பாலைவனத்தை போர்த்திய பனிப்போர்வை








அமீரகம் (யு.ஏ.ஈ) என்பது ஏழு ஊர்களை (அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, புஜைரா, உம் அல் குவைன்) உள்ளடக்கிய ஒரு சிறு நாடு. ஓமன் பக்கத்து நாடு. பாலைவனம் என்பதால், இங்கு குளிரும் அதிகம், வெயிலும் அதிகம்.
எப்போதும் இல்லாத அளவு இந்த வருடம், அமீரகத்தின் ஒரு பகுதியான ராஸ் அல் கைமாவில் நேற்று வெப்பநிலை -3 டிகிரீ என்ற அளவில் இருந்தது. அங்குள்ள ஜெபெல் ரைஸ் என்ற மலை, பூமியிலிருந்து 5,700 அடி உயரத்தில் உள்ளது. அந்த மலையை, பனி, போர்வை போல் போர்த்தி, சுவிஸ் நாட்டை நினைவு படுத்தும் விதமாக காட்சி தந்தது.

ஜெபெல் ரைஸ் மலையை பனி 10 cm அளவு போர்த்தி உள்ள காட்சியை காண கண் கோடி வேண்டும். நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

இந்த காட்சியை பார்த்தவர்கள் நிச்சயமாக, பாலைவனம் என்பதை, சோலைவனம் என்றோ அல்லது பனிமலை என்றோ தான் சொல்வார்கள்.
இதற்கு முன் டிசம்பர் மாதம் 28, 2004 அன்று தான் இதுபோன்ற ஒரு பனிப்பொழிவும், தட்பவெப்பமும் நிலவியது என்று அங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள். ராஸ் அல் கைமாவில் நிலவும் இந்த இயற்கை சூழலை ஒட்டி, அங்குள்ள அரசாங்கம், ஒரு மலைவாசஸ்தலம் ஹோட்டல் மற்றும், பனிச்சறுக்கு அரங்கமும் அமைக்க யோசித்து வருகிறது. இது இங்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கவரும் விதமாக இருக்கும் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி : கல்ப் நியூஸ் - புகைப்படங்கள்

No comments: