சிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் 3

நகரின் முக்கிய சாலையில் உயர்ந்த ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் உள்ளே அமைதியாய் இருந்தது அந்த உணவகம். பசிக்கு என்று வருபவர்கள் ஒருவருமே இல்லை. உலகில் உள்ள அத்தனை காரணத்துக்காகவும் அங்கே வருவார்கள் பசியை தவிர.
நண்பனாய் நண்பனை சந்திக்கும் பொருட்டே கலையும் அங்கே ஆஜர்.
இலக்கில்லாத எந்திரத்தனமான பார்வையில் நேரங்களை எண்ணிக்கொண்டு கொட்டாவி விட்டு உடம்பை முறித்து கொண்டான். நீட்டிய கையில் சட்டேன்ன ஒரு பூபந்து.

ஒ ! பின் இருக்கையில் உள்ள ஒரு பெண்ணின் தலை அது. அவசர அவசரமாய் தன்னை சரி செய்து கொண்டு மனிப்பு கேட்டான். திரும்பிய அந்த முகம் ஒரு பெண்ணினுடையது.

பெண் என்று சொல்வதை விட தேவதை என்று சொல்லலாம். கொள்ளை அழகு. பால் போன்ற நிறம். சென்னை வெயிலுக்கு பஞ்சாபி கூட கருத்து விடுவார், ஆனால் இவள் இத்தனை வெளுப்பா. மஞ்சள் சிகப்பு கலந்த ஒரு கோதுமை நிறம். செதுக்கி வைத்த சிலை போலே மூக்கும் முக அமைப்பும் ,

கலை தன்னை மறந்தான், கவிஞன் ஆனான். மனம் துள்ளி குதித்தது.,

ஸ்பரிசித்த அந்த கணம் மறுபடி மறுபடி மனதில் வந்தது
ஒரு நொடியில் பார்த்த அந்த முகம், மனதை விட்டு நகர மறுத்தது . சற்று நேரம் முன்பு தோன்றிய சோம்பல் சுத்தமாய் இப்போது இல்லை. மேசை மேல் உள்ள தண்ணீர் கூஜா அவள் பிம்பத்தை காண்பித்தது. மதி மயங்கி அதை பார்த்தான். இத்தனை வனப்பா.

நண்பன் வருவது தெரிந்தது, கண்ணன் .

கண்ணனா இது. என் இப்படி கலைந்து கிடக்கிறான். அமரச் செய்து விட்டு ஆழமாய் பார்த்தான். "என்னாச்சுடா!! ஏன் இப்படி இருக்க" ஆதங்கத்தோடு கேட்டான்

சரிந்திருந்த தோள்களில் லேசாய் ஒரு குலுக்கம். அழுகிரான ..."ஹே என்ன ஆச்சு " : "எல்லாமே ஆச்சு, இனி ஒன்னும் பாக்கி இல்லே" பதில் கேட்டு குழம்பினான் கலை. எப்படியும் அவனுக்கு உதவணும் மனதினுள் தீர்மானித்தான்.

"சரி விடு என்ன சாப்பிடுரே"
அடுத்த சில நிமிடங்கள் அமைதியாய் நகர்ந்தன.

"கண்ணா கவலைபடாதே ... நான் இருக்கேன், சொல்லு என்ன உன் பிரச்சினை"
அமைதியான கண்ணன் தீர்க்கமாய் சொன்ன பதிலில் அதிர்ந்தான் கலை.

"நான் ஒரு கொலை செய்ய போறேன் "


தொடரும் .....

No comments: