நிலவரம் ரொம்ப கலவரம்

ஊரு பேரு முட்டம்
அந்த ஊருக்கு ஒரு திட்டம்
பறக்குதெங்க பட்டம்
அதை சுத்தி ஒரு வட்டம்

மன்னர் சென்றார் நகர்வலம்
அறிய சென்றார் நிலவரம்
கண்டால் எங்கும் கலவரம்

வட்டத்துள் ஒரு சதுரம்
குப்பிக்குள் தான் மதுரம்

ஊருக்குள்ளே ஆட்டை
போட்டான் அந்த பரட்டை
சட்டத்துள்ளே ஓட்டை
வெளியே வந்தான் பரட்டை
அவன் உடம்பெங்கும் மச்சம்
அவன் மச்சத்தில் மிச்சம்

ஊர் சொல்லும் பல பழி
ஊருக்கெல்லாம் ஒரே வழி
ஆனா அவன் வழி தனி வழி

No comments: