இன்றைய செய்திகள்

மாதவன் நாயர், அபினவ் பிந்திரவுக்கு பத்ம விபூஷன் :

இஸ்ரோ தலைவர் மாதவன் நாயருக்கு பத்ம விருதுகளில் முதல் நிலை விருதான பத்மவிபூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரைத் தவிர பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலும் 9 நிபுணர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறைக்கான பிரிவில், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பத்ம விபூஷன் வழங்கப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------
டெல்லி: 2009ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கருக்கு பத்ம விபூஷன் விருதும், ஜெயகாந்தன் உள்ளிட்டோருக்கு பத்மபூஷனும், நடிகர் விவேக் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மவிபூஷன் விருது பெற்றோர் ..

டாக்டர் அனில் ககோத்கர், டாக்டர் சந்திரிகா பிரசாத் ஸ்ரீவத்சவா, பேராசிரியர் டி.பி.சட்டோபாத்யாயா, கோவிந்த் நாராயண், பேராசிரியர் ஜஸ்பீர் சிங் பஜாஜ், டாக்டர் புருஷோத்தம் லால், சுந்தர்லால் பகுகுணா, மாதவன் நாயர், சகோதரி நிர்மலா, டாக்டர் ஏ.எஸ். கங்குலி.

பத்மபூஷன் விருது பெற்றோர் ..

வி.பி.தனஞ்செயன், வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, ஜெயகாந்தன், காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி, சரோஜினி வரதப்பன், அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட 30 பேர்.

பத்மஸ்ரீ விருது பெற்றோர் ..

நடிகர்கள் விவேக், திலகன், அக்ஷய் குமார், நடிகை ஐஸ்வர்யா ராய், பாடகி அருணா சாய்ராம், ஐராவதம் மகாதேவன், டாக்டர் சுப்ரமணியம் கிருஷ்ணசாமி, உதித் நாராயணன், பி.ஆர். கிருஷ்ணகுமார், டாக்டர் சிவராமன், டாக்டர் ஷேக் காதர் நூர்தின், தணிகாச்சலம் சடகோபன், ஹர்பஜன் சிங், மகேந்திர சிங் டோணி, பங்கஜ் அத்வானி, ஆறுமுகம் சக்திவேல் உள்ளிட்ட 93 பேர்.
------------------------------------------------------------------------------------------------

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆனால், இந்த நேரத்தில், பல துறைகளில் பலப்பல சாதனைகளை நிகழ்த்திய எத்தனையோ பேருக்கு இன்னும் எந்த விருதும் கிடைக்க வில்லை என்பது தான் கசப்பான உண்மை. நம் நாட்டில், விருது வாங்க கூட, பிரதமர், முதல்வர்களின் சிபாரிசு வேண்டியிருக்கிறது .

No comments: