சங்கி மங்கி அதிரடி டெர்ரர் கூட்டணி ‍ 26.09.09






எலே சங்கி... எப்படி கீறடா சோமாரி!!...

நல்லா கீறேண்டா பேமானி மங்கி......
இன்னாடா இன்னிக்கு ஓப்பனிங்கே டெர்ரரா கீது.. இன்னாடா மேட்டரு சங்கி?

நெற்ய கீதுறா மங்கி...துபாய் மெட்ரோ ரயிலு மேட்டரு... ரஜினி, கமல் அவார்டு மேட்டரு.. வேட்டைக்காரன் ஆடியோ ரிலீஸு மேட்டரு...

மொதல்ல துபாய் மெட்ரோ ரயிலு மேட்டரு சொல்றேன் கேட்டுக்கோடா சங்கி... இது ஷ்டார்ட் பண்ண‌ சொல்ல... ஒரு 15 பில்லியன் ஆவும்னு சொன்னாய்ங்களாம்...

ஒரு பில்லியன்னா நூறு கோடி...15 பில்லியன்னா, 1500 கோடி...அதாவது நம்மூரு துட்டுல 19,500 கோடி... இப்போ அத்த முடிச்சு பாக்க சொல்ல... செலவு ஜாஸ்தியா பூட்சுபா.. ஒரு 28 பில்லியனாயிடுச்சு... அதாவது 36,400 கோடியாயிடுச்சு... இவ்ளோ துட்டு செலவு ஆயிடுச்சே... இத்த திருப்பி எடுக்கறதுக்கு இங்க இருக்கறவிய்ங்க பாக்கெட்ல எல்லாம் எம்புட்டு பெரிய ஓட்டை போட போறாய்ங்களோன்னு பயந்துகினு கீறாய்ங்களாம்...

இன்னாபா... கேக்க‌வே டெர்ர‌ரா கீதேடா மங்கி... அப்பாலிக்கா??

2007 / 2008 வ‌ருச‌த்துல‌ வந்த‌ ப‌ட‌த்துல‌ அல்லாத்த‌யும் போட்டு பார்த்து, ந‌ம்ம‌ த‌மிழ்நாடு க‌வுர்ன்மெண்டு, 2007 வ‌ருச‌த்துக்கு தலைவர் ர‌ஜினிக்கு "சிவாஜி" படத்துக்கும், 2008 வ‌ருச‌ம் ந‌ம்ம‌ க‌ம‌ல்தாச‌னுக்கு "தசாவதாரம்" படத்துக்கும் சிறந்த‌ ந‌டிக‌ர் அவார்டு குடுக்க‌ போறாய்ங்க‌ளாம்... ரெம்ப‌ ப‌டா லெவ‌ல்ல‌ ஏற்பாடு ந‌ட‌க்குதாம்டா...

அப்டியாடா அப்பாலிக்கா இளைய‌ த‌ள‌ப‌தி விஜ‌ய் ந‌டிக்க‌ற‌ வேட்டைக்கார‌ன் ப‌ட‌ம் ப‌த்தி இன்னாடா‌ நூஸு...
அந்த‌ ப‌ட‌த்தோட‌ பாட்டு ரிலீஸ் ப‌ண்ணாங்க‌ இல்ல‌... அப்போ பேசுன‌ ச‌க்ஸேனா, விஜ‌ய் தலைவர் ர‌ஜினிய‌ அப்டியே ஃபாலோ ப‌ண்ணா, சூப்ப‌ர் ஸ்டார் மாதிரி பெரியாளா ஆவ‌லாம்னு சொன்னாரு...

இத்த‌ கேட்ட‌ விஜ‌ய் குஜாலாயிட்டாரு... அவ‌ரோட‌ அப்பா எஸ்.ஏ.சி.. கோச்சிகினா‌ரு... இப்போவே விஜ‌ய் பெரிய‌ சூப்ப‌ர் ஸ்டார் தானேன்னு அல்லார்கிட்ட‌யும் சொல்லி அயுவுறாராம்...

அத்த‌ வுட‌ ப‌டா டமாசு இன்னா தெரியுமா... டைர‌க்ட‌ர் ச‌ங்க‌ரு வ‌ந்து இருந்தார் இல்ல‌..அவரு சொன்னத கேட்டு நானே மெரிசல் ஆயிட்டேம்பா... முதல்வன் படத்துல மொத்ல்ல ரஜினி நடிக்க மாட்டேன்னு சொன்ன உடனே விஜய நடிக்க வைக்கறதா இருந்தேன்னு சொல்லி, அங்க இருந்த அல்லாருக்கும் பெரிய டெர்ரர் குடுத்துடாருபா...
யப்பா எனக்கு தலைசுத்தறது ஷ்டார்ட் ஆயிட்சுப்பா... ஒரு சோடாவும், ஒரு குவாட்டரும் வாங்கிகினு வரேன்... ஊத்துனாதான் என்னோட என்ஜின் ஷ்டார்ட் ஆவும்னு நெனக்கறேன்... வர்ட்டா.... கடை மூடிட போறான் சோமாரி...

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 12)

வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு இண்டெர்வியூ போவார். ஒரு இந்திய மாகாணத்தின் முதல் மந்திரி யார், என கோட்டு(டி)க்கார மானேஜர் கேட்க. நேற்றா! இன்றா!! நாளையா!!! என்று புரட்சித்தலைவர் படப் பெயரை எதிர் கேள்வியாய் இங்கிலீஷில் கேட்பார். இடைவேளை விடுவார்கள், பாப்கார்ன் வாங்க நாமும் ஒதுங்குவோம்.

இதே மாதிரி பதில் சொல்ல தோதுவாய் ஒரு கேள்வி. உலகத்தின் உயரமான கட்டிடம் எது என கேட்டால் நீங்கள் விவரமானவர்கள் சரியாக ஊகித்து வீட்டீர்களே. நேற்றா! இன்றா!! நாளையா!!!. உலகின் உயரமான கட்டிடம் எனும் அந்தஸ்தை இன்று துபாய் தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறது. கட்டிட்த்தின் பெயர் புர்ஜ் துபாய்.

சரி உயரம் என்ன?? உஷ்... சொல்ல மாட்டோம் (நம்ம கேப்டன் விஜயகாந்த் எப்போவும் சொல்ற ஸ்டைல்தான்... தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன்...) ஏங்க??? என்று நாம் கேட்டால், அவர்கள் சொல்கிறார்கள்... நாங்களும் இதமா சொல்லப் போயி வேற எதாவது ஊரில இதை விட உசரமா கட்டிப்புட்டா, நாங்க என்ன செய்யுறது. தென் கொரியா காண்டிராக்டர், சாம்சங் கம்பெனிக்கு, அவர்தாங்க பில்டிங் கட்டுறவர், அவருக்காவது தெரியும் என நம்புகிறோம்.

இன்னைக்கு தேதிக்கு 146 மாடி முடிஞ்சிருக்கு... உசரமா ஒரே ஒரு கட்டிடம் கட்டாம, அத ஒரு ஊரு மாதிரி கட்டுறது நம்ம துபாய் துணிச்சல். இந்த ஊரு கட்ட போட்ட திட்டம் எவ்வளவு. அதிகமில்லை ஜெண்டில்மேன் சுமார் 9,000 கோடி.

நவ நாகரீக வர்த்தக மையமும், நட்சத்திர ஹோட்டல்களும் அடக்கிய சொர்க்க புரியே இந்த டவுன் டவுண். பின்னே 30,000 வர்த்தக மற்றும் குடியிருப்பு வசதிகளும் உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால், பெயர் துபாய் மால் இதில் அடக்கம். இந்த கடை திறந்து இப்போ ஒரு வருசம் ஆச்சு. இதில் உசரமான ஒரே கட்டிடத்துக்கு மாத்திரம் 400 கோடி.

போற போக்கில ஒரு உபரித் தகவல். துபாயின் கட்டிட கட்டுமானத்தை பற்றி புரிந்து கொள்ள இந்த தகவல் உதவும் என நம்புகிறோம். இந்த உலகத்தில் உள்ள கிரேன் அதாங்க, மும்பை எக்ஸ்பிரஸ்ல நம்ம கமல்ஹாசன் ஏறி குரங்கு கூட விளையாடுவாரே, அந்த இரும்பு ஏணி தான். அதில 35% இங்கே துபாய்ல தான் குந்திகிட்டு இருக்கு. உலக விகித்தில் இது ரொம்ப ஜாஸ்தி, ஏன்யா 35% கிரேன் இங்க இருக்குன்னா அத்தன கட்டிட வேலை இங்க தான் நடக்குதுன்னு அர்த்தம்...

உசரமான கட்டிடம் கட்டுறோம் என சவுண்டு விட்ட நேரத்தில் இருந்து நாங்களும் பார்த்துக் கிட்டே இருக்கோம். கிரேன் வருது, ஆள் வருது, அம்பு வருது, அப்பு வருது, குப்பு வருது.. ஆனா பில்டிங் மட்டும் காணேம், என்னாடா வருசம் ஒண்ணாச்சே, ஒரு மாடி கூட கட்டலயேன்னு பார்த்தா சோக்கா சொன்னாரு துரை ஒரு கதை. 100 மாடி, 150 மாடின்னு கட்டுறது எப்படி, பூரா காங்கீரீட்டில தூண் எழுப்பி, சும்மான்னாக்க ஊடு செங்கல் வைச்சு சில சுவர், கண்ணாடில மீதி சுவர வைச்சி பூசாம பெயிண்ட் அடிக்காம, முடிக்கிறது தான் இந்த முறை. அதனால பில்டிங் நிக்கிறதுக்காக பூமிக்கு மேல உள்ள மாதிரி பூமிக்கு கீழேயும் ஆழமா பவுண்டேஷன் இருக்குதாம். சுருக்காச் சொன்னா 100 மாடில கட்டிடம் கட்ட 100 மாடி ஆழத்துக்கு குழி தோண்டி, பவுண்டேஷன் போட்டு அப்புறம் தூக்கணும் பில்டிங்க.

அதனால தான் பூமிக்கு கீழே பள்ளம் தோண்டுறது, நிரப்புறதுண்ணு நேரம் ஆனாலும் பூமிக்கு மேல சுளுவா அஞ்சு மாடி எட்டு மாடின்னு ஒரு வாரத்தில கட்டிராங்க. சரி, உலகத்திலே பெரிய டவர் கட்டியாச்சு, இவ்வளவு உசரமா கட்டி என்ன செய்ய போறீங்க, என்ற கேள்வி நம் வாசகர் மனதில் வரலாம். நீங்கள் நினைப்பதை உணர்ந்து பதில் சொல்வதே இல்லாமல் வேறு என்ன வேலை. தங்க ஒரு சர்வதேச புகழ் அர்மானி தன்னோட நட்சத்திர ஹோட்டல இங்க நட்த்த போகுது. 175 சொகுசு அறைகளும், 144 விரிவான தங்கும் வசதிகளும் அடங்கிய சூட்களுமென திட்டம் உண்டு. சுமார் 1,500 அடி உயரத்தில பொது மக்கள் போய் மேலே இருந்து கீழே பார்க்க வைக்க திட்டம் இருக்குது. இதுவே உலகத்தின் மிக உய்ரமான பார்வை மையம் என்பதும் ஒரு தகவல்.

144 தொடங்கி 146 மாடி வரை உள் வெளி கிளப். ஏங்க, 100/ 150 மாடியா இருக்கே. லிப்ட் ரொம்ப நேரமாகுமோ, என பயப்படாமல் இருக்க ஹை ஸ்பீடு லிஃப்ட் உதவியா இருக்கு. எண்ணம் உயர்வானால் செயல் உயர்வாகும். உயரம் அண்ணார்ந்து பார்க்க வைத்து அபிமானம் கூட்டும்... கூடவே ரொம்ப நேரம் பார்த்தால், கழுத்து வலியையும்...

துபாய் சுற்றி சுற்றி பல்பொருள் அங்காடிகள் உண்டு. சராசரி துபாய் வாழ் மக்களின் வார இறுதி திட்டங்களில் நிச்சயம் இது இடம் பிடிக்கும். வெறுமையான ஒரு தள்ளு வண்டியுடன் உள்ளே சென்று, கண்ணில் பார்த்தது, கையில் பிடித்து போடு. கொண்டு போன நடை வண்டியை நிரப்பு என்பதான எளிதான செயல் திட்டங்கள் உண்டு. என்ன இப்படிக்கா ஒரு நடை போய் வந்தால், மூன்று மணி நேரமும் ஒரு 500 திராமும் கணக்கில் கழியும். இதனால் தானே என்னவோ ஊரை சுற்றி ஷாப்பிங். எத்தனை வந்தாலும் போத வில்லை. பாருங்களேன் மொத்த பல் பொருள் அங்காடிகள் வாடிக்கையாளரை கவர, அதிரடி விலை குறைப்பு, தரம் என்று மட்டும் இல்லாமல் அனுபவம், உணர்வு என்ற அடுத்த கட்ட நிர்மாணத்துக்கு சென்று விட்டார்கள்.

உதாரணத்துக்கு இபுன் பத்துதா (இதுவும் ஒரு ஷாப்பிங் மால் பெயர்)..பார்ப்போமே. நம்ம பண்ணைபுர ராசா, அதான் இளையராஜா தத்துவார்த்தமாய் சொல்லுவார். இலக்கு என்பதற்கு இருப்பு கிடையாது. அது ஒரு ஓடும் தடாகம். சரிதான்.

நேற்று இந்த இபுன் பத்துதா திறந்த போது, உலகின் மிகப் பெரிய அங்காடியாய் இருந்த்து. இன்று அதை துபாய் மால் தட்டிச் சென்று விட்ட்து. சரி இப்போது என்ன செய்ய. உலகின் மிகப் பெரிய தத்துவ அங்காடி, அதாவது தீம் அங்காடி. சைசில் இது ஒன்றும் சளைத்த்து இல்லை. ஆறு அரங்கங்களாக சுமார் 1.3 கீ,மீ தூரத்தில் ஒரு அரங்கம், என்று சுமார் 8 கீ.மீ தூரம் உண்டு. சுருக்கமாய் சொன்னால் முழு தூரத்தையும் கடக்க ஒரு மனிதனால் ஒரு நாளாய் முடியாது. என்ன செய்யணும். ஒரு பக்கம் போயி, கால் வலிக்கிற வரை நடந்து பார்த்திட்டு, அதே இட்த்துக்கு திரும்ப வந்து வீட்டுக்கு போயிற வேண்டியது தான். இதே கணக்கில ஒரு நாலைஞ்சு தடவையா வந்து வந்து போனா ஓரளவுக்கு பார்த்துடலாம்.... 21 தியேட்டர்கள் உண்டு. ஐ மேக்ஸ் திரையும் உண்டு. என்ன, காசுதான் புடுங்கிடுவாங்க.. நம்ம காசுல சுளையா 500/600 துண்டு....

அரபு நாட்டின் சரித்திர அறிஞர் இபுன் பத்துதா 14ஆம் நூற்றாண்டின் ஆள். தன் தொலை நோக்கு பார்வையால், 6 நாடுகளில் சுற்றி தன் பயணம் பற்றிய விவரங்கள் எழுதியுள்ளார். அவர் நினைவாக அவர் பார்த்த 6 நாடுகளை அரங்கம் ஆக்கி இந்தியா, சீனா, எகிப்து என பெயரிட்டு சரித்திரத்தை ஷாப்பிங் ஆக்கியது சூப்பர்.

யார் இந்த இபுன் பதுத்தா. இங்கே சென்று பாருங்க‌ள்..

ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல தான் நான் காப்பி குடிப்பேன். இதுக்கு மேலே எதாவது இருக்கா என்றால், இருக்கு வாங்க. ஏழு நட்சத்திரம் ஹோட்டல் ஒண்ணு கடலுக்குள்ள கட்டியிருக்காங்க. அது என்ன என்ற விவரம் தெரிய அடுத்த பகுதிக்கு காத்திருப்போமா..

(இன்னும் கொஞ்ச‌மே வ‌ரும்...)

ச‌ங்கி ம‌ங்கி அதிர‌டி அல‌ப்ப‌றை - 12.09.09






எலே எடுபட்ட பயலே சங்கி... எப்படிடா இருக்க??

வாலே மங்கி... இன்னாடா மேட்டரு? நெம்ப நாளா ஆளயே காணுமேடா? உள்ளார போயி வந்தியா??

இன்னாடா, காலைலயே டெர்ரர் கேள்வி எல்லாம் கேக்கற?? நானு இங்கனதானேடா கீறேன்... சொல்லுடா... இன்னான்னா மேட்டரு வச்சு கீற..

சொல்றேன்டா, கேட்டுக்கோ.. சினேகா மேட்டரு, நம்ம கமல்தாசன் மேட்டரு... துபாய் மேட்டரு... ரெட்டிகாரு மேட்டரு...அல்லாத்தையும் சொல்றேன்...

நம்ம சிரிப்பழகி சினேகா, திருவண்ணாமலை கிரிவலம் போறேன்னு சொல்லிகினு, கால்ல செப்பல் போட்டு போயிட்சாம்... அது சாமி குத்தம்னு சொல்லி, நெறய பேரு இப்போ சினேகா மேல ஆக்சன் எடுக்கணும்னு கூவறாங்களாம்...

அப்டியா?? அதானே... கோயிலுக்கு போறப்போ, ஏண்டா செருப்பு போட்டுகினு போகுது...

அத்த கேட்டாங்கபா... அதுக்கு, சினேகா, கால்ல ஒரு ஆபரேசன் பண்ணனும். வலி இருக்குதுனு சொல்லிச்சுபா...
நம்ம ஆளுங்க விடுவாய்ங்களா... நேத்து கூட டி.வி.ல ஒன்னிய பாத்தேன்... "பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு கமல்தாசன் கூட டூயட் பாட்டு பாடி, ஆடுனியேமா, அப்போ காலு வலிக்கலியான்னு கேட்டுடாய்ங்க... இவிய்ங்க ஏதும் பதில் சொல்லலியாம்...

பொறவு... நம்ம கமல்தாசன் அவரோட "உன்னை போல் ஒருவன்" படத்தோட கேசட் ரிலீஸ் பண்ணுனாராம்... டேய் மங்கி... படத்தோட பாட்டு கேசட்டுடா... படம் கேசட் இல்ல... இன்னாடா இம்புட்டு லொள்ளு பேசுத நீயி.....

கேசட் ரிலீஸ் பண்ணப்பறம் அவர பேச சொன்னாய்ங்களா??

ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல...

இன்னா மேட்டருன்னா.. அவரு சொன்னது இதுதாம்பா...
எல்டாம்ஸ் சாலைக்கு என் பெயர் வைப்பது சரி என்று சொன்னால், அது தற்பெருமை... தவறு என்று சொன்னால் அது அகம்பாவம் அப்படின்னு சொல்லிகினாருபா...
பொறவு பேச சொல்ல.. இன்னொரு மேட்டரும் சொன்னாரு...

"உன்னை போல் ஒருவன்" எ வெட்னஸ்டே படத்தோட ரீமேக் இல்ல.. தழுவல்தான்.. அது புதன்கிழமையா இல்லாம, வியாழக்கிழமை / வெள்ளிக்கிழமையா கூட இருக்கலாம்னு சொன்னாருபா...

அப்படியே பொண்ணு சுருது ஜூப்பரா மீஜிக் போட்டுகீது... படம் வந்த பொறவு, "மீஜிக்"ல சுருதிதான் ஒலக நாயகின்னு சொன்னாருபா...

அட்ரா..அட்ரா சக்க..மெய்யாலுமாடா... சர்தானேடா.. அவரு பொண்ண அவரு கூட பாராட்டலேன்னா, எப்டிடா?.. ஆமாம்...அவருக்கு இப்படி எல்லாம் பேசறதுக்கு யாருடா கத்து குடுத்தது... சரி... மேல வேற துபாய் மேட்டரு சொன்னியே... அத்த பத்தி சொல்லுடா...

துபாய்ல நேத்து ராத்தி ராஜா எல்லாம் ஒண்ணு கூடி...

ஆஹா... ஒண்ணு கூடிட்டாய்ங்கடா... ஒண்ணு கூடிட்டாய்ங்க... சரி...இன்னா பேசிக்கினாய்ங்க...

இன்னானா... இனிமேலிக்கு தெனத்துக்கும், இங்க இருக்கற, பூரா இஸ்கூல்லயும் தேசிய கொடி ஏத்தணும்... அப்படியே தேசிய கீதமும் பாடணும்னு சொல்டாய்ங்கப்பு...

நல்ல மேட்டருதானடா... இதுக்கு ஏன் இவ்ளோ ஃபீலிங்கு??

டேய்... நீ தெரிஞ்சுதான் கேக்கறியா... நம்ம ஆளுக்கு நம்ம ஊரு தேசிய கீதமே தெரியாதேடா... அப்புறம்தானடா அவிய்ங்க ஊரு தேசிய கீதம் பாடறது...

இர்றா.... இர்றா... வயக்கம் போல எனிக்கு தல சுத்துது...

ஆமா..இன்னாடா, திடீர்னு அயுவுற...

நம்ம ரெட்டிகாரு எலிகாப்டர் வுயுந்து செத்து பூட்டாரு இல்ல... அவரு செத்துபூட்டாரேனு கவலையில 500 பேருக்கு மேல செத்து பூட்டாய்ங்களாமடா.. அதான் ஒரே ஃபீலிங்கா இருக்கு...

அட பொறம்போக்கு முண்டங்களா.. அவருக்கு போற நேரம் வந்துச்சு... போயிட்டாரு.. அதுக்காக நீயும் போனாக்க, அவரு திருப்பி வந்துட போறாராடா... நீ போயிட்டா, ஒன் குடும்பத்த யாருடா காப்பாத்துவா...இப்போ, அவரு புள்ளையே, மொதலமைச்சர் ஆவறதுக்கு தானேடா ப்ளானிங் பண்ணிகினு கீறாரு.. நீ இன்னாடானா அவருக்காக சாவுற... நீங்க எல்லாம், இத்த எப்போதான் தெரிஞ்சுக்க போறீங்களோ..

சரி... நம்ம கேப்டன் பத்தி ஏதாவது மேட்டர் இருக்காடா??
கீதுபா... ஜோக்கிரில போயி பாரு... மொதல் பகுதி கீது...
அத்த படிச்சுட்டேன்.. இப்போ..ரெண்டாவது பகுதிக்காக நான் வெயிட் பண்றேன்பா...

டேய்... ரெண்டாவ‌து ப‌குதியும் போட்டாச்சு... அப்பால‌, சூப்ப‌ர் ஸ்டார‌ ப‌த்தி கூட‌ அங்க‌ கூவி இருக்கேண்டா... அத்த‌யும் பாரு...

சர்தாம்பா..அப்பாலிக்கா மிச்ச மேட்டரு எல்லாம் சொல்றா... நான் நேர அங்கனதான் போறேன்... ஆமாம்...டாஸ்மாக்தான்..ஒரு ஆஃப் அடிச்சாதான் சுத்தறது நிக்கும்... இன்னாது... இன்னா சுத்துதா... என் தலதாண்டா மட மங்கி பயலே...