35 நாள் சிகிச்சைக்கு பின் கருணாநிதி வீடு திரும்பினார்








முதுகு வலி காரணமாக, ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் கருணாநிதி, நேற்று வீடு திரும்பினார்.

கடந்த மாதம் இறுதியில் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும், வலி தொடர்ந்ததால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அன்னார், விரைவில் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் குறைந்தது இன்னும் ஒரு மாதமாவது ஓய்வில் இருக்கவேண்டும் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழு தெரிவித்துள்ளது.
அவர் விரைவில் குணமடைந்து, பணிக்கு திரும்ப அந்த ஆண்டவனை வேண்டுவோம். ( தல கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை).

No comments: