் தெரிவித்தார்.
**********
பாகிஸ்தானில் முப்பது போலீஸ்காரர்களை தாலிபான்கள் கடத்தி சென்றனர்.
பாபர் மசூதி இடிப்புக்கு மன்னிப்பு கேட்கிறேன் - உத்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்.
************
நவீன் சாவ்லாவை நீக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு - எல்.கே.அத்வானி.
***********
பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி டெல்லியில் தேர்தல் கமிஷனர் கோபால்சாமியை சந்தித்து தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்களுக்கு பொது சின்னத்தை ஒதுக்கும்படி கேட்ட போது, அங்கீகரிக்கப்பட்ட காட்சிகளுக்கு மட்டுமே பொது சின்னம் ஒதுக்கப்படும் என்று கோபால்சாமி தெரிவித்தார். தேர்தல் கமிஷனின் இந்த முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று சிரஞ்சீவி தெரிவித்தார்.
*********
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்னும் நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.
**********
உ.பி.யில் சிறுமி சித்திரவதை. போலீஸார் கோர்ட்டில் சரணடைந்தனர்.
**********
தமிழகத்தில் போது வேலை நிறுத்தம். பஸ், ரயில் வழக்கம் போல ஓடின. ஒரு சில இடங்களில் வன்முறை. சில இடங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடல். திருத்துறைபூண்டியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.உலகநாதன் உட்பட 24 பேர் கைது.
************
தமிழ் படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு தடை - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் அறிவிப்பு.
***********
சென்னையில் நடிகர் வடிவேலு மேனேஜர் வேலுச்சாமி (வயது 50) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் நடிகர் வடிவேலுவின் கால்ஷீட் மற்றும் வரவு செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார்.
***********
மத்திய ஜவுளித்துறை இணை மந்திரி ஈ.வி.கோ.எஸ்.இளங்கோவன்-வரலட்சுமி ஆகியோர் மகன் சஞ்சய் சம்பத்துக்கும் ராணிப்பேட்டை தொழிலதிபர் ஜி.ராதாகிருஷ்ணன்-ஜெகதா தம்பதியரின் புதல்வி தீபலக்ஷ்மிக்கும் சென்னையில் ௧-ந் தேதி திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண அரங்கில் நடைபெற்றது.
***********
தமிழின கொலைகளை மத்திய அரசு தடுக்க தவறினால், பாராளுமன்ற தேர்தலை அனைத்து கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை.
**********
இந்திய-இலங்கை இடையே 4-வது ஒரு நாள் பகலிரவு போட்டி - கொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று விட்ட இந்தியா, இதுவரை ஆடுவதற்கு வாய்ப்பு பெறாத வீரர்களை களமிறக்க உள்ளதாக கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
************
4 நாடுகள் ஹாக்கி - ஹாலந்துடன் இந்தியா மீண்டும் டிரா.
***********
பொதுவான இடத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது.
************
ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் கோப்பையை இந்தியாவின் மகேஷ் பூபதியுடன் இணைந்து வென்ற சானியா மிர்சாவை ஆந்திர முதல் மந்திரி டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி புதன்கிழமை ஹைதராபாத்தில் கௌரவித்தார்.

ஒரு மெகா காமெடி

நண்பர்களே

ஒரு மெகா காமெடியை கண்டுகளிக்க / படித்து ரசிக்க, உடனே செல்லுங்கள் :

http://www.jokkiri.blogspot.com/

இன்றைய செய்திகள்

பல்வேறு ஊடகங்களின் மூலம் வெளிவந்த பல செய்திகளின் தொகுப்பே இங்கே நீங்கள் கீழே காணும் செய்தி கோர்வை. (நன்றி - அனைத்து ஊடகங்கள்)
***************************************************
டில்லியில் இரண்டாவது மெட்ரோ லைன் பாதையில் இன்று ரயில் போக்குவரத்து துவக்கப்படுகிறது. இதை டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் துவக்கி வைக்கிறார்.
********
சதி பண்ணுவது, பழி வாங்குவதும் எனக்கு தெரியாத கலை. அதற்கு ஒட்டு மொத்த குத்தகைக்காரர் அவர்தான் (கருணாநிதிதான்) என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாற்றினார்.
**********
இலங்கையில் அமைதி ஏற்பட வழி காண வேண்டும். மத்திய அரசுக்கு கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்.
*********
இலங்கை தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதை கருணாநிதி நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
**********
நெல்லை நதிநீர் இணைப்பு திட்ட துவக்க விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேண்டும் என நதிநீர் இணைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
***********
தி.மு.க. அ.தி.மு.க. இடம் பெறாத கூட்டணியுடன், தே.மு.தி.க கூட்டணி. - விஜயகாந்த் திட்டவட்டம்.
***********
சத்யம் ஊழியர்களுக்கு தவணை முறையில் சம்பளம் தர அதன் நிர்வாகம் முடிவு.
***********
நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
***********
காசியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - தொழிலதிபர் மகாலிங்கம் ஏற்பாடு.
***********
ரயில், பஸ் இன்று வழக்கம் போல் ஓடும். போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்லி யாரவது வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.
***********
அமெரிக்காவின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஹிலாரி க்ளிண்ட்டன் நேற்று பதவியேற்றார்.
***********
பிரிட்டனில் ஒரு வார சுற்று பயணம் மேற்கொண்ட சீன பிரதமர் வென் ஜியாபாவோ நேற்று கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் உரை நிகழ்த்தும் போது அவரின் மீது ஷூ வீசப்பட்டது. ஆனால், அது அவர் மீது படாமல் ஒரு மீட்டர் தூரத்தில் விழுந்தது. இந்த சம்பவத்திற்கு சீன நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
*************
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் ஒன்றை தாலிபான்கள் வெடி வைத்து தகர்த்தனர். இதனால், நேட்டோ மற்றும் அமெரிக்க படையினருக்கு பாகிஸ்தானில் இருந்து உணவு எடுத்து செல்வது தடைபட்டுள்ளது.
***************
இந்திய இலங்கை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டம் கொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. யுவராஜ் மற்றும் சேவாக் (116 ரன்கள், 17 பௌண்டரிகள்) இருவரின் அதிரடி சதத்தால் இந்திய அபார வெற்றி பெற்றது. தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக 117 ரன்கள் (97 பந்துகள், 17 பௌண்டரிகள் மற்றும் 1 சிக்சர்) விளாசிய யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
************
ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் நடிகை ஷில்பா ஷெட்டி 75 கோடி முதலீடு (இவங்களுக்கு ஏது இவ்வளவு பணம்??). ராஜஸ்தான் அணியின் 12 சதவீத பங்குகளை வாங்கினார்.
***********
பஞ்சாப் தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டி தொடர் சண்டிகரில் நடந்து வருகிறது. இந்த 4 நாடுகள் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியுசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஹாலந்துடன் டிரா செய்தது. நேற்று ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனியை ௨-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்திய அணியில் திர்கே மற்றும் பிரப்ஜோத் சிந்த் தலா ஒரு கோல் அடித்தனர்.
************************************************************

பதில் இல்லா கேள்விகள் :

இலங்கை தமிழர் பிரச்சினை - கல்லூரிகள் காலவரையற்ற மூடல்

படிக்கும் மாணவ, மாணவர்களின் எதிர்காலம் பற்றிய இன்றைய தமிழ் பற்றாளர்கள், ஆட்சியாளர்களின் நிலை என்ன?? அரசாங்கம் இலங்கை பிரச்சினையை சரியாக கையாள தெரியாமல், திருமா, ராமதாஸ், கொளத்தூர் மணி, வீரமணி, நெடுமாறன், சீமான், அமீர் உள்ளிட்டோரின் மிரட்டலுக்கும், அதட்டலுக்கும் பயந்து இதுபோன்றதொரு நிலையை எடுத்துள்ளதா?

திருமா உண்ணாவிரதம் :

யாருடைய தூண்டுதல் பேரிலும் நடக்கும் எந்த அநியாயத்துக்கும், தூண்டியவர் பொறுப்பாவார் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பின் படி, திருமா உண்ணாவிரதம் இருந்த போது, நடந்த வன்முறை, அதன் விளைவாக எரிந்த பேருந்துகள், பொதுசொத்து நாசம் போன்றவற்றிற்கு திருமா பொறுப்பாவாரா?? கைது செய்யப்படுவாரா?? நஷ்ட ஈடு வழங்குவாரா??
காங்கிரசார் கூறுவது போல், விடுதலை புலிகளை ஆதரித்து பேசும், திருமா கைது நடக்குமா?? அரசு என்ன செய்ய போகிறது??

திருமங்கலம் கள்ள வோட்டு பிரச்சனை :

தேர்தல் நேரம் முடியும் கடைசி ஒரு மணி நேரத்தில் முப்பது முதல் நாற்பது சதவீத வாக்குப்பதிவு இனிவரும் தேர்தல்களிலும் தொடருமா?? அண்ணன் அழகிரியை எதிர்த்து யாரும் மதுரையில் அரசியல் செய்ய முடியாதா?? தேர்தல் ஆணையம் என்று ஒன்று உள்ளதா?? (திருமங்கலம் தொகுதி பீஹாரை மிஞ்சியது என்று தேர்தல் ஆணையரை சொல்ல வைத்த பெருமை அண்ணன் அழகிரிக்கு உண்டு).

தமிழ், தமிழ் :

இந்த மூன்றெழுத்தை வைத்து கொண்டு இன்னும் யார் யார் என்ன செய்ய போகிறார்களோ?? ஏற்கனவே திருமா, நெடுமாறன், மருத்துவர், வைகோ, வீரமணி, கலைஞர், கொளத்தூர் மணி, சீமான் போன்ற தீவிரர்கள் செய்யும் அநியாயமும், அட்டகாசமும் தாங்க முடிய வில்லை... எத்தனை நாள் கடை அடைப்போ, எத்தனை நாள் கல்லூரி அடைப்போ??

விடுகதையா இந்த வாழ்க்கை, விடை தருவார் யாரோ???

இன்றைய செய்திகள்

பின்வரும் செய்திகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட செய்தி தொகுப்பு ஆகும் (நன்றி - செய்திகள் தந்த அனைவருக்கும்)
-------------------------------------------------------------------------------------------
டிரைடன்ட் ஹோட்டலின் 16வது மாடியிலிருந்து குதித்து ரஷ்யர் தற்கொலை

மும்பை: மும்பையில் உள்ள டிரைடன்ட் ஹோட்டலில் இன்று ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான டிரைடன்ட் ஹோட்டல் சமீபத்தில்தான திறக்கப்பட்டது.
பல மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலின் 16வது தளத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் அலெக்சாண்ட்ர என்ற ரஷ்ய நாட்டவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் ஹோட்டலின் நீச்சல்குளப் பகுதியில் காணப்பட்டது.
--------------------------------------------------------------------------------------
பந்த்தின்போது சிறிதளவும் வன்முறை கூடாது: பழ. நெடுமாறன்

இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்படும் பொது வேலைநிறுத்தத்தின்போது சிறிதளவும் வன்முறை நிகழ்ந்து விட இடம் தரக் கூடாது என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------அமெரிக்காவுக்கு ஒபாமாவின் 819 பில்லியன் டாலர் பேக்கேஜ்!

வாஷிங்டன்: இனி வரும் மாதங்கள் அமெரிக்காவுக்கு பெரும் சோதனைக் காலமாகவே இருக்கும் என அந்நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
படுபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும், அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்த பல்வேறு சலுகைகளை அறிவிக்கத் தயாராகி வருகிறார் பாரக் ஒபாமா. முதல் கட்டமாக மிகப்பெரிய தொகையை (819 பில்லியன் டாலர்கள்) பல்வேறு துறைகளுக்கும் நிதிச் சலுகையாக அளித்து, முடங்கிக் கிடக்கும் தொழில்களை மீண்டும் இயங்க வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
------------------------------------------------------------------
சாயல்குடியில் குடிநீர் பஞ்சம் - குடம் ரூ.4க்கு விற்பனை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடம் தண்ணீர் ரூ. 4க்கு விற்கப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சாயல்குடி பகுதியில் சமீபத்தில் நல்ல மழை பெய்தும் கூட எந்த கண்மாயும் நிரம்பவில்லை. இதனால் கிணறுகளில் நீர்மட்டமும் உயரவில்லை.
இந்நிலையில் சாயல்குடி டவுனில் குடிநீர் ஊரணியோ, பேரூராட்சி கட்டுப்பாட்டில் போர் வசதியோ செய்து தரவில்லை.

ராஜகம்பீரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குடிநீரும் சாயல்குடி நகர் பகுதிக்கு சரிவர வருவதில்லை. நரிப்பையூரின் உப்பு நீரை நண்ணீராக்கும் திட்டத்தின் மூலம் வரும் தண்ணீரையும் பொதுமக்கள் குடிநீராக பருகுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சாயல்குடி டவுனில் குடிநீர் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது.

இந்நிலையில் ஆற்றுப்பகுதியில் இருந்து டிராக்டர் மூலம் எடுத்துவரப்பட்ட குடிநீர் ரூ.4க்கு ஒரு குடம் என்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது
-----------------------------------------------------------------------
ஹாக்கி: இந்திய வெற்றியை தடுத்தது நெதர்லாந்து - போட்டி டிரா

பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் இந்தியாதான் வென்றிருக்க வேண்டும். ஆனால் இந்திய வீரர்கள் செய்த கடைசி நேரத் தவறால் நெதர்லாந்து போட்டியை டிரா செய்து விட்டது.

சண்டிகரில் பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. முதல் லீக் போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
நேற்று இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வலிமை மிக்க நெதர்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா ஆட்ட நேரம் முடிய சிறிது நேரத்திற்கு முன்பு வரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெறும் தருவாயில் இருந்தது.

ஆனால், 2வது பாதி ஆட்டத்தின்போது இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் அதை கோலாக்க தவறினார் இந்திய கேப்டன் சந்தீப் சிங்.
இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட நெதர்லாநது வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி கடைசி நேரத்தில் இரு கோல்களடித்து 4-4 என்ற கோல் கணக்கில் போட்டியை டிராவில் முடித்து விட்டனர்.

இந்தியா சார்பில் சிவேந்திரா சிங் 2 கோல் அடித்தார். பிரபோத் சிங், எஸ்.வி. சுனில் தலா ஒரு கோல் அடித்தனர்.
------------------------------------------------------------------------
நாகேஷ் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல்

நகைச்சுவைத் திலகம் நடிகர் நாகேஷ் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கலைத் துறையில் புகழ் பெற்ற சிறந்த குணச்சத்திர நடிகரான நாகேஷ் இன்றைய தினம் (31-1-2009) இயற்கை அடைந்த செய்தினை அறிந்து பெருந்துயருற்றேன்.
தனிச்சிறப்பான நகைச்சுவையாலும் பல திறப்பட்ட நடிப்பாற்றாலும், தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர் அருமை நண்பர் நாகேஷ்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் மாறாத அன்பும், பாசமும் கொண்டவர். தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பேராதரவையும் மதிப்பையும் பெற்றவர்.
நாகேசின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------
நாகேஷ் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது: ஜெ.

நாகேஷ் விட்டுச் சென்றுள்ள இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. அவரது மரணம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பழம்பெரும் திரைப்பட நகைச்சுவை நடிகரும், நாடக நடிகருமான நாகேஷ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.

நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், கதாநாயகன், குணசித்திரம், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று திறம்பட நடித்தவர்.
அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள் ஆகும்.

அவரது இழப்பு திரைப்பட துறைக்கு மிகுந்த பேரிழப்பு ஆகும். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. நாடு ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டது.
நாகேஷினை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். - விஜய்யின் 50வது படம்!

வெளிப்படங்களை இயக்க நிறைய அழைப்பு வந்த போதும் மறுத்து வந்த ஜெயம் ராஜா முதல் முறையாக விஜய்யை வைத்து இயக்குகிறார்.

இப்போது அந்தச் செய்தியை ஜெயம் ராஜாவே உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

இதுவரை என் தம்பி ரவியை மட்டுமே வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்த நான் முதல்முறையாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குகிறேன் என்பது உண்மைதான். அது விஜய்யின் 50-வது படமா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் இது ரீமேக் அல்ல. ஒரிஜினல் ஸ்கிரிப்ட்தான். விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும், என ராஜா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை தயாரிப்பவர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன்.
போக்கிரிக்குப் பிறது அடுத்தடுத்து (அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு) ஹாட்-ட்ரிக் தோல்விப் படங்களாக அமைந்துவிட்டதால், தனது பாக்ஸ் ஆபீஸ் இமேஜை தக்க வைத்துக் கொள்ளும் நெருக்கடியில் உள்ள விஜய், இந்தப் படத்துக்கு தேர்வு செய்துள்ள தலைப்பு எம்ஜிஆர் என்கிறார்கள்.
-----------------------------------------------------------------------------
சென்னை எச்.பி.சி.எல். கிடங்கில் தீ விபத்து - பெரும் சேதம் தவிர்ப்பு

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின், கிடங்கில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான ஆயில் கேன்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டையில் மத்திய அரசின் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு உள்ளது.சென்னை துறைமுகத்திற்கு, கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அது மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பிரித்து எடுக்கப்பட்டு இங்கு சப்ளைக்கு வருகிறது.

இங்கு தினமும், தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு சுமார் 400 டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் எடுத்து செல்லப்படுகின்றன.

இங்கிருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 9.50 மணிக்கு லுப்ரிகண்ட் சேமிப்பு கிடங்கில் தீப்பற்றி கொண்டது.

இதையடுத்து அங்கு வேலையிலிருந்த அதிகாரி ராஜூ அருகிலிருந்த பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதில் 3 தீயணைப்பு வாகனங்களும், 15 மேற்பட்ட மெட்ரோ தண்ணீர் லாரிகளும் பயன்படுத்தப்ட்டன.ஆயில் பொருட்கள் தீப்பிடித்ததால் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால், `பார்ம்' என்ற ரசாயணத்தை தண்ணீருடன் சேர்த்து, அதன் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் பெட்ரோல் டேங்க் வெடிக்கப்போவதாக வதந்தி பரவியது. இதனால் உயிருக்கு பயந்த சிலர் வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.இந்த தீவிபத்தில் சுமார் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஆயில் கேன்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டதால், அருகில் உள்ள பெட்ரோல் கேன்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Sania-Bhupathi win Australian Open mixed doubles


Sania Mirza and Mahesh Bhupathi won the mixed doubles title at the Australian Open, beating Nathalie Dechy (France and Andy Ram (Israel) 6-3, 6-1 in the final in Melbourne on Sunday afternoon.

The ace Indian pair thus made up for the disappointment of last year when they were beaten by Tiantian Sun and Nenad Zimonjic in the final.

While Sania picked her maiden Grand slam title in the process, Bhupathi swelled his Grand Slam title collection in mixed doubles to seven.

Before Sunday's triumph he won six mixed doubles crowns with different partners, the last also at the Australian Open in 2006 when he had partnered Swiss Martina ஹிங்கிஸ்.

Sania and Bhupathi had an easier time than they may have expected. Ram was broken in the opening game and from then on there was nothing the French-Israeli pair could do to stop the Indians. Two more breaks, in the seventh and ninth games, and Sania and Bhupathi had the first set in their bag in 28 minutes.

The second set too was one-sided. Bhupathi kicked it off, winning at love. Then a break on Dechy's serve put the Indians high in the saddle at 3-1. Another break off Ram's serve and the Indians were cruising at 5-1.

Sania completed the formalities by serving out the seventh game for the set and match in 54 minutes.
Courtesy : www.rediff.com