சிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் இரண்டு

பாண்ட் பாக்கெட்டில் கை விட்டு, உள்ளே துருத்திக்கொண்டு இருந்ததை தேடி வெளியே எடுத்தான். பளபளவென மின்னிய அதை ஆசையோடு தடவி கொடுத்தான். அது, அவன் புதியதாக வாங்கி இருக்கும் இரு சக்கர வண்டியின் சாவி. கலைந்த தலைமுடியை ஒரு கையால் தள்ளியவாறு, வீட்டின் வெளியே வந்து தன் இரு சக்கர வாகனத்தை எடுத்து, மெயின் ரோட்டை பிடித்து, எந்த ஒரு சுவாரசியமும் இன்றி, இலக்கின்றி செலுத்தினான். எங்கே போகிறோம், எதற்காக போகிறோம், வண்டியில் பெட்ரோல் உள்ளதா இல்லையா என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் வண்டி போய் கொண்டே இருந்தது.

அப்போது .........

பக்கவாட்டின் குறுக்கு சந்தில் இருந்து அசுர வேகத்தில் வந்த லாரியின் க்ரீச் என்று கத்திய (கதறிய) பிரேக் ஓசை தான், அவன் வண்டியையும் பிரேக் போட வைத்தது. ஒரு நிமிடம் ஆடித்தான் போய் விட்டான். இது என்ன ??? உயிர் பயமோ?? என்னடா வாழ்க்கை ?? முழுக்கை சட்டை முழக்க நனைந்து அவனின் பரிதாபமான தோற்றத்தை மேலும் பரிதாபமாக்கியது.

சாலையில் போவோர் வருவோர், வருவோர் போவோர் எல்லோரும் ஆளாளுக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பிக்க, அவன் எதையுமே காதில் வாங்காமல், வண்டியை நகர்த்தி, மறுபடியும் தன் பயணத்தை தொடர்ந்தான். கூடி இருந்தவர்கள், என்ன இவன், இன்னும் கொஞ்சம் இருந்தா உயிரே போய் இருக்கும், இப்படி கொஞ்சம் கவலைப்படாம போறானே என்று கூறியது, அவன் காதில், காற்றை கிழித்து கொண்டு விழுந்தது.......

ஏன் இவ்ளோ கொழப்பமா இருக்கோம் .... இதுக்கு முன்னாடி, இப்படி இருந்ததே இல்லையே ........ ஏன் இப்போ மட்டும் இப்படி ??? கொஞ்சம் யோசித்து பார்த்ததில், ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்த அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது .......

ச்சே, அந்த நிகழ்ச்சி மட்டும் அன்னிக்கி நடக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கை கூட மத்தவங்கள போல சாதாரணமா இருந்திருக்கும். ... அன்னிக்கே யோசிச்சு இருக்கணும் .... இப்போ எல்லாம் கை மீறி போச்சு .........

அப்படி அவனோட வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த நிகழ்ச்சி எப்போது, எப்படி நடந்தது என்று யோசித்தான். நன்கு மூச்சை இழுத்து விட்டு சுவாசித்தான். மூச்சை இழுத்து சுவாசித்ததில், புத்தி கூர்மை அடைய, ஐம்புலன்களும் விழித்தது போன்று உணர்ந்தான். ஒ, அன்னிக்கி மட்டும் அந்த நண்பனை பார்க்க, அந்த காபி ஷாப்புக்கு போனது ஞாபகம் வந்தது ..........

அன்று .... அங்கே .......
(தொடரும்)

No comments: