கேப்டன் மற்றும் பெரிய கரடி ராஜேந்தர்

கேப்டன் மற்றும் பெரிய கரடி ராஜேந்தர் ஒரு கலந்துரையாடல்
----------------------------------------------------------------------------
கேப்டன் : வணக்கம் பெரிய கரடி ராஜேந்தர் அவர்களே

டி.ஆர் : படிக்காமலே டாக்டர் ஆனா சபரி அவர்களே. வணக்கம் ..
வணக்கம் வணக்கம் எனக்கு சொன்ன வணக்கம்
திருப்பி சொல்லு வணக்கம், சொன்னா ஒனக்கு இனிக்கும்

உங்கள ரொம்ப நாளா ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன்.
எல்லாரும் கேப்டன் கேப்டன்னு ஒங்கள சொல்றாங்களே .... நீங்க
கப்பல் கேப்டனா
ஆர்மி கேப்டனா
இல்ல கிரிக்கெட் டீம் கேப்டனா ??

கேப்டன் : பட்டம் குடுத்த ரகசியத்த மட்டும் கேக்காதீங்க ....
படிக்காட்டியும் நாங்க மேதை தான் ....
நீங்க நல்லா டமில் பேசறீங்க, எந்த கான்வென்ட்ல படிச்சீங்க ...
எட்டாம்பு முடிச்சாச்சுல்ல ......

டி.ஆர் : மொதல் கேள்வியே தப்பு.
கான்வென்ட்ல படிச்சா அது ஆங்கிலம்,
அரசாங்க பள்ளியில் படித்தால் அது தமிழ்.
மொதல்ல தமிழ், தமிழ்னு சொல்லி பழகுங்க ....
அப்புறம் எல்லாத்தையும் பத்தி யோசிப்போம் .......

கேப்டன் : அரசாங்க பள்ளியா ??
எனக்கு நான் நடிச்ச படம் அரசாங்கம் தான் தெரியும்.
அது சரி, பள்ளின்னா இஸ்கூல் தானே ........
கேப்டனுக்கு தெரியாத ஒரு விசயம் கூட இந்த ஒலகத்துல இருக்கா என்ன ??

டி.ஆர் : அது அரசாங்கம் இல்ல, அராஜகம்.
அது படம் அல்ல, பாடம் (எப்படி படம் எடுக்க கூடாதுன்ற பாடம்).
எப்படி எடுத்தாலும் இல்ல படம்
என்ன மாதிரி எடுத்தா தான் படம்
மிச்சது எல்லாம் பப்படம்
என் சொந்த ஊரு உக்கடம்

கேப்டன் : ஐயோ இவன் தொல்லைய ஆரம்பிச்சுட்டானே .... ஆமா ஆமா நீங்க இப்போ வீராசாமி படத்த பத்தி தானே சொன்னீங்க. நான் கூட கேள்விப்பட்டேன். தியேட்டர்ல இருந்த ரெண்டு பேரும் தூக்கு போட்டுடாங்கன்னு. இதெல்லாம் தேவையா கரடி ?? நீயும் இம்சை, உன் படமும் இம்சை ............ எல்லாத்தையும் நிறுத்து ......

டி.ஆர் : அது சரி .... நீங்க கூட இப்போ ஏதோ படம் நடிக்க போறீங்கன்னு செய்தி வந்ததே, அது சும்மா டகால்டி தானே. ஏன்னா ஒங்க படம் பாத்து இனிமே யாரும் பொழக்க போறது இல்ல. அந்த வெளம்பரத்த பாத்த ஒண்ணு ரெண்டு பேரும் இப்போ ஆஸ்பத்திரில.

வயசாயி போச்சே ... போனோமா வந்தோமா குவாட்டர் அடிச்சோமா தூங்குனோமான்னு இல்லாம ........ டன் டன்னா கயிறு வாங்கி, அதுல தொங்கி .... இதெல்லாம் தேவையா ?? என்ன கேப்டன் பேச்சையே காணும் ??

கேப்டன் : நெறைய பேசினா ஆச்சிய பிடிக்க முடியுமா ?? அதான் பேச்ச கம்மி பண்ண சொல்லி பிரேமாவும் சொல்லிச்சு .... சுதீஷ் கூட சொன்னான் ..... நம்ம ஆளுங்களும் சொல்றாங்க .... பார்ப்போம்

டி.ஆர் : மொதல்ல ஆச்சின்னு சொல்லாம, ஆட்சின்னு சொல்ல பழகுங்க .... தமிழ் கத்துகோங்க, அப்புறம் தமிழ்நாட்ட ஆட்சி பண்ணலாம் .... கெரகம்டா சபரி நீயி .....

(தொடரும்) ..........

2 comments:

Anonymous said...

//மிச்சது எல்லாம் பப்படம்
என் சொந்த ஊரு உக்கடம்//

தம்பிக்கு எந்த ஊரு ? கோவையா ??

Anonymous said...

Illai Bhuvanesh

I am from Chennai