"வேலு நாயக்கரும் பாட்ஷாவும் சுப்பிரமணியபுரத்துல மீட்டிங்!"

படித்தது, படித்ததும் பிடித்தது, உடனே உங்கள் பார்வைக்கு :

சமீபத்திய அவள் விகடனில் வந்திருந்த இந்த கட்டுரை மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதை உடனே உங்கள் பார்வைக்கு வைத்து விட்டேன்.
---------------------------------------------------------------------------
"வேலு நாயக்கரும் பாட்ஷாவும் சுப்பிரமணியபுரத்துல மீட்டிங்!"

''என்னப்பா ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?''னு ஆரம்பிச்சு விட்டா போதும்.. சரவெடியா பத்திக்கிறாங்க காலேஜ் பொண்ணுங்க. ''இந்தப் பொங்கலுக்கு சொல்லிக்கிறா மாதிரி ரெண்டே படங்கள்தான் ரேஸ்ல குதிச்சுது. ஏன் இந்தப் பஞ்சம்? எப்படியும் ஏற்கெனவே வந்த படங்களை அடிச்சுக் கலக்கிதான் ஆம்லெட் போடப் போறாங்க. அதுக்கு ஏன் இந்த பில்டப்பு?''னு ஆக்ரோஷமா கேட்டவங்க, தஞ்சாவூர் ஜோசப் இன்ஜினீயரிங் காலேஜ் பொண்ணுங்க.கேட்டது மட்டுமில்லைங்க.. 'கலக்கலா' ஒரு கதையும் கொடுத்திருக்காங்க பாருங்க..

வேலு நாயக்கரோட பொண்ணு, முத்தழகு. கார்ப்பரேஷன் ஸ்கூல்ல எட்டு வருஷமா ஏழாவது படிக்கிறா. அவளுக்கும் காலேஜ் பையன் சிட்டிசனுக்கும் லவ்வாயிடுது. இது வேலு நாயக்கருக்குத் தெரிஞ்சு சிட்டிசனை அடிக்கப் போய்ட்டாரு. சிட்டிசன் உடனே தன்னோட ஃப்ரெண்டு அழகர்கிட்ட சொல்லி, மும்பையில இருந்து 'மாணிக் பாட்ஷா'னு ஒரு தாதாவை பஞ்சாயத்து பண்ண கூட்டிக்கிட்டு வர்றான். வேலு நாயக்கரும் பாட்ஷாவும் சுப்பிரமணியபுரத்துல மீட்டிங் போட்டாங்க.

''கஷ்டப்பட்டு பொண்ணை வளர்த்து ஸ்கூலுக்கு அனுப்பி வச்சா, அவள லவ் பண்றான் பாரு.. அவன நிறுத்த சொல்லு.. நான் நிறுத்துறேன்..''னு உணர்ச்சி வசப்பட்டார் நாயக்கர்.

உடனே பாட்ஷா, ''ஹே.. ஹே.. ஹேய் பேசாத.. புடிக்காது.. பாட்ஷாவுக்கு பிடிக்காது!''னு டென்ஷனாயிட்டார். அவங்களுக்குள்ள செம சண்டையாயிடுச்சு.. அப்போதான் அந்த இடத்துக்கு கைப்புள்ள வந்தாரு. ''அண்ணன் கோவமா இருக்கேன்.. சின்னப் புள்ளைங்கள்லாம் அங்கிட்டுப் போய் வெளாண்டுக்கங்கடா''ன்னாரு. வேலு நாயக்கரும் பாட்ஷாவும் கைகோர்த்து கைப்புள்ளையை மொத்து மொத்துனு மொத்திட்டு, ''பேசாம படிப்ப கவனிங்கப்பா''னு முத்தழகுவுக்கும் சிட்டிசனுக்கும் அட்வைஸ் பண்ணிட்டுப் போய்ட்டாங்க.

அழகர் சிட்டிசனை சமாதானப்படுத்தினான். ''ஏ..ஏய்.. இன்மே நான் பேஸ் மாட்டேன். என் காதல் ஒரு கறுப்பு சரித்திரம்!''னு சொல்லிக்கிட்டே சிட்டிசன் மனசு வெறுத்து 'நான் கடவுள்' சூட்டிங் பார்க்கப் போயிட்டான். முத்தழகு ரொம்ப நாளா ஸ்கூலுக்குப் போகாம, தன்னோட வீடு இருக்கிற 7 ஜி ரெயின்போ காலனிக்குள்ளேயே அழுதுக்கிட்டிருந்தா. முத்தழகோட மாமா படையப்பா அவ அழுறதைப் பாத்துட்டு, ''அழுவாதம்மா! எப்பிடியாவது அந்தப் பையன் சிட்டிசனை தேடிக் கண்டுபிடிச்சு உன் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தல.. இந்த படையப்பனோட மூச்சு.. நின்னு போச்சு..''னு அவளை சமாதானப்படுத்தினார்.

முத்தழகு கவலையை மறக்குறதுக்காக.. சந்திரமுகினு ஒரு டான்ஸ் டீச்சர்கிட்ட டான்ஸ் கத்துக்கப் போனா. சந்திரமுகியோட அண்ணன் சேதுபதி ஐ.பி.எஸ் அவளை தனியா விட்டுட்டு காஷ்மீர் தீவிரவாதிகளைப் பிடிக்கப் போய்ட்டாரு. அதனால முத்தழகு கொஞ்ச நாள் சந்திரமுகி வீட்டுலயே இருந்தா. ஒரு நாள் நைட்டு ஜாக், ரோஸ்னு ரெண்டு பேரு வந்து அவங்க வீட்டு கதவைத் தட்டுனாங்க. ''நாங்க ரெண்டு பேரும் வந்த டைட்டானிக் கப்பல் முழுகிருச்சு. நாங்க தப்பிச்சிட்டோம். எங்க லவ் பிடிக்காம எங்களை தொரத்திக்கிட்டு வர்றாங்க. எங்களைக் காப்பாத்துங்க''னு கெஞ்சினாங்க. அவங்க வீட்டுலயே ஜாக்கும் ரோசும் தங்கிட்டாங்க.

மறுநாள் சந்திரமுகியோட எதிரி வேட்டையனும் ரோஸோட மாமா முத்துப்பாண்டியும் வந்துட்டாங்க. ஜாக்கை போட்டு உதைச்சாங்க. சந்திரமுகிக்கு உடனே கோவம் வந்து ''ஒதலவா..? ஈ துர்காஷ்டமி லோக நின்னு சம்பிஸ்தானுரா.. லேக்க போத்தே.. நேனு சந்திரமுகி காதுரா..''னு கத்தி சிரிக்க ஆரம்பிச்சிட்டா. அப்போ வேகமா ஒருத்தர் ஓடி வந்தாரு.. ''நேனு பலராம் நாயுடு. சி.பி.ஐ ஆபிஸர். இங்க என்ன சத்தம்? அதுவும் தெலுங்குல யாரு கத்தினா? ஏய் பொண்ணு.. மீரு தெலுகா?''னு சந்திரமுகியைக் கேட்டாரு. ''ஆமாம்''னு அவ எல்லாத்தையும் சொன்னா. உடனே அவர் முத்துப் பாண்டியையும் வில்லன் வேட்டையனையும் ஜெயில்ல போட்டுட்டாரு.

அவங்களை பெயில்ல எடுக்க சிட்டியிலயே பெரிய வக்கீல் அம்பியைக் கூப்பிட்டாங்க. என்ன பிரச்னைனு தெரிஞ்சதுக்கப்புறம்.. ''என்னை விட்டுடுங்கோ சார்.. லவ்வர்சுக்கு எதிரா ஏதாவது செஞ்சா ரௌரவம்னு ஒரு கொடுமையான நரகம் கிடைக்கும்னு பாட்டி சொல்லுவா.. இதெல்லாம் சாஸ்திரப்படி தப்பு''னு சொல்லிண்டே.. ஸாரி சொல்லிக்கிட்டே கிளம்பிப் போய்ட்டாரு. அவங்க ஜெயில்லயே கிடந்தாங்க.

முத்தழகுவும் சந்திரமுகியும் ஜாக்கையும் ரோஸையும் சேர்த்து வெச்சாங்க. முத்தழகு, ''என்னால இன்னும் சிட்டிசனை மறக்க முடியல''னு ஃபீல் பண்ணி அழுதா. அப்போ அவங்க வீட்டு மாடியில ஹெலிகாப்டர் சத்தம் கேட்டுது. போய்ப் பார்த்தா, அங்க பிளாக் டிரெஸ் போட்டுக்கிட்டு கூலிங் கிளாஸோட ஒருத்தர் வந்து இறங்கி, ''எஸ்.. ஐ'ம் பேக்''னு சொன்னாரு. கூலிங்கிளாஸை கழட்டிட்டு, ''என்ன முத்தழகு.. தெரியலையா? நான்தான் சிட்டிசன்”னு சொன்னாரு. சந்திரமுகி அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சா. வேட்டையன் அடுத்த ஜென்மம் எடுத்து வந்தா சந்திரமுகிக்கு பாதுகாப்பு வேணும்கிறதால சிட்டிசனும் முத்தழகும் அங்கேயே தங்கிட்டாங்க. அப்புறம், எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க.

கதையோட நீதி : அடுத்தவங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணினா தன்னோட லவ் தானே செட் ஆகும்!

கோடம்பாக்க டைரக்டர்களுக்கு.. உங்களுக்காகவே கிண்டின ஸ்பெஷல் கதை இது. பட்டுனு புரொட்யூஸரைப் பிடிச்சீங்கன்னா, 'வேலன்டைன்ஸ் டே' ரிலீஸா கொண்டு வந்துடலாம். அப்புறம் உங்க இஷ்டம்!

நன்றி : அவள் விகடன்

-----------------------------------------------------------------------
இந்த கால பசங்களும், பொண்ணுங்களும் படிக்கறாங்களோ இல்லையோ, இந்த மாதிரி கதை எல்லாம் சூப்பரா சொல்றாங்க.
நல்லாதானே போயிட்டு இருக்கு.

No comments: