அரசியலைவிட்டு கருணாநிதி விலகுவதே நல்லது - ஜெ


அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக் கொள்வது தான் கருணாநிதிக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயல்.

இதே போன்று திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை. ஆனால், கருணாநிதியால் குறிப்பிடப்படும் மகாமகம் சம்பவம் (ஜெயலலிதாவும், சசிகலாவும் குளத்தில் புனித நீராடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் பலியானது) தற்செயலாக நடைபெற்ற ஒரு விபத்து.

(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)


(அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருப்பவர்களே, அண்ணன் சாகவும் மாட்டான், திண்ணை காலியும் ஆகாது என்று "தல" ஒரு அறிக்கை விட்டார்.

பின் பாராளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இரு கட்சி தலைவர்களும் அறிக்கை போரை ஆரம்பித்து விட்டனர் (அக்கப்போர் என்பதுதான் சரியான வார்த்தை).

இனி தமிழக மக்கள் தினமும் இதுபோன்றதொரு அறிக்கை காமெடியை பார்க்கத்தான் போகிறார்கள்).
("தல"க்கு தையல் பிரிச்ச உடனே ஜெ.ஜெ. கொடுத்த முதல் ஷாக் இது. "தல" இது ஆரம்பம்தான், இன்னும் இருக்கு, ஷாக்கோ ஷாக்கு)

No comments: