உடல் ஊனமுற்றோரும், மெய்ப்புலம் அறை கூவலரும்! - கைப்புள்ளையின் ஆதங்கமும்

சென்னை விமான நிலையத்தின் கழிவறைக்குச் செல்வோரை தலை சுற்றிகிறுகிறுக்க வைக்கும் வகையில் ஒரு தமிழ்ப் பலகையை வைத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோர்களுக்காகவே சிறப்பு கழிப்பறைஒன்று உள்ளது. அதன் வெளிக் கதவின் மேல் வைக்கப்பட்டுள்ள பலகையில், மெய்ப்புலம் அறைகூவலர் என்று எழுதி வைத்துள்ளனர்.
இதைக் காணும் பலருக்கும் இதன் அர்த்தம் சுத்தமாக புரியாமல் குழம்பியபடியே உள்ளே சென்று திரும்புகின்றனர்.

மெய்ப்புலம் அறைகூவலர் என்றால் உடல் ஊனமுற்றோர் என்று பொருளாம்.
பிசிகலி சேலஞ்ச்ட் என்று எழுதாமல் தமிழில் எழுத வேண்டியதுதான். உடல்ஊனமுற்றோர் என்றே எழுதி வைக்கலாம். அதை விடுத்து வள்ளுவர், கம்பர் போன்ற தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமே புரியும் வகையிலான படு சுத்தத் தமிழில்எழுதி வைத்தால் யாருக்காவது புரியுமா?

நல்ல வேளையாக மெய்ப்புலம் அறைகூவலர் என்ற வார்த்தைக்கு அருகில் உடல்ஊனமுற்றோருக்கான படத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இதுஏதோ தமிழ் சங்கத்தின் அலுவலகம் என்று நினைத்து யாரும் இப்பக்கமே வராமல்திரும்பிப் போகக் கூடும்.

தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?
------------------------------------------------------------------------------------------------- டேய், என்னதான் தமிழ் பற்றுன்னாலும் ஒரு அளவு இல்லையாடா
என்னடா சொல்ல வரீங்க ... நான் பாட்டுக்கு ஒண்ணுக்கு போயிருப்பேன் ... இப்ப, என்னடான்னா, கவிச்சக்கரவர்த்தி கம்பன வச்சு பதிப்புரை, பொழிப்புரையும், வைரமுத்துவ வச்சு வசனமும் எழுத வச்சுட்டீங்களேடா !!!!
இந்த மாதிரி எழுதறத படிச்சு, புரிஞ்சுக்கறதுக்குள்ள, வாசல்லயே நான் போயிடுவேன்.......

நான் இப்படி பொலம்பறேன். அங்க ஒருத்தர் என்ன சொல்றாருன்னு நீங்களே கேளுங்கய்யா, நாடு வெளங்கிடும்.

உடல் ஊனமுற்றோர்களை மெயப்புலம் அறைகூவலர்கள் என்று அழைக்கும்படி என்னால் உத்தரவிடப்பட்டது
இதைக்கண்டு கூச்சலிடுவோர் - மதியிலி அறிவிலர் என்று இனிமேல்அழைக்கப்படுவர் என்று கூறிக்கொள்கிறேன் ....

மதியிலி அறிவிலி
என்றினி அழைப்பவர்
அவர்தம் பிறியிலி
என்போர் பிணக்கு

இது வாழும் வள்ளுவன் வாக்கு .....
-------------------------------------------------------------------------------------------------
இதுக்கு மொதல்ல சொன்னாங்களே அதுவே பரவாயில்ல
நான் முடிவு பண்ணிட்டேன், இந்த ஊர்ல சத்தியமா பாத்ரூம் பக்கமே போக மாட்டேன்.
ஊராய்யா இது ....... சீ சீ சீ சீ
நம்ம ஊர்னா கம்மா கரையில ஒதுங்குநோமா
சும்மா சர்னு அடிச்சோமான்னு இல்லாம

No comments: