நந்த வனத்துக்குள்ளே கலவரம்... பூக்களுக்குள்ளே போட்டி ...

மல்லிகை மணத்தின் மயக்கத்திலே -

மல்லி புகழ் மதுரைக்கார பண்டியனைப்போலவே நீங்களும் ஒரு தலை பட்சமாக தீர்ப்பு சொல்லி விட்டீர்கள்....

உங்களால் -

நந்த வனத்துக்குள்ளே கலவரம்... பூக்களுக்குள்ளே போட்டி ...

பிச்சிப்பூ, குறிஞ்சி, மாம்பூ, ஆவாரம்பூ என எல்லா மலர்களும் ஆளுக்கொரு பாடல் பட்டியலோடு போட்டியில் குதித்துள்ளன.

மலர்களின் ராணி ரோஜா மௌனமாக பரிகசிக்கிறது உங்களைப்பார்த்து -

ஒரே ஒரு பழுப்பு வெள்ளை நிறத்தில் பூக்கும் குட்டி மல்லிகை ரசிகரே !

பல வண்ணங்களில் பெரிதாகப்பூக்கும் என்னை மறந்ததேன் ?

கவிஞர்களின் மனங்களில் கொடி கட்டிப்பறக்கும் எனது வெற்றி பாடல்களில் சில இதோ :

* ரோஜா மலரே ராஜ குமரி

* ரோஜாவை தாலாட்டும் தென்றல்

* காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

* ராசாவே உன்னை நம்பி ஒரு ரோசாப்பூ

* யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ

* ரோஜா ரோஜா (காதலர் தினம்)

* ... துடிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

இந்த பட்டியல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ?

ஹ ஹா ஹ ஹா சபாஷ் ! சரியான போட்டி !!

1 comment:

Anonymous said...

sabhah.... super comedy

charles
Dubai