ஜாலி கவி வாலி

வாலி வாலி வாலி
வாலு இல்லா வாலி
நூறு கவி வந்தாலும்
வாலி என்றும் ஜாலி

வாய் நிறைய வெத்தல
உன் பாட்டில் வீரம் வத்தல
ஊரெல்லாம் ஓடினாலும்
பாரெல்லாம் தேடினாலும்
ஒன்ன போல பாட்டெழுத
ஒலகத்துல ஆளில்ல

உன் மூஞ்சி முழுக்க தாடி
பாட்டு பாஞ்சு வருதே தேடி
பாட்ட கேட்ட பல ஜோடி
வாழ்த்தறாங்க வந்து நாடி

ஆயிரம் பேர் வந்தாலும்
கை கோர்த்து நின்றாலும்
ஒன் எழுத்து மட்டும் நிக்குது
எதுத்து நின்னவன் தல சுத்துது

இப்போ ஒனக்கு ஆச்சு வயசு
ஒன் எழுத்துக்கு இன்னும் மவுசு

ஒன் உழைப்புக்கு இல்ல வரைமுறை
ஒன் எழுத்துக்கு இல்ல விடுமுறை

ஒன் எழுத்த படிச்சு தெளிஞ்சவன்
வேற படிக்கணும்னா ஓடி ஒளிஞ்சவன்

வாலி வாலி வாலி
வாலு இல்லா வாலி
நூறு கவி வந்தாலும்
வாலி என்றும் ஜாலி

No comments: