
ஹாங்...இது ஈசியான கேள்விதான். அந்த கோப்பையிலே தான் நம் குடியிருப்பு, குடுத்தா குடிச்சுருவோம், குடுக்கலேன்னா எப்படா கிடைக்கும்னு ஏங்குவோம்.
அவ்வளவு தானே... அப்புறமா குடிக்கிறதில என்ன வித்தியாசம்ன்னு
கேட்டீங்கன்னா...., நம்ம வீட்டுல குடிச்சா நல்லா இருக்காது, அடுத்த
வீட்டுல குடுத்தா சூப்பரா இருக்கும் அதுவா. வேற என்ன...ஆங்...
வித்தியாசம்னா "TEA" ல ஒரு "E" இருக்கும். "COFFEE"ல 2 "E" இருக்கும். டீ
காப்பி குடிச்சுட்டு கீழே வைச்சா கோப்பைல நெறைய ஈ இருக்கும். அதுதான.
ஹீ...ஹீ...
வாசக தோழமையே நம்மை சுறுசுறுப்பாக்க உற்சாக பானம் தினம் குடிக்கிறோம்.
அழுத்தம் மிகுந்த இன்றைய வாழ்வில் நம்மை இலகுவாக்கவும், நம் வாழ்வை
இனிமையாக்கவும் எங்களின் “எடக்கு மடக்கு” எழுத்துக்கள் உதவுகிறது என
தங்களின் பின்னூட்டம் பார்த்து மிக்க நிறைவாய் உள்ளது. தங்களின் மேலான
தொடர் ஆதரவு வேண்டி தொடர்கிறோம்.
அறிவியல் ஆராய்ச்சிகள் நம்மை பண்படுத்தி முன்னேற்றிய விந்தையை அறிந்து கொள்ள “ஆர்யபட்டா” எனும் நம்மாட்டவரை தெரிவோமே. ”ஆர்யப்பட்டா” யார். அவர் இந்தியர் அதில் எந்த சந்தேகம் இல்லை. நோட் த நேம் யூவர் ஆனர், ஆரிய... அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ”குசுமபுரா” தான் இன்றைய பாட்னா எனவே அவர் வட நாட்டவர் எனவும்,
இல்லை அவர் ”குசுமபுரா” சென்றது வெறும் படிப்புக்காகத்தான், இல்லாமல் சார்ந்திருக்கும் இடம் பாருங்கள் அவர் நம்ம கேரளத்து சேட்டன் தான், அவர் கப்ப கிழங்கை ரசித்து, ருசித்து சாப்பிட்டதை கண்ணால் பார்த்தேன் எனவும் சிலர் விவாதிப்பது உண்டு. அவர் யார் எங்கு பிறந்தார் என தெளிவான தகவல்கள் நம்மிடையே இல்லை. அவர் எழுதிய

புத்தகங்களில் கூட பெரும்பாலானவை அழிந்து போயின. கிடைத்த ஒரு சில புத்தகங்களை வைத்து பார்க்கும் போது ஆச்சரியம் நம்மை வாயடைக்க வைக்கிறது.
நம்மை பொறுத்தவரை அவர் ஒரு மாபெரும் சாதனையாளர், இந்தியர். ஒரு வேளை எந்த
மாநிலம் என சொல்லாமல் தேசிய அடையாளம் கண்டு, இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாய் வரையறுக்கப் பட வேண்டியவரோ. கண்டிப்பாக அப்படி தான்..
அவரது சாதனையின் விழுதுகள் வானியல் மற்றும் கணிதம். அவர் வாழ்ந்த காலம் மிக தொன்மையானது. அந்த காலகட்டத்தில் வாழ்க்கை ஒரு சிறிய வட்டத்தில் சுழன்று கொண்டு இருந்திருக்க வேண்டும். சூரியன் கிழக்கில் தோன்றினால் விடியல், கப்புனு எந்திரிச்சுக்கோ, மேற்கே மறைந்தால் இரவு, கபால்னு தூங்கிக்கோ. மலை வாயில சூரியன் வந்தால் மனுசன் வாயில சோறு என வெறும் நேரத்துக்காக மட்டுமே அண்ணாந்து வானத்தை பார்த்தவர்கள் மத்தியில் இவரது பார்வை மிக மிக வித்தியாசமாயிருந்தது.
தனித்திருந்து பூமியையும் கோளங்களையும் பார்த்து யோசித்து அதனை ஆய்வு செய்து அறிவித்தார். இன்றைய கால ஆராய்ச்சிக்கும் அந்த காலத்து
ஆராய்சிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. இன்று உபகரணங்கள், ஆய்வு
அறிக்கைகள் என ஒன்றில் இரண்டு பார்த்து விட்டு "கன்ஃபர்ம் கணபதி" ஆன பின்னாடிதான் நம் கண்டுபிடிப்பை அறிவிக்க வேண்டும். ஆனால், அன்றைய காலத்தில் கொஞ்சம் பரிசோதனையும் மிச்சம் மனத் தீர்மானங்களுமே. ஒரு தியான நிலையில் என்ன எப்படி என கேள்வி கேட்டு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
அப்படி உயரிய தொழில் நுட்ப உதவி இல்லாமலே, பூமி, கோளங்கள் அதன் முட்டை வடிவ சுற்றுப்பாதை எல்லாம் மிக சரியாக கணித்து சொல்லியவர் இவர். அவர் எழுதிய “ஆர்யபட்டியா” எனும் வானியல் நூலே நம் இன்றைய எல்லா கண்டுபிடிப்புகளின் தொடக்கம்.
திரிகோணமித்திரியின் தொடக்கமும், பூஜ்யம் எனும் அற்புத ஆச்சரியத்தின்
கருக்களும் இவரது படைப்புகளின் பிரதானம். கேளுங்களேன், 1609 C.E.கெப்லர்
ஆராய்ச்சி செய்து, தனது முதல் கோளங்களின் விதி எழுதும் 1000 ஆண்டுகளுக்கு முன் பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டம் எனச் சொன்னவர் ஆர்யபட்டா.
வருசம் தொடங்கினதும் ஒரு காலண்டர கம்புயூட்டரில் அடிக்கவே மூச்சு
வாங்குது என சலித்துக் கொள்ளும் நமக்கு, வருடங்களை குறிக்க அறிஞர்கள் திக்கித் திணறி திக்குமுக்காடி இருந்த கால கட்டத்தில் 1000 வருடங்களுக்கு முன்னர் எளிமையாய் யுகங்கள் வருடங்கள் என வரையறுத்த இவரின் அறிவும் ஆற்றலும் அதிசயமே.
அவருடைய பெரும் பணியான,ஆர்யபட்டீய, கணிதம் மற்றும் வானவியலுக்கான ஒரு பெரிய நூற்சுருக்கம், இந்திய கணித இலக்கியத்தில் பல முறை பயன்படுத்தப்பட்டும், மேலும் நவீன காலத்திலும் பிழைத்துக் கொண்டு விளங்குகிறது. ஆர்யபட்டீயவின் கணித பாகம் அரித்மெடிக், அட்சரகணிதம், தல கோணவியல் மற்றும் உருண்ட கோணவியல் அடங்கியது. மேலும் அவற்றில் தொடரும் பின்னங்கள், இருபடிச்சமன்பாடு, அடுக்குத் தொடர்களின் கூட்டும் முறை மற்றும் சைன் கோணங்களுக்கான அட்டவணை அடங்கும்.
என்றாலும் அவர் ஒரு தவறான செய்தி சொன்னார். ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா. அது, பூமி தன் அச்சினை ஒட்டி சுழன்று வருவதாக

நம்ம அறிவுஜீவி அப்பீட் அவுன்ஸ் மணி சொல்றார் ’’சொல்றாங்களே தவிர பூமி சுத்துற மாதிரியே தெரியல, அப்படியே தான் இருக்கு. என்ன ஒரு நாலு கிளாஸ் ஆங்... குடிச்சா
லேசா சுத்தும் போல தெரியுது.
யோசிக்கும் போது ஆர்யப்பட்டாவுக்கு எப்படியோ பூமி சுழல்வது தெரிகிறது,
பூவியீர்ப்பு விசையும் அவருக்கு தெரிகிறது. என்வே ஒண்ணும் ஒண்ணும் இரண்டு
என கணக்கிட்டு, அது சுழல்வதற்கு தன் மைய அச்சு என நம்பினார்.
வாசகத் தோழமை அறிந்திருக்கும் ஒரு சுவாரசியமான விசயம் இங்கே சொல்ல வேண்டும். இறைவன் இந்த உலகின் அத்தனை உயிரினங்களையும் படைக்க பயன்படுத்தும் நம்பர் π. என்றும் இறைவனின் மேஜிக்கல் நம்பர் என
நம்பப்படுவது π. அப்படின்னா அதென்னங்க புரியல என்பவருக்கு இதோ.
ஒரு தேன் கூட்டின் மொத்தம் உள்ள ஈக்களை ஆண் பெண் என தனித்தனியாய் கூட்டி, பெண் ஆண்களின் விகிதாச்சாரம் π. சூரியகாந்தி பூக்களின் விதை வட்ட்த்தின் அளவு π.
ஏன் மனிதனின் உச்சி முதல் கால் வரை உள்ள அளவை உச்சி முதல்
தொப்புள் வரை உள்ளதில் கழித்தால் π. பை த பை πன் மதிப்பை தோராயமாக
மதிப்பிட்டார் நம்மவர் அன்றே, மேலும் பைπ என்பது ஒரு விகிதமுறா எண் என ஆர்யபட்டீயம் (gaṇitapāda 10)இரண்டாம் பாகத்தில், அவர் எழுதுகிறார் :
'' "நூறோடு நாலைக் கூட்டு , அதை எட்டால் பெருக்கு மேலும் பிறகு 62,000
த்தை அதனுடன் கூட்டு. இந்த விதி முறையில் 20000 விட்டம் கொண்ட ஒரு
வட்டத்தின் சுற்றளவை கண்டறியலாம்."
அவரது பிரத்யேக பாணி, கவிதை வரியில் எளிதில் மனதில் இருத்த என பாடல் வரி

பின் வந்த சந்த்திக்கு முழுதும் புரியவில்லை. அவரது சீடர் பாஸ்கர் எழுதிய
உரைநடை விளக்கமும் அவரது ஒரிஜினலும் பிரமாதமாய் அர்த்தம் தருகின்றன.
அவரது காலத்திலேயே, அவரது படைப்புக்கள் அரேபியாவில் மொழி
பெயர்க்கப்பட்டு, மிகவும் பிரபலமானது.
ஆர்யபட்டாவின் கணிப்பின் படி புவியின் பரி்தி் அல்லது சுற்றளவு 39,968.0582 கிலோ மீட்டர்கள் ஆக கணக்கிடப்பட்டது, இது உண்மையான நீளமான 40,075.0167 கிலோ மீட்டர்களை விட 0.2% விழுக்காடு மட்டுமே குறைவாக இருந்தது.
ஆர்யப்பட்டாவின் வாழ்வு நமக்கு டாக்குமெண்டேஷனின் அவசியத்தை
உணர்த்துகிறது. ஒரு வேளை படிக்க எளிதாய் இருக்கட்டும் மனனம் செய்ய
ஈசியாய் இருக்கட்டும் என கவிதை வடிவில் மட்டும் எழுதியது தவறோ.
விளக்கமாய் ஆழமாயும் அவர் சொல்லி யிருக்க வேண்டுமோ...
ஆர்யப்பட்டாவின் வாழ்வு நமக்கு தரும் பாடம், விசால மனது. நான் என் ஊரின் ஒரு துளி, என் ஊர் என் நாட்டின் ஒரு துளி, என் நாடு இப்பூமியில் ஒரு துளி, அவரை போல் நாட்களாய் வாரங்களாய் வானத்தை பார்க்க வேண்டாம்.
சில நிமிடமாவது நாம் வானைப் பார்க்கலாமே. இரவில் ஒரு 30 நிமிடம் வானை பார்க்கணுமோ. உலகம் எத்தனை பெரிது என புரியுமோ, நாம் பெரிதாய் கவலைப்பட்டு, அலட்டிக் கொண்டு இருக்கும் பிரச்சனை எத்தனை சிறியது என்பது புரியுமோ.
உலகம் மிகப் பெரியது, வாழ்வும் நமது திட்டங்களும் நம்மை கலவரப்படுத்தாமல் பாதுகாப்போம்.
மாய்ந்து மாய்ந்து நம்மை செப்பனிட முயல்வதோடு, உலகையும் அதில் வாழும் ஜீவராசியையும் நேசிப்போம்.
(லாரன்ஸ் / ஆர்.கோபி)
தொடரும்.....