பாராளுமன்றம் தேர்தல் - "தல"யோட டகால்டி முன்னோட்ட உரை


அன்று போல இன்றும் அமைகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இந்தக் கூட்டணி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க உழைப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியி்டுள்ள அறிக்கை:
2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் யாரும் சொல்லாததற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு சோனியாகாந்தியை அழைத்து, ``இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!!'' என்று வரவேற்பு கூறி வாழ்த்தி- அந்த தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்து- பிரதமராக அவர்தான் வரவேண்டுமென்றும், வருவார் என்றும் எதிர்பார்த்திருந்த போது அதற்கு மாறாக சோனியாகாந்தி தியாகத் திருவிளக்காக உயர்ந்து, தான் பிரதமர் பதவிக்கு வரவிரும்பவில்லை என்றும், டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர் பொறுப்பேற்பார் என்றும் கூறி- கடந்த ஐந்தாண்டு காலமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவியாக செயல்பட்டு- சாதனை செல்வியாக நிகழ்ந்து, சாதனைக்கு மேல் சாதனை என்று சாதித்து வருகிறார்.
(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)
(தல, ஆபரேஷன் முடிஞ்சு தையல் பிரிச்சாச்சு. இப்போ அவரு எல்லாரையும் பிரிச்சு மேய ஆரம்பிச்சுட்டாரு........)

No comments: