உள்குத்து ஏதுமில்லாத உண்மை செய்திகள்

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பலதரப்பட்ட செய்திகளின் தொகுப்புதான் இந்த உள்குத்து இல்லாத உண்மை செய்திகள்.
-----------------------------------------------------------------------------
இதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 11 டாக்டர்கள் கொண்ட குழு இன்று பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து வருகிறது.சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரும், பிரதமரின் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி தலைமையில், டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில், டாக்டர் விஜய் டி சில்வா, டாக்டர் பிரதியோத் குமார் ராத், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேந்திர கரச் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மருத்துவர் குழு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.அறுவைச் சிகிச்சைக்காக பிரதமர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் மனைவி மற்றும் குடும்பத்தினர் உடன் உள்ளனர்.காலை எட்டே கால் மணியளவில் ஆபரேஷன் தொடங்கியது. ஆபரேஷன் முடிய குறைந்தது 5 அல்லது 6 மணி நேரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் விரைவில் பூரண குணம் அடைய அவரை வாழ்த்துவோம்.
-------------------------------------------------------------------------
திருமங்கலத்தில் கிடைத்த வெற்றி திமுக சாதனைக்குக் கிடைத்த வெற்றி அல்ல. காந்திக்குக் கிடைத்த வெற்றி. அதாவது ரூபாய் நோட்டுகளுக்கு கிடைத்த வெற்றி. ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் வீதம் ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்து தேர்தலில் வெற்றிப்பெற்றிருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஒரு வேளை திருமங்கலம் இடைதேர்தலில் தேமுதிக ஜெயித்திருந்தால் இவ்வாறு கூறி இருப்பாரா என்று தலைவர் விஜயகாந்த் கூறவில்லை. தேர்தலில் தோற்றதால் விரக்தியில் இவ்வாறு சொல்லி இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் ஒன்று, நாட்டில் இன்றைய பெரிய காமெடியன் விஜயகாந்த் தான் என்று சிறிய குழந்தையை கேட்டால் கூட கூறிவிடும்.
----------------------------------------------------------------------------------------------
சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை ஒரு ரூபாயும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது வெறும் செய்தியாக மட்டும் இல்லாமல், விலையும் விரைவில் குறைந்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள். இது நடக்கும், ஆட்சியாளர்கள் மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைத்தால்!!!!
--------------------------------------------------------------------------------------------
40 லோக்சபா தொகுதிகளையும் வெல்ல எங்களிடம் 4000 கோடி ரூபாயெல்லாம் இல்லை. வேண்டுமானால் அதிமுகவிடம் அந்த வசதி இருக்கலாம் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

இது பச்சை புளுகு என்று நேற்று பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். ஆற்காட்டார் கூட இப்போதெல்லாம் அடிக்கடி காமெடி பண்ண ஆரம்பித்து விட்டார். பேசியே கிச்சு கிச்சு மூட்டுகிறார். மின்சாரம் இல்லை என்று சம்சாரத்தை காசி அனுப்பியவர் இவர். இப்போ நிலைமை என்ன என்று தெரியவில்லை.
------------------------------------------------------------------------------------------
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் திமுகவுக்கு முரண்பாடு ஏற்பட்டு, ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால், திமுக அரசைக் காக்க பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் துணை நிற்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதியின் இன்றைய பெரிய தலைவலியே திருமாதான். முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், வெகுவாக கஷ்டப்படுகிறார். அந்த பக்கம், காங்கிரசார் திருமாவை கைது பண்ணியே தீர வேண்டும் என்று கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு திருமா, கருணாநிதி ஆட்சிக்கு பாதுகாப்பு கொடுப்பேன் என்கிறார். என்ன ஆகும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------
பொங்கலுக்கு ரிலீஸான `வில்லு' ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்கு விசிட் அடிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜய்.

இந்த திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். முதல்கட்டமாக நேற்று அவர் கோவை சென்றார். ரசிகர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.

கோவை கங்கா, கே.ஜி.காம்ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். அவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:

நான் இதுவரை நடித்த படங்களில், முதல் 10 நாட்களில் அதிக வசூல் செய்த படம், `வில்லு'தான். கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் இதுவரை என் முந்தைய படங்கள் செய்திராத வசூல் சாதனையை வில்லு செய்து இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------
காமெடியின் உச்சகட்டம், விஜய் இந்த படத்தை ஜேம்ஸ் பாண்ட் படத்தோடு ஒப்பீடு செய்தது. அதை விட காமெடி, இப்போது அவர் அரசியல் பற்றி பேச ஆரம்பித்து இருப்பது. ஆனால், எஸ்.ஏ.சி. தான் ஆர்வமாக உள்ளார் என்று கூறி, பழியை அவர் மேல் போட்டு, இவர் தற்காலிகமாக தப்பித்துக்கொள்ள பார்க்கிறார். இந்த கலவர பூமில இப்போ, இதுபோன்ற காமெடிகள் தான் மக்களை கொஞ்சமாவது காப்பாற்றுகிறது.
----------------------------------------------------------------------------------------------
நடிகர் மன்சூர் அலிகானும் இசையமைப்பாளராகிறார். கையில காசு வாயில தோச படத்தின் மூலம் அவர் மியூசிக் டைரக்டர் ஆகிறார்.குரூப் டான்ஸராக வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் வில்லனாக உருவெடுத்து, காமெடி உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்து பின்னர் படத் தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரம் எடுத்தவர் மன்சூர் அலிகான்.இந்த நிலையில் புதிதாக இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவர் பூணுகிறார்.

தமிழ்நாட்டுக்கு இதுபோன்ற வரிசையான சோதனைகள் வந்தே தீரும் என்று என்னத்தான் தலை எழுத்தோ. கொஞ்ச நாள் முன்பு குருவி, பின் வில்லு, இப்போ இந்த மன்சூர் அலி கான் காமெடி. இவர் என்ன சீரியசாவா இசை அமைக்க போகிறார் என்று கேட்பவர்களுக்கு..... சத்தியமா இல்லீங்கோ ..... இதுவும் ஒரு டகால்டி காமெடி தான் ........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
--------------------------------------------------------------

இப்போதைக்கு இது போதும். பின் வேறு செய்திகளோடு சந்திப்போம். ஏற்கனவே சொன்னதுபோல் இந்த செய்திகள் எல்லாம் வேறு வேறு இடங்களில் இருந்து எடுத்து கோர்க்கப்பட்டவை. சாய்வெழுத்துக்களில் உள்ளவை மட்டும் என்னால் சேர்க்கப்பட்டது.

1 comment:

. said...

குடியரசு தின வாழ்த்துக்கள்.
இது மிக நல்ல முயற்சி.
செய்திகளோடு தங்கள் எண்ணங்களையும் பதித்தது பிரமாதம்.
இது தொடரட்டும் ....